Friday, September 25, 2009

ஒரு இளைய தலைவனின் வேண்டுகோள்(கொல்)

கல் தோன்றி,மண் தோன்றி, அதுக்குமுன் தோன்றிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் இந்த பொன்னான மேடையில் சொல்லுவது என்னவென்றால்(யாருப்பா அது மாலைய அப்புறமா போடுப்பா), ஒரு பதிவு எழுதுவது என்றால் அதுக்கு நேரம் வேண்டும் முக்கியமாக சுயமாக சிந்தித்து எழுத மூளை வேண்டும், தப்பில்லாமல் எழுத அறிவு வேண்டும், எனக்கு இறுதியாக சொன்ன இரண்டும் சுத்தமாக கிடையாது என்பதால் பதிவு எழுதுவது வீட பின்னூட்டம் இட மிகவும் பிடித்துள்ளது.(கொஞ்சம் பொறுங்க சோடா குடிச்சுகிறன்,அப்புறமா கிடைக்காது)பதிவு எழுத ஒரு விசயத்தை நல்லா படிக்கனும், அதைப் பற்றி சிந்திக்கனும், பின் நடுனிலையாக உக்காந்து பொறுமையாக ஏழுத வேண்டும், மேல சொன்னவற்றைப் போல செய்ய எனக்கு அறிவே பொறுமையோ இல்லாதால், அடுத்தவர்கள் இதை செய்தால் அதை கும்மியடிக்க வசதியாக பின்னூட்டம் இடலாம். ஆகவே நான் பின்னூட்டம் என்ற பெயரில் பின் குத்து அல்லது கும்மியடிக்க வசதியாக தங்களின் லிங்க் தாருங்கள். பதிவர்களிடம் உங்களின் பெயர் மற்றும் பதிவுகளின் பெயர்களை குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் செய்தால் உங்களை உங்க வூட்டு பிள்ளையாக, நாயாக, நரியாக பின் தொடர வசதியாக இருக்கும். அகவே எனதருமை பதிவுச் சகோதரகளே தங்களின் மேலான பதிவுப் பெயர்களையும் தங்களின் பெயர்களையும் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறு தங்களை வேண்டி, விரும்பி, மண்டியிட்டு தண்டாலிட்டு குண்டாலிட்டு கேட்டுக்கொள்கின்றேன்(கொல்கின்றேன்).
வாழ்க சந்திரன்,சூரியன் வளர்க என் நாமம்.
தங்களின் அன்புத்தம்பி
பித்தன்.

5 comments:

  1. தெரிஞ்ச பதிவுகளுக்கு போங்க!
    அங்க இருக்குற பின்னூட்டத்தில் எது பிடிச்சிருக்கோ அதுல புரோபைல் போய் அவுங்க ப்ளாக்கை பிடிச்சி பாலோயர் ஆகுங்க!

    ReplyDelete
  2. என்ன புலம்பல் இது ?ஒண்டும் விளங்கேல்ல பித்தன்.

    ReplyDelete
  3. அனுப்பிட்டு???
    அப்புறம் அது சொந்த செலவில சூனியம் ஆயிடுமே....
    ஆனா பதிவெளுதுரதுல உள்ள கஷ்டத்த நல்லா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  4. / / என்ன புலம்பல் இது ?ஒண்டும் விளங்கேல்ல பித்தன். //


    எனக்கு தெரியாத பதிவுலக நண்பர்களிடம் அவர்களின் பதிவு லிங்க் ஜ டி கேக்கின்றேன்

    ReplyDelete
  5. // அனுப்பிட்டு???
    அப்புறம் அது சொந்த செலவில சூனியம் ஆயிடுமே.... //

    ஆகா ஆகா நான் அந்த அளவுக்கு தாக்கர ஆள் இல்ல எதோ கொஞ்சம் ரம்பம் போடுவம் அவ்வளவுதான்.

    நன்றி வால், ஹேமா மற்றும் சுசி அவர்களுக்கு.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.