Friday, January 29, 2010

கடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி

யார் கடவுள்? அவர் கறுப்பா சிவப்பா? திராவிடனா, ஆரியனா? நெட்டையா,குட்டையா? எப்படி இருப்பார். எங்கு இருப்பார் என்பது அனைவரும் அறியா ஒன்று. அவரவர்கள் வழியில் அவரவர்கள் கடவுளை உருவாக்கி, அதற்க்கு பேரும்,ஊரும் தந்து,இருக்க இடமும் தந்து, அவருக்கு ஒரு பிளாஸ் பேக் கதையும் சொல்லி,வழிபாட்டு முறைகளையும் உருவாக்கினார்கள். இது எல்லாம் நம் முன்னேர்களாலும், பெரியேர்களாலும், நம்மை நல்வழிப்படுத்தவும், முறையான, ஒழுக்கமான வாழ்வுக்கும், மன அமைதிக்கும் வழிகாட்டுவையாக உருவாக்கினார்கள். அனால் இது போன்ற முன்னேர்கள் உருவாக்கிய அனைத்தும், அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல்,அதன் ஆழத்தை அல்லது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் வெறும் சாரத்தை அல்லது சம்பிரதாயத்தை மட்டும் இன்று பிடித்துக் கொண்டு கொண்டாடுகின்றார்கள்.இதுக்கு ஒரு குட்டி கதை சொல்லலாம்.

ஒரு ஜென் ஞானி தன் சிஷ்யர்களுடன் தினமும் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.அவர் ஒரு பூனை வளர்த்து வந்தார்.அது தியானம் செய்யும் போது மடியில் ஏறி விளையாடி, தியானத்தைக் கலைக்கும். ஆதலால் ஞானி தினமும் தியானம் செய்யும் போது, அந்தப் பூனையை கம்பத்தில் கட்டி வைத்து விட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். ஒரு நாள் ஜென் ஞானியும், பூனையும் இறந்து விட்டார்கள். அப்போது மூத்த சிஷ்யனின் தலைமையில் தியானம் செய்ய தொடங்கினார்கள். அப்போது அவர் சொன்னார், "தியானம் செய்யும் முன்னர் ஒரு பூனையைப் பிடித்து கம்பத்தில் கட்ட வேண்டும்,போய் ஒரு பூனை பிடித்து வாருங்கள்" என்று. இப்படித்தான் ஒரு சவுகரியத்துக்காக செய்த விசயம் சம்பிரதாயமாக மாறிவிட்டது. நம்ம ஆளுக பூனையை கம்பத்தில் கட்டுவதைக் கூட ஒரு கதை சொல்லி, அதைக் கட்டுவதுக்கு டேக்கன் போட்டுக் காசு பார்த்து விடுவார்கள். நாம் கடைப்பிடிக்கும் வழக்கம் எல்லாம் இது போலத்தான். முன் காலத்தில் பொங்கலின் போது வீட்டை அலங்கரிக்க மஞ்சள் மலர்களையும்,இலைகளையும் வைத்த வழக்கம், இப்போது காப்பு கட்டுதல் சம்பிரதாயமாக மாறிவிட்டது.

கடவுள் என்ற பெயரிலேயே நாம் உட்பொருளை அறிய முடியும். கட வுள் அதாவது உள் மறைந்து இருப்பவன் என்று அர்த்தம். அதாவது நம்முள் மறைந்து இருப்பவன். கடவுள் இங்கும், அங்கும்,எங்கும் வியாபித்து,உருவாய்,அருவாய்,திருவாய் ஆக எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள். இந்த பிரபஞ்சம் முழுதும் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள்.உயிர் சக்தி,உணவு சக்தி,மூல சக்திஎன்று நம்முள்ளும்,ஈர்ப்பு சக்தி,மின் காந்த சக்தி என்று பிரபஞ்சத்திலும் எல்லாம் சக்தி மயம். பிரானன் என்னும் சக்தி இருந்தால்தான் மனிதன் இல்லை என்றால் பிணம், அது போல கடவுளும் சக்தி இருந்தால் தான் கடவுள், இல்லை என்றால் கல்தான். இந்த சக்தியை முறைப் படுத்தி ஓர் இடத்தில் குவித்து, நம்முள் குவிக்கும் ஆன்மீக சக்தி மையம் தான் கோவில். பிரபஞ்ச சக்தியை உள் இழுத்து வாங்கி தன்னுள் பெருக்கி, நமக்கு அளிக்கும் இடம்தான் கோவில். அது போல சக்திகளை வசிகரிக்க செய்ய முறைப்படி உருவாக்கிய சம்பிரதாயம் தான் கோவில் கட்டுமான சாஸ்த்திரங்களும் கோபுரங்களும். நாம் கோவிலாகக் கட்டுவேம்.அதே முக்கோண பரிணாமத்தை எகிப்தியர்கள் பிரமீடாய் கட்டினார்கள். இது மட்டும் இல்லாமல் மக்கள் கூட்டமாய் வழிபடும்(பள்ளிவாசல்,தேவாலயங்கள்) பஜன், மற்றும் தியானம் செய்யும் இடங்களும் சக்தி மையங்களே. ஏன் என்றால் எண்ணற்ற மனிதர்களின் எண்ண அலைகள் அங்கும் ஒரு சக்தி மையத்தை உருவாக்கின்றன.

இப்படி கோவிலைக் கட்டிய மனிதன், பின்னால் அந்தக் கோவிலில் ஒரு சக்திக்கு உருவகமும் கொடுத்தார். அதுதான் கடவுள் சிலை. இந்த சிலை சக்தி மண்டலத்தினுள் இருக்கும் சக்தியை தன்னுள் கிரகித்து வெளிப்படுத்துவதால், நாம் பிரார்த்தனைகள் மூலம் அவரில் இருந்து சக்தியை நாம் கிரகிக்கின்றேம். கருட கம்பமும், மூல ஸ்தானம் மட்டுமே சக்தி மையங்கள். ஏன் என்றால் கருட கம்பம் அடியில் மணிகளும்,பென்னும் போட்டு சக்தியை கிரகிக்கும். மூல ஸ்தானம் முக்கோண கோபுரத்தின் அடியில் இருப்பதால் அங்கும் பெரும் சக்தி கிரகிகப் பட்டுச் சக்தி மையமாக இருக்கும். இந்த இரண்டு இடங்களிலும் சக்தி அலை அல்லது வைபரேஷன் அதிகமா இருக்கும். ஆனால் தஞ்சையில் இருக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நுழையும் போதே நமது மனம் வைபரேஷனை உணரத் தொடங்கும். இவை சக்தி வாய்ந்த கோவில்கள் என்று அழைக்கப் படும்.மன்னர்கள் தங்கள் வெற்றிகளைக் காட்டவும்,தங்கள் வளத்தைக் காட்டவும் பிரமாண்டமாய்,அடம்பரமாய்க் கட்டிய கோவில்களில் இந்த சக்தி மையம் இருக்காது அல்லது அந்த பிரமாண்ட பிரமிப்பில் நம்மால் உணர முடியாது.உதாரனம் தஞ்சை பெரிய கோவில்.அங்கு நான் பிரமாதமாய் ஒரு சக்தியும் உணரவில்லை.

இப்படி சக்தி மையமாக மன அமைதிக்காக உருவாக்கப் பட்ட கோவில்கள் பின்னாளில் சமுதாய முக்கிய அம்சமாக மாறி, இந்நாளில் வியபார தலங்களாக மாறியது. இதிலும் அதன் தத்துவத்தை உணராமல் சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, வெறும் வழிபாடு இடமாகவும்,கொடுக்கல் வாங்கல் வியபார ஸ்தலமாகவும் மாறிப் போனது கொடுமை. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்து கடவுள் எப்படி உருவானார். கோவில்கள் எப்படி கெட்டன என்பதையும் பார்ப்போம். நன்றி.

டிஸ்கி: நான் இதுதான் கடவுள் என்றோ அல்லது இப்படித்தான் வந்தது என்றோ சொல்ல வரவில்லை. இதுதான் கடவுள், இப்படித்தான் வந்துருக்கலாம் என்ற எனது கருத்துக்களை சொல்கின்றேன் அவ்வளவுதான்.மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் கூறவும் ஏற்றுக் கொள்பவையாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றேன். கடவுள் இருக்காரா எங்க காட்டு, இப்பக் காட்டு என்பது போன்ற வறட்டு வாதங்களைத் தயவு செய்து தவிர்க்கவும். நன்றி.

Thursday, January 28, 2010

பதிவர் வீட்டு ஊடலும், கூடலும்

(எச்சரிக்கை இது ஒரு கிளு கிளு கதை)

இரவு மணி பத்தரை, பதிவர் கோணாங்கிராயர் தன் மடிக்கணினியில் உக்காந்து பதிவு போட்டுக் கொண்டுருந்தார். சமையல் அறையில் அவரின் மனைவி பாத்திரங்களை அலம்புகிறேன் பேர்வழி என்று கடமுட என்று உருட்டிச் சத்தம் செய்தார். அவர் பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறையில் அவரின் கோபம் புலப்பட்டது. பின்னர் ஹாலுக்கு வந்தவர் பதிவரிடம்,

மனைவி :என்னங்க எவ்வளவு நேரமா நான் ஒருத்தி மட்டும் வேலை செய்வது? கொஞ்சம் கூடமாட ஹெல்ப் பண்ணினால் என்ன குறைந்தா போயிடுவிங்க?

பதிவர்: கொஞ்சம் பொறு நான் இந்த பதிவை முடித்து விடுகின்றேன்.

மனைவி(கோபத்துடன்): ஆமா புடலங்காப் பதிவு. எப்ப பார்த்தாலும் இதை வைச்சுக்கிட்டு உக்காந்துருங்க,நான் ஒருத்தி எவ்வளவு வேலை செய்வது?

பதிவர்: இதே இப்ப முடிச்சுருவேன்.

மனைவி: வர வர உங்களுக்கு என் மேல பாசமே இல்லை, எப்ப பார்த்தாலும் இதை வைத்துக் கொண்டு குத்துக்கல்லு மாதிரி இருக்கிங்க. முதல் எல்லாம் எவ்வளவு வேலை செய்வீர்கள்.

பதிவர்: ஒரு முக்கியமான பதிவு அதான்.

மனைவி: என்னை வீட அப்படி என்ன முக்கியமான பதிவு?

பதிவர்: அக நானுறில் ஒரு ஆராய்ச்சி

மனைவி: ஆமா இங்க ஒரு நூறுக்கே வழியக் காணேம். இதுல அக நானுறு வேறயா?. நீங்க இதைக் கட்டிக்கிட்டு அழுங்க, நான் உங்களைக் கட்டிக்கிட்டு அழறேன்.

கோபமாக படுக்கையில் சென்று விழுகின்றார். நம்ம ஆளும் வேறு வழியில்லாமல் உள்ளே செல்கின்றார்.

பதிவர்: குட்டிம்மா அதான் வந்துட்டேன் இல்லை, என்ன கோபம்?

மனைவி: இப்ப எல்லாம் உங்களுக்கு என் மேல பிரியம் இல்லை.எப்ப பார்த்தாலும் பதிவு,
பதிவுன்னு உக்காந்து கொள்கின்றீர்.

பதிவர்: அப்படி எல்லாம் இல்லைடா செல்லம். எனக்கு பிடித்துள்ளதால் எழுதுகின்றேன். பிளிஸ் கோவிச்சுக்காத பட்டு.

மனைவி(சிறிது கோபம் தனிந்து): நான் என்ன எழுத வேண்டான்னா சொல்றன். கொஞ்சம் எனக்கும் ஹெல்ப் பண்ணத்தான சொன்னேன்.

பதிவர்(சிறிது அணைத்து): சரி நாளையில் இருந்து பண்ணுகின்றேன் போதுமா?. சரி என் மேல குட்டிம்மாவுக்கு என்னடா கோபம்?

மனைவி(சிரித்து): கோபமா அது எல்லாம் இல்லை.இது மாதிரி செல்லமா கோவிச்சால்தான் நீங்க உடனே கணினியை வைத்துவிட்டு வருவீர்கள் என்று நடித்தேன்.

பதிவர்: அதானே பார்த்தேன்.நீ என் செல்லம் ஆச்சே.

மனைவி கணவரின் அன்பு,பாசம் மற்றும் கொஞ்சலில் வெட்கப்பட்டும் சிறிது நகைக்கின்றார்.

பதிவர்: ஏய் எதுக்கு இப்ப சிரிச்ச?

மனைவி: ஒன்னும் இல்லை.

பதிவர்: இல்லை என்னமே இருக்கு சொல்லு.எதுக்கு சிரிச்ச?

மனைவி: இல்லை நீங்க பிலாக்கில போடறதும் பதிவுன்னு சொல்லிப் படிச்சு, அதுக்கு பின்னூட்டம் வேற போடுறாங்களே!! அவங்களை நினைச்சன், சிரிச்சேன் (என்று பதிவருக்கு பல்பு கொடுக்கின்றார்).

பதிவர் அடிக்கள்ளீ என்று மனையாளைக் கிள்ளீ அணைக்கின்றார்(அட லைட்டு அணைச்சாருங்க).அங்கு ஊடல் முடிந்து கூடல் ஆரம்பம் ஆயிற்று.

டிஸ்கி: சாமி சத்தியமா இது முழுக்க முழுக்க அக்மார்க் கற்பனை பதிவுங்க. சித்ரா அவர்கள் கணவன் மனைவி இருவரின் காதல் பதிவைப் படித்ததால் வந்த கற்பனை இது.
வழக்கம் போல ஆட்டோ அனுப்புவர்கள், ஆட்டோவை அவருக்கு அனுப்பவும் நன்றி.

Tuesday, January 26, 2010

தமிழ்க் ( குடி ) நாடு

கல் தோன்றி,மண் தோன்றாக் காலத்துத் தோன்றிய மூத்தகுடி,எங்கள் தமிழ்க்குடி,
வீரமும்,காதலும்,அன்பும்,பண்பும் காத்திட்ட குடி, எங்கள் தமிழ்க்குடி,
மனிதனாய் பிறப்பது ஒரு வரம் என்றால் அதிலும் தமிழனாய் பிறப்பது சாகவரம் போலும்.
தமிழுக்கும், தமிழ்க்குடி மகனுக்கும் உள்ள சிறப்பு யாதெனில் வீரமும் விவேகமும் ஆகும்.
நான் பிறந்திட்ட குடியும், மொழியும் என்றும் அழியாச் சிறப்பு உடையது.
அவ்வை பாட்டி கூறியது போல

நீர் உயர வரப்பு உயரும்,
வரப்பு உயர நெல் உயரும்,
நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோன் உயர்வான்

என்ற பாடலும் நமது முன்னேர்களின் சிறப்பு. இப்படி எல்லாம் நான் நம்ம தழிழ்ப் பாடபுத்தகத்தில்
நான் படித்துப் பெருமை கொண்டது உண்டு. இதுதான் உண்மை என்று நம்பியது உண்டு. இதுதான் நான் பிறந்த நாட்டின், எனது தாய்மொழி மக்களின் சிறப்பும் என்று உவகை கொண்டேன். ஆனால் நான் சென்ற வாரம் நம் தமிழ் நாட்டில் கண்ட காட்சிகள் பலவும் இதற்க்கு இன்னெரு அர்த்தம் உள்ளது என்று புலப்பட வைத்தது. அவை குறித்து எனது கருத்துக்கள் சில.நான் சென்ற ஊர்களான தாராபுரம்,திருச்சி,கல்பாக்கம்,சதுரங்கப்பட்டினம்,ஈரோடு,கருர்,மூலனூர்,சின்னதாராபுரம், சேலம்,செங்கல்பட்டு,தாம்பரம் மற்றும் பல்லாவரம் மட்டும் அல்லாமல் எனது பேருந்துப் பயணத்தின் போதும் வழியில் உள்ள அனைத்து ஊர்களிலும் டாஸ்மார்க் கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதைக் காண முடிந்தது. மக்கள் கூட்டமாய்,அல்லது தனித்தும் ரோட்டிலேயே சர்வ சாதரணமாய்க் மது அருந்துவதைக் காண முடிந்தது. டாஸ்மார்க்கின் உப தொழில்களாய் வயிற்றைக் கெடுக்கும் பாஸ்ட் புட் பிரியானிக் கடை,பானிபூரிக் கடைகள்,கறுவாடு மற்றும் பிரியானிக் கடைகளும்(சுகாதாரம் இல்லா) கூட்டம் நிரம்பிக் காணப் பட்டன.

குடிக்கத் தண்ணீர் இல்லை என்று கர்னாடகவிடமும்,கேராளாவிடமும் கேட்டு வாங்க வக்கில்லாத அரசு, மக்கள் குடிப்பதற்க்காக தாரளமாய் டாஸ்மார்க்குகளை திறப்பதைக் காண முடிந்தது. இளம் வயது முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி தெருவில் நின்று குடிப்பதையும் காண முடிந்தது. நான் முதன் முதலில் சென்னையில் வேலைக்கு வந்து குடிக்க ஆரம்பித்த போது,யாராவது தெரிந்தவர்கள் பார்த்து விடுவார்களே என்று பயந்து அல்லது வெட்கி ஒரு குற்ற உணர்வுடன் செல்வேம். இந்த குற்ற உணர்வு சில சமயம் குடிக்க விடாமல் தடுத்துக் காப்பாற்றும். ஆனால் எந்தக் குற்ற உணர்வும் அற்று பலரின் முன்னிலையில் திறந்த வெளியில் அனைவரும் சகஜமாய் குடிப்பதைக் காணும் போது தமிழ்க்குடி உண்மையில் இதுதான் என்று தெரியவந்தது. குடிப்பழக்கம் தமிழகத்தில் முன் எப்போது இல்லாத அளவிற்க்கு அதிகரித்து விட்டதும் தெரிகின்றது. இது சகஜமான விசயம் என்று எடுத்துக் கொள்ளப் படுகின்றது.

பழைய பழமொழிகளையும், இப்போது நடைமுறைகளையும் பார்க்கும் போது தமிழ்க்குடி என்ற வார்த்தை தப்பாக அர்த்தம் கொள்ளப்பட்டதா என ஜயம் எழுகின்றது. மளிகைக் கடையில் கூட்டம் அலைமோதும் காட்சி போய் அங்கு ஒருவர், இருவர் இருக்க டாஸ்மார்க்கிலும், பாஸ்ட் புட் கடையிலும் கூட்டம் நிற்பதைக் கண்டேன். இரண்டும் வயிற்றுக்கு ஆகாது என்ற எண்ணம் கூட இல்லாமல் அருந்தும் கொடுமையும் கண்ணுற்றேன்.எங்கும் குப்பை மயம்,சாக்கடை நீர், சுகாதாரம் அற்ற ரோடுகள், நெறிசலான ரோடுகளில் சாப்பிடும் மக்கள், சர்வம் சக்தி மயம் போல தமிழகம் எங்கும் கொசு மயம். கோவில் இல்லா, பள்ளி இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பார்கள். அது போல கொசு இல்லா ஊரைப் பார்க்க முடியாது போலும். மக்கள் சிக்கன் குனியா,டெங்கு,மலோரியா காய்ச்சலில் மருத்துவமனை வாயிலில் காத்துருக்கும் கூட்டமும் காண முடிந்தது.நான் பழைய ஞாபகத்தில் முப்பது ரூபாய்க்கு காய் வாங்க மார்க்கெட் போனேன்,ஆனால் மூன்று காய்கள் கூட வாங்க முடியவில்லை. எல்லாம் விலை ஏறிவிட்டது. கால் கிலோ ஏழு ரூபாய்க்கும் கம்மியாக எந்தக் காயும் இல்லை. என்ன கொடுமை இது. மூன்று ரூபாய் கீரைக்கட்டு கூட ஆறு ரூபாய் ஆகிவிட்டது.விலைவாசி கொள்ளை விலை விற்றாலும் டாஸ்மார்க்கில் தட்ப்பாடற்ற நிலைதான்.தமிழ் நாடு இந்த விகிதத்தில் போனால் காசுதான் முக்கியம் என்று கலாச்சாரம் பின்னால் தள்ளப்பட்டும்,பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற இப்போதைய பழக்கம் ஒரு கலாச்சாரமாகி விடும் அபாயம் உள்ளது.மடை திறந்த வெள்ளம் போல பாயும் சாரய சாம்ராஜ்யம் கொலை,கொள்ளை,குடும்ப பிறழ்ச்சி போன்ற அநாகரிகங்களுக்கு வழி வகுக்கும்.

ஆண்கள் குடிக்க, தாயும், பெண் பிள்ளைகளும் குடும்பம் காக்க வேலைக்குச் செல்லும் அவலமும் நடக்கின்றது. ஞாயிறு மாலை டாஸ்மார்க்கில் இருக்கும் கும்பலைப் பார்த்த நான், ஞாயிறு கூட வேனில் எக்ஸ்போட்டில் மாலை வரை வேலை செய்து களைத்து திரும்பும் இளம் வயது பெண்களைப் பார்த்ததும் வேதனையடைந்தேன். தலை நிறைய பூவும் தாவனியுமாகப் பாட்டும் கும்மாளமும் இருக்கும் இளம் வயது பெண்கள் கசங்கிய சுடிதாரில் ஒரு வித முதிர்வு தட்டி வேலையும், களைப்புமாக வீடு திருபுவதைக் காணக் கூட அந்த தந்தையின் மப்பு இடம் தாராது. தமிழ் நாட்டு மக்களை இப்போது மூன்று விதமான மயக்கங்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஒன்று குடி, இரண்டு போலி ஆன்மீகம், மூன்று வெற்றுப் பொழுது போக்கான திரைப்படங்கள். இவை மூன்றும் இவர்களின் முன்னேற்றதைக் கெடுத்து மூலையில் முடக்கி வைக்கின்றன.

கள்ளு இறக்கிக் குடிக்கும் காலத்தில் மக்கள் குடிக்கு அடிமையாகி விடுவார்கள் என்று பகுத்தறிவு பகலவன் தந்தை ஈ.வே.ரா பெரியார் அவர்கள் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். இன்று குடிப் பழக்கத்திற்க்கு எதிரான போராட்டமோ,விழிப்புணர்வு இயக்கங்களே எனக்குத் தெரிந்து இல்லை. அவரின் இயக்கங்கள் இப்போது தேவனாதனின் லீலைகளை கண்டு களித்துப் பேசி இன்புற்றுக் கொண்டு இருக்கின்றன. அவர்கள் ஆட்சியாளர்களுக்குப் பயந்து உண்மையை உரைக்காமல் பெரியாரின் அற்புதமான ஜாதிய எதிர்ப்பு, தீண்டாமை,கள் மற்றும் மது ஒழிப்புப் போராட்டங்களை மறந்துபோய், வெறும் கோசங்களாய், இப்போது இல்லாத அல்லது அடங்கிப் போன பார்ப்பன எதிர்ப்பு மற்றும் கடவுள் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் கட்சிக் காசைக் கொள்ளையடிக்கின்றனர். உண்மைப் பெரியாரின் தொண்டர்கள் தீண்டாமைக் கொடுமை செய்யும் அனைத்து மேல் சாதி வர்க்த்தையும், குடி மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவார்கள். ஆனால் இப்போது எதிர்க்காத அல்லது எதிர்ப்புத் தெரிவிக்காத பார்ப்பனர்களையும் அல்லது வந்து எதிர்க்க மாட்டார் என்ற தைரியத்தில் கடவுளையும் மட்டும் எதிர்க்கின்றார்கள். டாஸ்மார்க்கிலும் இன்ன பிற சுகாதரம்,மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக இவர்கள் போராட மாட்டார்கள்.இந்த உண்மைகளை நான் ஏன் என்று கேட்டால் சில பதிவர்கள் என் பிறப்பின் வர்ணம் பார்ப்பார்கள்.

குளிரும்,பனியும் கொட்டும் மேலைனாடுகளில் ஜீரணம் மற்றும் கதகதப்பான வார்ம்-அப்புக்காக விஸ்கியும்,வோட்காவும்,வைனும் குடிக்கும் பழக்கம். சூடூ அதிகம் உள்ள இந்தியாவிலும் குடிப்பழக்கம் அதிகரிப்பது ஆபத்தான அல்சர் மற்றும் குடல் கான்சர் வியாதிகளையும் அதிகப்படுத்தும். லெப்டே பைரஸிசஸ் என்னும் குடல் அல்லது ஈரல் சுருக்க நோய் பெருமளவு மக்களைத் தாக்கக் கூடும். பீர் அடிப்பது ஒரு சகஜமான விசயம் என்று பள்ளி மாணவர்கள் பருவத்தில் தொடங்கி விடலைப் பசங்களைக் கெடுக்கின்றது.இது கல்லூரி அல்லது வாலிப பருவத்தில் மற்ற ஹாட் ஜயிட்டங்களைக் சுவைக்க வைக்கும் என்று அறியாதவர்களாய் உள்ளனர். எனது இந்த பதிவைப் படிக்கும் பலர், இது அந்தக் காலத்தில் இல்லையா, சேமபாணம் என்ன?சுராபாணம் என்ன? என்று எல்லாம் பின்னூட்டம் இடக்கூடும் ஆனாலும் அந்தக் காலத்தில் மறைந்து,மறைந்து குடிப்பார்கள்.குடிகாரர்கள் சமுகத்தினாலும்,நல்லவர்களாலும் ஒதுக்கப் படுவார்கள். இப்போது குடிக்காதவர்களை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.இன்னும் ஒரு பின்னூட்டம் இடுவார்கள் நீ என்ன யோக்கியமா, நீ குடிக்கவில்லையா, ஆட்டம் போடவில்லையா, என்றும் கேக்கலாம், ஆனால் இந்தப் பதிவு வரும் தலைமுறை மற்றும் சமுதாய கலாச்சாரம் குறித்த பயம் மற்றும் அதன் நன்மை குறித்த பதிவுதான்,தனிப்பட்ட தாக்குதல் அல்ல. மொத்தத்தில் குடி என்ற சொல் அடையாளம் மாறிப் போய்விட்டது. தமிழகம் முழுவதும் குடிப்பழக்கம் சர்வ சாதரணமாய் உள்ளது. ஒரு வெட்கம்,அச்சம்,நாணம் அல்லது உடல் நலன் பற்றிய விழிப்புனர்வு சுத்தமாய் இல்லாது போய்விட்டது. தமிழக அரசு டாஸ்மார்க் மூலம் சத்தம் இல்லாமல் ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது. உன்னாவிரதம் இருக்காமல், யாருக்கும் கடிதம் எழுதாமல் தமிழ் நாட்டைத் தமிழ்க் குடி நாடு என்ற பெயர் மாற்றப் புரட்சி செய்துள்ளனர். இதுக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்தால் நன்றாக இருக்கும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்,அதை ஆதரரிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தப் பாராட்டுப் பெருந்தும். பொதுவாக மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்டுகள் கூட டாஸ்மார்க்கும், அதிகரித்து வரும் குடிப்பழக்கத்திற்கு எதிராய் குரல் எழுப்பாதது வேதனை.
நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு காந்தி,வினேபாபா, தந்தை பெரியார் பிறந்துதான் இந்த கள்ளூன்னாமையை வற்புறுத்த வேண்டும் போல உள்ளது. நன்றி. அடுத்த பதிவில் நம் நாட்டில் இருக்கும் அடுத்த மனம் மயக்கியான ஆன்மீகப் புரட்டல் களை எழுத உள்ளேன், நன்றி.

டிஸ்கி : இன்று இந்தியக் (குடி)யரசு தினம் ஆதலால் அனைவருக்கும் (குடி)யரசு தின வாழ்த்துக்கள். நன்றி.

Monday, January 25, 2010

ஊர் சுற்றி

நான் ஊருக்கு போய் திரும்பி வந்துவிட்டேன். ஊரில் இருக்கும் அனைவரும் என்னிடம் மாட்டாமல் பத்திரமாக தப்பித்து விட்டனர். அமராவதி ஆறு நிறைய தண்ணீர் ஓடுவதைப் பார்த்து நிறைய சந்தோசம், ஆனால் போய்க் குளிக்க நேரம் கிடைக்காததால் ஆற்றில் குளிக்கவில்லை(என்னது முழுகாம இருக்கனா,இதுதான வேணாம்). ஊர் சுற்றவும், நண்பர்களுடன் நிறைய நேரம் செலவழிக்கவும் முடியவில்லை. அக்கா மகளின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தேன்(சாப்பிடும் வேலைதான்). மூன்று நாட்களும் ஓடியது தெரியவில்லை. எனது உயிர் நண்பன் ஆசிப்பின் மூலம் நான் பதிவு எழுதும் விசயம் நண்பர்களில் பலருக்கும் தெரிந்து விட்டது. அட நம்ம ஊர்க்காரன் கூட நல்லா எழுதறான்பா என்று பாராட்டுக்களும், எனது பதிவின் பின்னூட்டங்களைப் படித்துக் காதில் புகையும் விட்டார்கள்.

ஆனாலும் மிகுந்த வேலைகளுக்கு இடையிலும் நான் மட்டும் போய்க் மசாலா காரப்பொறியும், மசலா முறுக்கும் பார்க் ரோட்டில் ஜயப்பன் அவர்களின் கடையில் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
எங்களின் மொத்த குடும்பம், உறவினர்கள் என்று அனைவரையும் ஒரு சேரப் பார்த்ததில் அளவு கடந்த ஆனந்தம். மூன்று அக்கா,நாலு அண்ணன் அவர்களின் அனைவரின் குழந்தைகள் என குடும்பம் களைகட்டியது. நல்ல இனிமையாக கழிந்தது. மொத்தம் பதினைந்து லட்ச ரூபாய் செலவு ஆகியது. எனது அக்கா வீட்டுகாரர்(அத்திம்பேர்) ஒரே மகளின் திருமணத்தை ஜமாய்த்து விட்டார்.

முக்கியமாக ஆச்சரியப் பட்ட விசயம், மணமகனின் வீடு, அனைவரும் தங்கமான மனிதர்கள். நிறைய அமைதி. ஒரே குடும்பம் போல எங்களுடன் பழகிய விதம். மூன்று நாள் திருமணத்தில் ஒரு குறைகூட கூறாமல், கலகலப்பாக கலந்துரையாடி, அவர்கள் மணமகன் வீட்டாரா என யோசிக்க வைத்தனர். மணமகனின் மொத்த குடும்பமும் மிகவும் நல்லவர்கள். அக்கா மகள் ஒரு நல்ல இடத்தில் வாக்கப் பட்டுப் போகின்றாள் என்ற மனனிறைவுடன் திருமணம் முடிந்தது.

திரும்பி வரும் போது டைகர் ஏர்வேஸ் விமானம் இரவு 11.45க்கு கிளம்ப வேண்டியது,சில டெக்னிக்கல் பிரச்சனைகளால், விமானம் மாற்றி இரவு 1.00 மணிக்கு எடுத்தார்கள். இரவு தூக்கம் சரியில்லாதால் கன்னிமைகள் இன்னும் வலிப்பதால் இன்று பதிவு இடமுடியவில்லை.நாளை முதல் பதிவுகள் ஆரம்பிக்க வேண்டும். ஆ ஒரு விசயம், நான் சபரி மலைக்குப் போய் வந்த போது வாங்கிய புது செருப்பை யாரே மண்டபத்தில் மாற்றிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஆதலால் புதுசு வாங்கி வந்தேன். இம்முறை ஆரம்பத்திலேயே கடைக்காரரின் அறிவுரைப்படி தண்ணீரில் முக்கி அணிந்ததால் காலைக் கடிக்கவில்லை.

இந்த முறை ஒரே ஒரு குறைதான், நான் தினமும் வணங்கும் எங்கள் ஊர் ஸ்ரீகாடு அனுமந்தராய சுவாமி கோவிலுக்குப் போகமுடியவில்லை. அதாலால் என்ன அவர்தான் எப்போதும் எனது வழிகாட்டியாக என்னுடன் இருக்கின்றார் அல்லவா? என்று, மானசீகமாக கும்பிட்டு வந்து விட்டேன்.

நன்றி.

Monday, January 18, 2010

பதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2

மேனகா சத்தியா : கோழிக்குழம்பு பண்ணனும், போய்க் கோழி வாங்கி வாங்கன்னு சொன்னா ஏன் யோசிக்கிறீங்க?.

கணவர்: இல்லை நாளைக்கு புலி(ளி)க்குழம்பு பண்ணலாம்ன்னு சொன்னியே,அதான் புலி(ளி)க்கு எங்க போறதுன்னு யோசிச்சேன்.

(சாலமன் மச்சான் சிப்பிக்குள் முத்து கமல் மாதிரி கையைக் காலை இழுத்து டான்ஸ் ஆடுகின்றார்.)

சித்ராவின் தோழி : என்னம்மா உன் கனவர் டான்ஸ் கத்துக்கிறாரா?

சித்ரா : அது எல்லாம் ஒன்னும் இல்லை. நான் பண்ணிய நெல்லை அல்வா சாப்பிட்டு வாய் ஒட்டிக்கிச்சு. அதான் திறக்க டிரை பண்றார். (தோழி பயந்து அல்வா கொடுப்பதுக்குள் எஸ் ஆகிறார்.)

வித்யா(விதூஷ்) : என்னங்க நான் பண்ணிய திருவாதிரைக் கழி அலுவலகத்திற்கு வேணுமா அவ்வளோ நல்லா இருக்கா?

கணவர்: அது எல்லாம் ஒன்னும் இல்லை. அங்க கோந்து தீர்ந்து போச்சு.


ஸாதிகாவின் கணவர்: இன்னிக்கி எங்க மானேஜர் லஞ்சு அவரில் ரொம்ப கோபமா என்னிடம் வந்தார்.

ஸாதிகா: அய்யே ரொம்ப திட்டிவிட்டாரா?

கணவர் : அதுக்கு முன்னாடி உன் சாப்பாட்டைக் கொஞ்சம் கொடுத்தேன்,உப்புச்சப்பு இல்லாம மனுசன் ஆப் ஆகிப் போயிட்டார்.

ஃபைஸியாகாதர் : என்னங்க நான் இரமாலன் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தால் எதுக்கு பக்கெட்டில் கொட்டறிங்க?

கணவர் : என்னுடைய காட்டன் சட்டைக்கு ரொம்ப நாளாக கஞ்சி போடவில்லை அதான்.

திவ்யாஹரி(ரொம்ப ஆசையாக): ஏங்க எதுக்கு இன்னிக்கு திடீர்னு ஓட்டலுக்கு போலாம்ன்னு சொல்றீங்க. ஏதும் விசேசமா?

கணவர் : அது எல்லாம் ஒன்னும் இல்லை, உன்னைக் கல்யாணம் பண்ணியதுக்கு அப்புறம் இன்னிக்கு ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ன்னுதான்.

சந்தன முல்லை: பாட்டி வடை சுட்டப்ப, காக்கா வந்து வடை எடுத்துப் போயி,மரத்து மேல உக்காந்து தின்னுச்சா.

பப்பு : நல்லவேளை அம்மா, நீங்க சுட்ட வடை எடுத்துப் போயிருந்தா!! காக்கா பாவம்.

சந்தன முல்லை : !!!!!!!.(எனக்கு முதல் விருது கொடுத்ததால 2 ஸ்பெசல்)

பத்மா (பத்மா கிச்சன்ஸ்) : என்னங்க சொல்றீங்க, உங்க ஆபிஸிக்கு நான் அவசரமா ஆயிரம் மைசூர்பாகு பண்ணித் தரனுமா? அவ்வளே நல்லா இருக்கா?

பத்மாவின் கணவர் : அது எல்லாம் இல்லை. ஆபிஸ் கட்ட செங்கல் தீர்ந்து போச்சு அவ்வளவுதான்.

ரம்யா (வில் டு லிவ்) : என்ன! உங்க ஆபிஸில எல்லாரும் என் சமையல் பத்திதான் பேசினாங்களா. அதுக்கு உங்களைப் பாராட்டினாங்களா ?

ரம்யாவின் கணவர் : இந்த சாப்பாட்டையே தினமும் சாப்பிடுறீங்களே. நீங்க ரொம்பா நல்லவருன்னு சொன்னாங்க.

தமிழரசி(தங்கச்சி,இப்ப சரிங்களா) : ஏங்க காலையில நான் முதல்ல என்ன பண்ணட்டும். சமையல் பண்ணவா? இல்லை கவிதை எழுதவா?.

கணவர் : இதுக்குப் பேசாம, நான் என்ன பண்ணட்டும் கொலையா? படுகொலையான்னு கேக்கலாம்.

தோழி கிருத்திகா : என்னங்க இன்னிக்கி நான் உங்களுக்கு இட்லி பண்ணட்டா? இல்லை தோசை பண்ணட்டா?

கணவர் : எது வேணா பண்ணு, ஆனா இன்னிக்காவது கொஞ்சம் சாப்பிடற மாதிரிப் பண்ணுமா பிளீஸ்.

சரி இந்த காமடி பதிவை நீங்க இரசிச்சீங்களே இல்லையே, உங்க ரங்கஸ் எல்லாரும் ரொம்ப இரசிச்சுருப்பாங்க. நம்ம சுசி தங்காய்ல ஆரம்பிச்சோம்,அவங்களை வைத்துக் காமெடியை முடிச்சுருவேம். இந்த காமெடி உங்க எல்லாருக்கும் பொருந்தும். அதுனால நீங்க எல்லாரும் சொல்ற மாதிரி எடுத்துக்குங்க.

சுசி (கோபமாக): இந்த பித்தனின் வாக்கு சுதாகருக்கு என்ன கொழுப்பு பார்த்தீங்களா? நீங்க கூட என் சமையலைக் குறை சொன்னது இல்லை. இவர் பாருங்க இப்படிக் காலை வாரிவிட்டார்.

குணாளன் மச்சான் (கூலாக): சரி சரி விடு. எங்களால சொல்ல முடியவில்லை. அவன் எதோ தைரியமாச் சொல்லிட்டான்.

சுசி பசங்க: அதானே!!!!!



இந்த லிஸ்ட்ல எனக்குத் தெரியாம யாராவது விட்டுப் போயிருந்தா, சந்தோசப்படாதீங்க அதுக்குன்னு இன்னெரு தனிப்பதிவா போட்டுருவம்.

அனைவரும் இந்த அன்பு அண்ணனின் நகைச்சுவைகளை இரசித்து ஆதரவளித்தமைக்கு நன்றி. இது போல சின்னச் சின்ன சந்தோசங்களுடன் நிறைவான வாழ்க்கை இந்தப் புத்தாண்டில் வாழ எனது அய்யன் அய்யப்பனை வேண்டிக் கொள்கின்றேன். நன்றி.

டும், டும், உங்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்ன என்றால், "வரும் திங்கள் வரைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பதிவுகளில் இருந்து விடுதலை. விடுதலை. மீண்டும் திங்களன்று சந்திப்போம்". நன்றி.

பதிவர்கள் வீட்டு சமையல் அறையில்

வாரத்தின் முதல் நாளை மிக்க மகிழ்வுடன் துவக்குவோம். நான் சில நகைச்சுவைகளை எழுதலாம் என்று நினைத்தேன். அதில் இடம் பெறும் பாத்திரங்கள் நாம் அறிந்த நபர்களாக இருந்தால் கொஞ்சம் டச்சிங்காக இருக்கும் என்றும், என்னுடன் பழகியவர்கள் என்ற முறையில் எனது சகோதர, சகோதரிகள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்த பதிவைப் போடுகின்றேன். இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.

நான் ஞாயிறன்று கனவில் ஒரு உலக சுற்றுப் பயணம் போனேன். அப்ப எல்லா நாட்டிலும் பதிவர்கள் என்னை வரவேற்று, அவர்கள் இல்லத்தில் விருந்து கொடுத்தார்கள். அப்ப அவர்கள் வீட்டில் நடந்த சம்பவங்கள். முதல்ல நம்ம சுசி தங்கை வீடு.

சுசி: ஏங்க நான் பத்து வெங்காயம்தான உரிக்கச் சொன்னேன். அதுக்கு ஏன் இப்படிக் கண்ணீர் விடுறிங்க?.
குணாளன் மச்சான் : நான் அதுக்கு அழலை. அதுக்கு அப்புறம் சமைச்சுக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வியே, அதை நினைத்துதான் அழறேன்.
சுசி பசங்க: கவலைப் படாதிங்க அப்பா! நாங்க இருக்கமேமில்லை.

அடுத்து ஜலிலா அக்கா வீடு,
ஜலில்லா : ஏங்க சும்மா டீ.வீ சீரியல்தான பார்க்கின்றீங்க. அப்படியே நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம்மில்ல,
கனவர் : ஒரே நேரத்தில் எதுக்கு ரெண்டு கொடுமைன்னு யோசிக்கின்றேன்.

நம்ம பப்பு கொடுத்த பல்பு(அடிக்கடி வாங்குவர்):
சந்தன முல்லை அக்கா: பப்பு மறக்காம பள்ளிக்கு டிபன்பாக்ஸ் எடுத்துப் போ. நான், வெஜ் புலாவ் பண்ணி வைச்சிருக்கேன்.
பப்பு : இம்ம் டீச்சர் கொடுமை பத்தாதுன்னு நீங்க வேறயா?

நாஸியாக்கா வீட்டில் :
நஸியா: ஏங்க பிரியானி சட்டியைப் பரண் மேல இருந்து எடுத்துத் தாங்கன்னு சொன்னா ஏன் இப்படி யோசிக்கிறீங்க?
கனவர் :இல்லை இப்ப சட்டியை எடுக்கலாம், அப்புறம் பிரியானியைச் சட்டியில் இருந்து எடுப்பது எப்படின்னு யோசிச்சேன்.

தமிழோசை தமிழரசி சமையல் அறையில்:

தமிழ் அக்கா : கடுகு என்னும் காதலன் வெள்ளுத்தம் பருப்பு என்னும் காதலியுடன் எண்ணெய் என்ற காதலில் கலர்ந்து வாழ்க்கை என்னும் தாளிப்பில்,
அக்கா கனவர் : அம்மா முதல்ல பசிக்குது, அப்புறம் கவிதை எழுதலாம். கும்பி காயுது தாயே.

கவிதாயினி ஹேமா :
என் சமையலறையில் விழுந்திட்ட கனியே! உன்னை மருந்திட்டு கொன்றது யார். அழகாய் உதிர்த்த காயைப் பிஞ்சில் பறித்திட்ட கயவன் யார். உதிரம் சொட்ட ஆட்டை அறுத்திட்ட கொடுமை பாரீர்.
கனவர் : கவிதை எல்லாம் நல்லா இருக்கு, மறந்து போய் அந்த பேப்பரையும் போட்டு சமைத்துப் போடதே.
ஹேமா : வழக்கமாச் சாப்பிடுவீங்க, இன்னிக்கி என்ன வந்தது?

கலகலப்பிரியா : கோழியைக் கொலை செய்து, காயை நறுக்கி,எண்ணெய்யைக் குத்தி, மிளகாயை உடைத்துப் போட்டு,கனியை அறுத்து,
கனவர் : அப்பாடா இன்னிக்கு நான் தப்பிச்சேன். நீ ரொளத்தரம் பழகுபவளன்னு சொன்னது இதுதானா?

பதிவர் சின்ன அம்மினி வீட்டில் :
சின்ன அம்மினி : என்னங்க இந்த ஊரு குளிருக்கு இதமா, மிளகு இரசம் வைச்சிருக்கேன், ஒரு டம்ளர் குடியுங்கன்னு சொன்னா ஏன் இப்படித் திரு திருன்னு முழிக்கிறீங்க?
கனவர் : என் காதுல விசம்ன்னு விழுந்தது அதான்.
சின்ன அம்மினி : சும்மா குடியுங்க! ரெண்டும் ஒன்னுதான்!.

தெய்வ சுகந்தி : ஏங்க நான் ஆட்டுக்கால் சூப் வைச்சா ஏன் சாப்பிட யோசிக்கிறீங்க.
கனவர் : ஒன்னும் இல்ல, போனதடவை தலைக்கறி சாப்பிட்ட தலைவலி இன்னும் போகலை. கால்வலி வேறயா?

சுவையான சுவை : ஏங்க இன்னும் ரெண்டு தோசை போடட்டா?
கனவர் : ஓ நீ போட்டது தோசையா ? நான் வறட்டின்னு நினைச்சேன்.

சுஸ்ரீ: ஏங்க எதுக்கு இன்னிக்கி என்னை இட்லி பண்ணு,பண்ணுன்னு சொல்றீங்க?.
கனவர் : ஆனி அடிக்க சுத்தியல் இல்லை அதான்.
(சுஸ்ரீ கோபத்தில் என் மண்டையில் போட்றாதிங்க ஏற்கனவே நான் சொட்டை)

நம்ம பதிவு வாசகி விஜி :
கனவர் : விஜிம்மா ரொம்ப பசிக்குது, எதாது ஒன்னு சீக்கிரம் பண்ணிக் கொடும்மா?
விஜி: சும்மா இருங்க, நான் என்ன சமைக்கிறதுன்னு, எல்லாப் பதிவையும் படிச்சு, ஒரு மணி நேரத்தில் ரெடி பண்ணறேன்.

மாதேவி வீட்டில்
மாதேவி: ஏங்க இந்த மீனைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுங்க.
கனவர் : ஆமா இப்ப மீனைச் சுத்தம் பண்ணனும், அப்புறம் அடிப்பிடிச்ச குண்டான சுத்தம் பண்ணனும். ஒழுங்கா மீன் குழம்பு வைக்க மாட்டியேன்னு, நம்ம வீட்டு பூனை கூட தற்கொலை பண்ணிக்கிச்சு.

கீதா ஆச்சாள் வீட்டில் :
கீதா ஆச்சாள் : ஏங்க இன்னிக்கி சுதாகர் வந்துருக்காரு, எதாவது ஸ்பெசலா பண்ணலாம்மா?
கனவர் : அப்படின்னா இன்னிக்காவது, நீ கொஞ்சம் சாப்பிடற மாதிரி சமையல் பண்ணீடும்மா தாயே!

துளசி டீச்சர் : ஏங்க நான் ஒரு பதிவுல போட்ட மாதிரி, புடலங்காய் பொறியல் பண்ணலாம்மா?
கோபால் மாமா: ஆமா அதையும் பின்னூட்டம் மாதிரி, பின்னாலதான் கொட்டனும்.எப்பவும் போல நானே சமைக்கிறேன். நீ சும்மா இருந்தா அது போதும்.

(உங்க எல்லார் காதுலையும் புகை வருதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்களும் என் மண்ணிகள் மாதிரி, " இருடா! உனக்கு ஒருத்தி வருவா இல்லை, அவ என்ன பண்ணப் போறான்னு பார்க்கறம்?" அப்படின்னு நினைக்கிறீங்க. உங்களுக்கு கஷ்டம் வேண்டாம். நானே ஒரு கற்பனை பதிவைப் போட்டு விடுகின்றேன்.என் மனைவி சீரியலில் கதா நாயகியை அழவைக்கும் வில்லனைக் கோவமாக பார்த்து கொண்டுருக்கையில்....)

நான்(கையில் கரண்டியுடன்) : குட்டிம்மா, நான் இந்த சோழா பட்டுரா மாதிரி, சோழா நுட்டுரான்னு ஒரு வித்தியாசமான அயிட்டம் பண்ணட்டா?.
மனைவி(கோவத்துடன்) : இந்த வித்தியாசமான அயிட்டம் எல்லாம் பதிவு போடறதோட நிறுத்திக்குங்க. முதல்ல உருப்படியா, ஒழுங்கா உப்புமா பண்ற வேலையைப் பாருங்க.

எல்லாம் சிரித்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். மாத இறுதியில் ஆண் பதிவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்து இருக்கின்றார்கள். போய்விட்டுப் பதிவு போடுகின்றேன்.


டிஸ்கி : என்னை உதைக்க நினைப்பவர்கள், என்னைத் தேடிச் சிங்கப்பூருக்கு வரவேண்டாம். நான் ஒரு வார விடுப்பில் இந்தியா செல்கின்றேன். ஆட்டோ அனுப்புவர்கள் அங்கு அனுப்பவும். (மருத்துவச் செலவுக்குப் பணமும் அடிப்பவர்களிடம் கொடுத்து அனுப்பவும்)

Friday, January 15, 2010

ஒரு நொடி வாழ்க்கை

தாயின் கத கதவென்ற சூடும், நிணனீரும்
என் வாழ்வாகிப் போனது,அவள் வயிற்றில்
கை,கால் உதைத்து, விளையாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின, நான் அழுது கொண்டு ஜனித்த போது,

பிறந்து, இருந்து,தவழ்ந்து விளையாடி,
கொஞ்சி,அழுது,உண்டு உறங்கி
சுவைத்து, முத்தம் இட்டு, வாங்கிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின, நான் பருவம் அடைந்த போது,

என்னை ஊண் தந்து,உறக்கம்அற்று,வளர்த்து,சுகிர்த்து,எனக்காய்
வாழ்ந்த,என் தாய் உறவாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,
அவளின் பிரதினிதியாய் என் மனைவி வந்தபோது,

என் ஊண் பட்டு, படுக்கை கலர்ந்து,
என்னுள் அவளும்,அவளுள் நானும் கலர்ந்து
இருந்து,மகிழ்ந்த உறவாடிய பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறியது,அவள் தாயாய் ஆன போது,

மகளுடன் விளையாடிக்,கதை பேசி, திரைப்படங்கள் பார்த்து
கவலை இல்லா குடும்ப வாழ்க்கை
நிம்மதியான மனம் என்ற பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,அவள் பருவம் வந்த போது,

வீரம்,கம்பீரம்,ஆணவம்,ஆனந்தம்,மகிழ்வு,அழுகை
இத்தனையும் செய்து,களித்துக் கவலையில்லா
வாழ்க்கை அனுபவித்து வந்த பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிப் போனது,நோயுடன் முதுமை வந்த போது,

மருத்துவ வாழ்க்கை, செவிலியர் கவனிப்பு,
மனையாளின் கவலையிலும் சிரித்த முகம்,
அன்பு மகன், மகளின் ஆறுதல் தந்த பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறின,என் சுவாசம் நின்ற போது,

நின்ற, நடந்த, படுத்த, உடல் மாறிப் போய்,
விரைத்துக், குளிந்த, அசையாப் பொருளும் ஆகி,
ஆரம்பத்தில் இருந்து வந்த நிண நீர் பொருளும் ஆகி,
நான்,எனது என்றும்,இப்போ பிணம் என்ற பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் இல்லாது போனது,என்னை எரித்த போது,

வரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி
போகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து
பிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்
நொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே

சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,
அன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,
சண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்
ஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள்.

Thursday, January 14, 2010

சுண்டை வத்தல் ( பழைய ) சாதம்

ஆகா ஓரு வித்தியாசமா இருக்கட்டுமே என்று பழைய சாதத்தில் செய்யும் புளி சாத குறிப்புகளைக் கொடுத்தேன். ஆனால் இது வரை எந்த பதிவுகளுக்கும் இல்லாத வரவேற்ப்புகளைப் பெற்றது குறித்து ரொம்ப சந்தோசம். பதினேட்டு வாக்குகள், 3 பரிந்துரைகள் எனக் கலக்கி விட்டது. அனைவரும் செய்து சாப்பிடுவார்கள் என நம்புகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த, அம்மா அல்லது அண்ணி வீட்டில் இல்லாத மாலை அல்லது காலை நேரங்களில் நான் செய்து சாப்பிடும் இன்னும் ஒரு பழைய சாதப் பதிவு இது. அளவான வயிற்றைக் கெடுக்காத, அலுவலகத்தில் தூக்கம் தராத சாப்பாடு இது. இரண்டு முறைகளில் செய்யலாம் அவை :

தேவையான பொருட்கள் :

1.பழய சாதம்
2.சுண்டைக்காய் வத்தல்- 10
3.மனத்தாக்காளி அல்லது கறுஞ்சுக்குட்டி வத்தல்- ஒரு பிடி
4.மோர் மிளகாய் 5
5. பூண்டு ஜந்து பல்,
6.தாளிக்க - எண்ணெய்,கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.
7. தயிர் 2 ஸ்பூன் (இரண்டாவது முறைக்கு).

செய்முறை(முதல்) :

முதலில் பூண்டைத் தோலுரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன் பின் பழைய சாதத்தை உதிர்த்துத் தனித்தனியாக உதிரியாக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் இட்டுச் சமையல் எண்ணெய்யை ஒரு ஜந்து அல்லது ஆறு ஸ்பூன் விட்டு கொஞ்சம் சூடு ஆகியதும் கடுகு,பூண்டு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய் போட்டு, ஒரு பிரட்டுப் பிரட்டிவிட்டுப் பின்னர் அதில் சுண்டைக்காய், மணத்தக்காளி, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். ( முக்கியமாக கவனிக்கவும் ) வத்தல் மற்றும் மோர் மிளகாயைச் சிவந்த பொன்னிறமாக அல்லது இளம் கருப்பில் தாளித்தால் நலம். தீய விடக் கூடாது. இப்போது இதில் உதிர்த்த சாதத்தைப் போட்டு கிளறவும். குழையாமல், அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். கொஞ்சம் உப்பு (தேவைப்படும் அளவு) போடவும். சுண்டை வத்தலிலும், மனத்தக்காளி வத்தலிலும் உப்பு இருக்கும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். சூடான சுண்டை வத்தல் பழைய சாதம் ரெடீ. தேவைப் பட்டால் இதில் ஒரு சுவை மற்றும் பசவுக்காக ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் அல்லது ஒரு கரண்டி மோர் விடலாம். விருப்பம் உள்ளவர்கள் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை (இரண்டு) :

இதில் முதலில் முன்னர் சொன்னது போல தாளித்துப் பழைய சாதத்தில் கொஞ்சம் அல்லது ஒரு கரண்டித் தயிர் விட்டுப் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்க்கமாகப் பிசைந்து கொள்ளுங்கள்.பிசையும் போது சுண்ட வத்தல் மற்றும் மனத்தக்காளி வத்தலை அதிகம் பிசையாமல் பார்த்துக் கொள்ளவும், இல்லாவிட்டால் சாதம் கொஞ்சம் கசக்கும். இல்லை என்றால் உப்பு,தயிர் போட்டுப் பிசைந்து விட்டு,அதன் பின்னர் தாளித்துக் கொட்டிச் சிறிது பிசைந்து கொள்ளலாம். ( எனக்கு இதில் ஒரு கரண்டி வடுமாங்காய் ஊறுகாய் நீர் அல்லது அதில் இருக்கும் வண்டல் எண்ணெய், அல்லது எலுமிச்சை ஊறுகாய் அல்லது மாங்காய்(ஆவக்காய்) ஊறுகாய் மண்டியை(வண்டல்) இதில் விட்டுப் பிசைந்து சாப்பிடுவது பிடிக்கும்).


இந்த இரு சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ள எழுமிச்சை, ஆவக்காய் மாங்காய், வடுமாங்காய் ஊறுகாய்கள், தக்காளித் தொக்கு, இஞ்சி புளி ஆகியன நல்ல காம்பினேசன் ஆகும். நன்றி.

Wednesday, January 13, 2010

புளி (பழைய ) சாதம்

என்னதான் சுவையாக சமைத்துப் போட்டாலும் சில நாள் சாதம் மீதியாகிப் போய்விடுவது உண்டு. சாம்பார் அல்லது இரசம் என்று அவைகள் காலியாகி, வெறும் சாதம் மட்டும் இருந்தால்,அந்தப் பழைய சாதத்தை எப்படி ரங்கஸ்(உண்மையைச் சொன்னால் தங்ஸ்) தலையில் கட்டுவது எனபது கொஞ்சம் குடைச்சல்தான். இது மாதிரி செய்தால், மறுமுறை சாதம் மீந்தால் ரங்கஸ்(தங்ஸ்) கேக்குற அளவுக்கு நாம் சுவையாக மாற்றுவது எப்படி என்பதுதான் இந்தப் பதிவு. இது பெண்களுக்கு மட்டும் அல்ல, தனியாக சமைத்துச் சாப்பிடும் இளம் வாலிபர்களுக்கும் பயனுள்ள பதிவு. சரி நாம் புளி பழைய சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

1.பழைய சாதம்
2.புளி ஒரு உருண்டை(எலுமிச்சை அளவு)
3.மிளகாய்ப் பொடி (ஒரு ஸ்பூன்)
4.பொருங்காயத்தூள்(அரை ஸ்பூன் )
5.பெரிய வெங்காயம் 2
6.தாளிக்க - கடுகு,கறிவேப்பிலை,வெள்ளுத்தம் பருப்பு,நல்ல எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.
7.உப்பு தேவைப்படும் அளவு.
8.மஞ்சத்தூள் சிறிது.

செய்முறை :
சாதம் மீதியான உடன் (மதியம் அல்லது இரவில்) அந்த சாதத்தை ஒரு பேஸின் அல்லது பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சாதம் இருக்கும் அளவுக்கு ஏற்பத்தான் பொருட்கள் சேர்க்க வேண்டும். இந்த புளி(பழைய)சாதம் புளியோதரைப் போல அவ்வளவு புளிப்பாக இருக்கக் கூடாது. கொஞ்சம் புளிப்பு இருந்தால் போதும். ஆதலால் ஒரு உருண்டைப் புளியைக் கொஞ்சம் தண்ணியாகக் கரைத்து, அந்த கரைசலை அடுப்பில் விட்டுக் கொதிக்க வையுங்கள்.கொஞ்சம் சூட்டின் போது அதில் சாதத்திற்க்கு போதுமான அளவு உப்பு, பெருங்காயத்தூள்,மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி ஆகியன சேர்த்துக் கொதிவிடவும். புளித்தண்ணீர் பச்சை வாசம் போய் நுரைக் கட்டியவுடன், இறக்கிச் சாதத்தில் ஊற்றிக் கலந்து ஊறவைக்கவும். இரவில் மீதியானல் காலை வரையும், மதியம் மீதியானல் இரவு வரைக்கும்,காலை மீதியானல் மதியம் அல்லது மாலை வரைக்கும் ஊறட்டும். ஒன்றும் ஆகாது.

பின்னர் சாப்பிடும் முன்,வெங்காயத்தைச் சிறிது நீளம் உள்ள துண்டுகளாக(உப்புமாவில் போடுவது போல) நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் நாலு அல்லது ஜந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (நல்ல எண்ணெய் கொஞ்சம் எதிர்க்கும்.ஆனால் பிடிக்கும் என்றால் கலக்கவும், இல்லை என்றால் சமையல் எண்ணெய் போதும்),அதில் கடுகு,கறிவேப்பிலை, வெள்ளூத்தம் பருப்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தப் போட்டு வதக்கவும். (மிளகாய் பொடி காரம் வேண்டாம் என்பவர்கள் புளியில் மிளகாய்ப் பொடி போடாமல், தாளிக்கும் போது இரண்டு பச்சை மிளகாயை சேர்க்கலாம்).வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய உடன் ஊறிய சாதத்தைப் போட்டுக் குழையாமல்,அடிப்பிடிக்காமல் மெதுவாக மேலும்,கீழுமாய்க் கிளறவும். சாதம் சூடு ஆனவுடன் மற்றும் நல்லாக் கலந்தவுடன் இறக்கவும். சூடு ஆறும் முன்னர் சாப்பிடவும். ஒருமுறை இது போல செய்து சாப்பிட்டால் இது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.இன்னமும் சுவை சேர்க்க வேண்டும் என்றால் கொத்தமல்லி,சீரகம் வரமிளகாய் வறுத்து அரைத்துப் பொடி செய்து,தாளிக்கும் போது கலர்ந்து கொள்ளவும். ஆனால் இதைவீட வெறும் புளியில் செய்தால் சிம்பிள் ஆகவும் சுவையாகவும் இருக்கும்.

சாம்பார் அல்லது இரசத்துடன் மதியம் சாதம் மீதியானல் அதை இரவில் பின் வருமாறு சாம்பார் சாதம்,இரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் செய்யவும்.

சாம்பாரை ஒரு பச்சை மிளகாயைக் கையில் கிள்ளிப் போட்டுச் சூடு செய்து, சாதத்தில் கலந்து கொள்ளவும். இரசத்தில் ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு நல்ல தளர்க்கப் பிசைந்து(கையால்), பிசையும் போது மிளகாயை முழுதுமாகப் பிசையாமல்,காரம் உரைக்கும் அளவுக்கு மெதுவாக பிசையவும். பிசைந்த இரசம் சாதத்தை அடுப்பில், தணலை ஸ்ம்மில் வைத்து சூடு செய்யவும். கொஞ்சம் சாதத்தில் தயிர் உப்புப் போட்டுப் பிசைந்து, அதில் கடுகு, கறிவேப்பிலை, மோர்மிளகாய் வத்தல் அல்லது மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து,சாதத்தில் சேர்த்து கலக்கவும். சாம்பார் சாதம்,இரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் ரெடீ. இதுபோல பழைய சாதங்களைக் கலர்ந்து தொட்டுக்க அப்பளம்.வடாம் மற்றும் ஊறுகாயுடன் தந்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

டிஸ்கி: 1.இது இரவில் சாப்பிட்டால் தூங்கும் போது சிலருக்கு சிறிது வயிறு பொருமல் ஏற்படும். இரவு மீதியான சாதத்தில் காலை சாப்பிடுவது சரி. எனக்கு காலை நீராகம்(ஊறுகாய் அல்லது மாவடுவுடன்) அல்லது இது போல செய்து சாப்பிடுவதுதான் மிகவும் பிடிக்கும். நன்றி.
2. கவனம் : புளி(பழைய) சாதத்தில் உப்பு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சரியான அல்லது குறைவான அளவில் சேர்த்தால் தான் சுவை சரியாக இருக்கும்.
3. எல்லாரும் பொங்கல் செய்ய பதிவு போட்டால் நான் பழைய சாதத்திற்க்குப் பதிவு போடுகின்றேன். என்ன செய்ய நான் தான் பித்தன் ஆயிற்றே. அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
" பொங்கிடும் பானையைப் போல உங்களின் இல்லத்தில் மங்களம் யாவும் பொங்கிட,
பொங்கும் உவகையுடன் வாழ்த்தும் உங்களின் அருமைச் சகோ.சுதாகர்."
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் கூறிக்கொள்ளும் சுதாகர்.

"பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல்"

Tuesday, January 12, 2010

மாதக்கணக்கு

மனையாளுடன் சேர்ந்து பார்த்தேன்
மாதக்கணக்கு,
வரவை வீட செலவாய் இருந்ததது
மாதக்கணக்கு,

கேள்வி கேட்டால் குதர்க்கம் ஆகியது
மாதக்கணக்கு,
குதர்க்கம் பின்னால் தர்க்கம் ஆனது
மாதக்கணக்கு,

தர்க்கம் வளர்ந்து பிணக்காய்ப் போனது
மாதக்கணக்கு,
பிணக்காய் வளர்ந்து சண்டையாய் போனது
மாதக்கணக்கு,

சண்டை சச்சரவாய் கோபத்தில் முடிந்தது
மாதக்கணக்கு,
கோபத்தில் கொடுத்தேன் கன்னத்தில் நாலு
சிவந்து போனது மாதக்கணக்கு,

கன்னிச் சிவந்து போனது கன்னம்
வெட்கத்தில்,
சுபமாய் முடிந்தது ஊடலும்
மாதக்கணக்கும்.

Friday, January 8, 2010

செத்த பொணம்














சூரியன் தனது அன்றாடக் கடமை முடித்துச் சாயுங்காலம்,தனது சிம்மாசனமான கட்டைச் சாய்வு நாற்காலியில் உக்காந்து, தான் ஆசையுடன் வளர்க்கும் ஆட்டுக்கிடாயுடன், விளையாடும் தன் பேரப்பிள்ளையைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பொன்னம்பலவானர். ஜந்து ஏக்கரா நஞ்சையும், சில காணி புஞ்சைக்கும் சொந்தக்காரான அவர் தன் வீட்டு முற்றத்தில் பேரனின் விளையாடும் அழகை இரசித்துக் கொண்டு இருந்தார். அவர் ஒரே மகனின் வாரிசுதான் சுப்பிரமனியன். வயது பத்தானாலும் மழலை மாறா பிஞ்சு முகம். மழலை மாறா மொழி.இவன் மழலையைக் கேட்டுத் தாத்தாவிற்க்கு கொள்ளை ஆனந்தம். சுப்பிரமனியனுக்கும் தாத்தாவின் மடியிலும், முற்றத்தில் ஆட்டுக்கிடாயுடன் விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். பள்ளி முடிந்தவுடன், இரவு படுக்கச் செல்லும் வரை இதுதான் அவனது பொழுது போக்கு.

பொன்னம்பலவானரின் மகனுக்குப் பக்கத்து ஊரில் இருக்கும் அரசு அலுவலகத்தில் உத்தியோகம். இவர் நிலம் நீச்சு போன்றவற்றைக் கவனித்துக் கொண்டார். சென்ற மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்த மாரடைப்பு அவருக்கு கொஞ்சம் ஓய்வைத் தந்தது. பொன்னம்பலவானருக்கு செர்க்கம் போய் ரம்பை,ஊர்வசி நடனம் பார்க்க ஆசையில்லை என்றாலும், சிரமப்படாமலும், மற்றவர்களுக்கு தொல்லை தராமல் போய்ச் சேரவேண்டும் என்பதில் ஆசை அதிகம்.இதுக்காக அவர் அடிக்கடி," சிவனே, சிவனே" என்று கூப்பிட்டு, காலனுக்கு ரெகமென்டேஸன் கடிதம் அனுப்பக் கேட்டுக் கொண்டார்.இப்ப பேரனும்,வயலும்தான் வாழ்க்கை என்று சுருக்கிக் கொண்டார். ஒரு நாள் மாலையில் இருந்து இரவு வரை சுப்பிரமனியன் தாத்தாவுடன் கொஞ்சி விளையாடித் தூங்கப் போனான். தாத்தாவும் அந்த சந்தோசத்திலேயே நிரந்தரமாய்த் தூங்கிப் போனார். ஆம் அவருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வந்து இறந்து போனார். மறுனாள் சடங்குகள் ஆரம்பமாயின. தாரை தம்பட்டை முழங்க பொன்னம்பலவானர் இறுதியாத்திரைப் போய்ச் சாம்பலானர். இது எதுவும் புரியாமல் மலங்க, மலங்க விழித்துக் கொண்டுருந்தான் சுப்பிரமனியன். தாத்தா இல்லாத வெறுமை அவனை வாட்டியது. தனிமைத் துக்கத்தைச் சொல்லவும் தெரியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தான். தாத்தா மடி போய்த் தந்தை மடி அவனுக்குச் செந்தமானது.

காரியங்கள் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் கறிவிருந்து படையல் அமர்க்களமாக ஆரம்பம் ஆகியது. சுப்பிரமனியனின் விளையாட்டுத் தோழனான ஆட்டுக்கிடாய் அறுக்கப்பட்டு, சுத்தம் செய்ய மஞ்சளில் ஊறிக் கறித்துண்டங்களாக கிடந்தது. சுப்பிரமனியன் திண்ணையில் உக்காந்து இருந்த தந்தையின் மடியில் அமர்ந்துக் கேட்டான்.

" அப்பா தாத்தா எங்கப்பா?"

" தாத்தா செத்துட்டாருடா."

" பொய் நீதான் தாத்தாவை தூங்கும் போது தூக்கிட்டுப் போயிட்ட, தாத்தா இனி வரமாட்டாராப்பா?"

" இல்லடா தாத்தா செத்துட்டாரு,செத்தா அதுக்குப் பொணம்னு பேரு, அதைக் கொண்டு போய் எரித்து விடுவேம் "

" ஏம்பா வீட்டுல வைக்ககூடாதா?,பொணத்த எதுக்கு எரிக்கனும்?."

" செத்துட்டா அந்த உடம்பு அழுக ஆரம்பித்து விடும்,அதுல கிருமிகள் வரும். உயிர் இருக்கும் வரைக்கும்தான் மதிப்பு, இல்லை என்றால் அது பொணம், வெறும் உடல்தான், என்று தன் மகனிடம் அவனுக்கு புரிகின்றதோ இல்லையே, தமது அறிவைக் கொட்டிக் கொண்டிருந்தார் அவன் தந்தை.

இது ஒன்றும் புரியாமல் விழித்த சுப்பிரமனியன், " அப்படின்னா ஆடும் செத்துருச்சா அப்பா?" என்றான். "ஆமாண்டா" என்று கூறியவர், வேலை வர எழுந்து சென்றார். காலியாகி இருந்த தாத்தாவின் சாய்வு நாற்காலியில் ஏறி அமர்ந்து விளையாட ஆரம்பித்தான்.அவ்வப்போது செத்த ஆட்டுக்கிடாயின் கறித்துண்டுகளைப் சேகமாய்ப் பார்த்துக் கொண்டுருந்தான். நல்லவேளை அவனுக்கு செத்துப் போன ஆட்டுக்கிடாயின் உடலும் செத்த பொணம்தான என்ற எண்ணம் வரவில்லை. இல்லை என்றால் அதை எரிக்காமல்,பொணத்தை ஏம்பா சாப்பிடுறாங்க என்று கேட்டுருப்பான்.

டிஸ்கி : இது நான் முதன் முதலில் எழுதும் கதை. பிழை இருந்தால் பொறுத்தும், குறை இருந்தால் சுட்டிக் காட்டவும்.

நடை, வளமை,இனிமை எல்லாம் இருக்காது. இதை உதாரனமாக வைத்து மூத்தவர்கள் கருத்துச் சொன்னால் திருத்திக் கொள்கின்றேன்.

உண்மையில் இது சிறுவயதில் எனக்கு வந்த சந்தேகம். செத்த ஆடு,மாடு, மீன் எல்லாம் பொணம்தானே என்பது என்னுடைய கருத்து. அதுக்காக பொணந்திண்ணியா என்று எல்லாம் கேக்கக் கூடாது. நன்றி. பித்தனின் வாக்கு- சுதாகர்.

Wednesday, January 6, 2010

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்

இந்த பதிவு பதிவர்கள் அனைவரும் படிக்க அல்லது பார்க்க வேண்டிய பதிவு ஆகும். வெள்ளியங்கிரி மலையில் நடைபெறும் ஒரு அற்புதத் தரிசனம் காண, ஏழு மலைகள் ஏறிப் படங்கள் பிடித்து, அவற்றைப் படங்களாக பதிவு இட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் அல்லது வணங்குங்கள்.


அந்த அதிகாலையில் ஆண்டி சுனையில் இருந்து புறப்பட்டு ஆறு மணியளவில் மலையுச்சியை அடைந்து, அங்கு உள்ள ஈசனுக்கு புது வஸ்த்திரம் சாத்தி, மாலைகள் அணிவித்து, பிரசாதமாக உலர் பழங்கள், மற்றும் முந்திரி,கற்கண்டு வைத்துவிட்டு, சூரியபகவானின் வருகைக்காகக் காத்து இருந்தோம். இந்த மலை உச்சியில் நாங்கள் சூரியனின் வருகைக்காக விழிகள் விரிய காத்து இருந்தோம். சூரியனும் மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.










மெல்ல மேகக்கூட்டங்களின் இடையில் சூரியன் வரும் காட்சி.











முக்கால் பாகம் உதயம் ஆகிவிட்டார்.














இதோ சூரிய உதயம் ஆகிவிட்டது.

இதுதான் இந்த மலையின் அற்புதம். உதயம் ஆகும் சூரியனின் அந்த முதல் ஒளி நேராக ஈசனின் மீது விழுகும். அந்த அரிய காட்சி. அங்கு அந்த குகையில் உள்ளே உள்ள சிவலிங்கத்தின் மீது அந்த முதல் சூரியக் கதிர்கள் விழும் அற்புதம்.










இப்படிச் சூரியனின் முதல் ஒளி ஈசனின் விழும் போது, தீபாராதனை காட்டப்படுகின்றது.
























இது போல சில நிமிடங்கள் மட்டும் தான் சூரிய ஒளி ஈசனின் திருவுருவம் மீது படும். பின்னர் சூரிய ஒளி மெல்ல மேலே சென்று விடும். இந்த அரிய தரிசனம் காணத்தான் இந்த நெடும் பயணம். நான் படம் எடுப்பதை பூஜை செய்பவர் பார்த்து விட்டார். சைகையால் படம் எடுக்காதே என்று தலையாட்டினார். நானும் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன்.
















பின்னர் நாங்கள் கிழே இறங்க ஆரம்பித்தோம். மதியம் பதினோரு மணிக்குள் கீழே சென்று விட்டால் வெய்யில் மலை இறங்கி சிரமப் படவேண்டியதில்லை என்பதால், பூஜைகள் முடித்து, பிரசாதம் உண்டு மலை இறங்க ஆரம்பித்தோம். இறங்கும் பாதை மழை ஈரத்திலும் பனியிலும் சத சதவென இருந்ததால் வேகமாக இறங்க முடியவில்லை. நான் ஒருமுறை கீழே விழுந்து எழுந்தேன்.


பின்னர் அனைவரும் பக்தி பரவசம் பொங்க கடவுளை வழிபட்டு கீழே வந்து அடைந்தோம். வரும் வழியில் இடையில் கோவனம் மட்டும் கட்டிய இளம் வயது சாமியார் ஒருவரைப் பார்த்தோம். இறங்கும் வழியில் ஒரு கடையின் அருகில் மலைப் பாதையில் அமர்ந்து இருந்தார். அவர் நீண்ட நாட்களாக யாரிடமும் எதுவும் பேசமாட்டார். சாப்பிட எதாவது கொடுத்தால், பிரியம் இருந்தால் வாங்கிக் கொள்வார். அல்லது சிரித்து விட்டு அமைதியாக செல்வார் என்று அருகில் இருந்த கடைக்காரர் சொன்னார். எனக்கு இதில் எல்லாம்(சாமியார்கள்) நாட்டம் இல்லை. நான் போகும் போது பார்த்துச் சென்ற முறுக்கு, நெல்லிக்காய்(மிளகாய்ப் பொடியில் ஊறியது), மாங்காய், நிலக்கடலை,பனங்கிழங்கு, லெமன்ஸோடா என சகலத்தையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டு வந்தேன்.இறங்கும் வழிபூராவும் நெறுக்குத்தீனிதான். எங்கள் குழுவினர் அவரிடம் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரிகளைக் கொடுத்தார்கள். அவர் புன்சிரிப்புடன் அதை வாங்கியவர், ஒரு நிமிடம் தன் உள்ளங்கையில் வைத்து கண்மூடித் தியானித்து விட்டுப் பின்னர் அந்தப் பொட்டலங்களைப் பிரித்து எங்களை அழைத்துப்(சைகையில்) பிரசாதமாக கொடுத்தார். பின்னர் மீதம் இருந்ததை அங்கு இருந்த குரங்குகளிடம் கொடுத்தார். அவரைச் சுற்றி ஒரு ஜம்பது குரங்குகளுக்கு மேலே வந்து வாங்கியதை என் கண்களால் பார்த்தேன். இந்த அரிய காட்சி புகைப்படமாகவும் எடுத்தோம். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தால் சுற்றி இருந்த குரங்குகளைக் காணவில்லை. உங்களின் கண்களுக்குத் தெரிகின்றதா என்று பாருங்கள். நன்றி.









இத் தொடரை நீங்கள் அனைவரும் இயற்கை அழகுடன் இரசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனியும் நல்ல விசயங்களை உங்கள் ஆதரவுடன் மீண்டும் சந்திக்கின்றேன். நன்றிகளுடன் பித்தனின் வாக்கு - தி.சுதாகர்.

Monday, January 4, 2010

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8

நல்ல உறக்கத்தில் இருந்த நான் சிறிது சத்தம் கேட்டு கண் விழித்தேன். அதிகாலை நாலு மணி, அனைவரும் சுவாமி மலை யாத்திரைக்காக கிளம்ப ஆயத்தம் ஆகிக் கொண்டுருந்தனர். என் பக்கத்தில் படுத்திருந்த அண்ணாவைக் காணவில்லை. அவர் பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றுவிட்டார். நான் எழுந்து பல் விளக்கி, டீ குடிக்கச் சென்றேன். வெளியில் நல்ல உறைபனி,ஆனாலும் இரவு அடித்த கூதக் காற்று இல்லாததால், நடுக்கம் இல்லை. டீக்கடையில் அடுப்பின் இதத்தில் பக்கத்தில் உக்காந்து கொண்டுருந்த அண்ணாவின் பக்கத்தில் நானும் ஒண்டிக் கொண்டேன். "நல்லா தூங்கினியா?.இரவு தூங்காதால் தூங்கட்டும்,இன்னும் ஒரு அரைமணியில் எழுப்பலாம்", என்று விட்டு விட்டேன் என்றார். நானும் அவருடன் அங்கு விற்ற தேனீர் அருந்தினேன். சும்மாச் சொல்லக்கூடாது பால் இல்லாமல் வெறும் தெள்ளிய டீ வடினீர்,அதில் சுக்கு கலர்ந்த கறும்புச் சக்கரை(நாட்டுச்சக்கரை)யும், ஒரு அலாதியான சுவையைத் தந்ததன. கொதிக்க கொதிக்க தந்த டீ குளிருக்கு இதமாக இருந்தாலும், பாதிக் குடிப்பதற்க்கு உள்ளாக சூடு ஆறிப் போனது. டீக்கடையில் அந்த அதிகாலையிலும் அன்று வரும் பக்தர்களுக்காக சூடாக முறுக்கு போட்டுக் கொண்டு இருந்தார். வெறும் அரிசி மாவு, மிளகு, உப்பு, கொஞ்சம் மிளகாய்ப் பொடி ஆகியவற்றைக் கொண்ட சிவப்புக் கலர் முறுக்கு வாசனை என்னைத் தூண்டியது. என் வயிற்றைக் கருதியும், நேரங் கெட்ட நேரத்தில் சாப்பிட்டால் அண்ணா திட்டுவாரென்னும் பயத்திலும் சாப்பிடவில்லை. பின்னும் உயரமான செங்குத்தான சுவாமி மலை அடுத்து ஏறவேண்டும் என்பதால் அந்த ஆசையைக் கை விட்டேன்.

டீ குடித்து முடித்து, என் அண்ணா வா ஆண்டீ சுனையில் குளிக்கலாம் என்றார். நான் இரவு அனுபவத்தால் கொஞ்சம் யோசித்தேன். அண்ணா "பயப்படாமல் தைரியமாக் குளி. ஒன்னும் ஆகாது. சுனைத் தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது, மற்றும் குளித்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாகி விடும்" என்றார். முதலில் குளிக்க போது கொஞ்சம் குளிரும், பின்னர் சரியாகி விடும் என்றும் சொன்னார். நானும் இந்த ஆண்டி சுனையில் குளிக்கப் போனேன். ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாங்கள் போகும் காலங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர் அதிகம் ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து, அப்பத்தான் பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும். அதில் இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை,கால்களில் நனைத்துக் கொண்டால், உடல் சமனிலை அடைந்தவுடன் குளிக்கலாம். அது இல்லாமல் எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், சில சமயம் விறைத்துக் கூடப்போகலாம். அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். குளிப்பவர்கள் இந்த தேங்கிய தண்ணீரிலும், குடிக்க தண்ணீர் எடுப்பவர்கள் இதுக்கு மேல் பக்கத்தில் பாறைக்கு அடியில் சுனையிலும், கை கால் கழுபவர்கள் தண்ணீர் தேங்கி வடியும்(பின்புறம்) இடத்தையும் பயன்படுத்துவார்கள். நல்ல அற்புதமான தண்ணீர், ஆனால் இதன் ஓரங்களில் நிற்கும் போதும்,சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம்.என் தந்தை செல்லும் காலத்தில் இந்த சுனையில் தண்ணீர் அதிகம் இருக்குமாம். ஆண்டி சுனையைக் கடக்க இரண்டு பனை மரங்களைக் குறுக்காக வெட்டிப் பாலம் போல வைத்து இருப்பார்களாம்,அதில் மிக ஜாக்கிரதையாக நடந்து போகனுமாம். தவறி விழுந்து காட்டாற்றில் அடித்து போனவர்கள் அதிகம். என் தந்தையின் கண் முன்பாக ஒருவர் விழுந்து, காப்பாற்ற நினைப்பதற்க்குள் அடித்துக் கொண்டு போனாராம். ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு. குறைந்த பட்சம் வருங்கால சந்ததினருக்காவது நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் படத்தில் நான் குளிக்கும் போது உள்ள மேகக்கூட்டங்களை வைத்து குளிரை அறியலாம்.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)

நான் இந்த ஆண்டி சுனையில் குளித்து, சுவாமியை வணங்கிப் பின்னர், யாத்திரையின் இறுதிப் பகுதியான சுவாமி மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேம். இந்த சுவாமி மலை மிக உயரமான, ஒரு புறம் சரிவாகவும், மறுபுறம் மிக ஆழமான பள்ளத்தாக்கும், அடர்ந்த காடும் உடையது. இது செல்லும் வழியில் தான் ஒட்டன் சமாதி என்று ஒருவர் சமாதி உள்ளது. இங்கு ஒட்டன் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சாமியார் வசித்ததாகவும், அவர் இறந்தவுடன் அங்கு சமாதி வந்ததாகவும் கூறுகின்றனர். அனால் அங்கு வசிக்க இயலாத சூழ்னிலை, ஆதலால், அவர் ஒரு சாமியார் ஆக இருந்து இருக்கலாம், மலையாத்திரை வந்த இடத்தில் முதுமை காரணமாக இறந்தும் இருக்கலாம். அந்தக் காலத்தில் உடலைக் கொண்டு செல்ல வசதி இல்லாததால், அங்கு புதைத்து, அதில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நாங்கள் புதுத்துண்டு சார்த்தி, கற்பூரம் ஏற்றி வழிபட்டேம். பின்னர் அங்கு அமர்ந்து சிறிது இளைப்பாறி விட்டுப் புறப்பட்டேம். ஒரு வருடம் இங்கு இரவுப் பயணத்தின் போது, நாங்கள் இது போல இளைப்பாறிக் கொண்டு இருந்தோம். அப்போது கோவை நகரில் பவர் கட் ஆகி இருளில் இருந்ததது. திடிரென்று கரண்ட் வர விளக்குகள் மள மளவென எரியத் தொடங்கியது. முதலில் என் அண்ணா கவனித்து சொல்ல, நாங்கள் பார்த்த வினாடியில் மொத்த விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டன. ஒரு சில விநாடிகள்தான் இது நடந்தது என்றாலும், இது ஒரு அற்புதமான காட்சி. இங்கு இருந்துதான் நகரின் இரவுப் படம் எடுக்கப் பட்டது.

இந்தப் பாதையில் செல்லும் வழியில் ஜந்து உருண்டைப் பாறைகள் இருக்கும், ஒரு பாறை மிகவும் பெரிய உருண்டையாகவும், இன்னெருப் பாறை அதை வீடச் சின்னதாக ஒழுங்கற்றும் இருக்கும். இதில் பெரிய பாறை பீமன் களியுருண்டை எனவும், சிறிய பாறை அச்சுனன் களியுருண்டை எனவும் அழைக்கப் படுகின்றது. இது அவர்கள் வன வாசத்தின் போது அவர்களின் உணவு என்றும், அது பாறையாக மாறிவிட்டது எனவும் கூறுகின்றார்கள். இது ஒரு வழமைக் கதை என்றுதான் கொள்ள வேண்டும்.ஜந்து உருண்டைகள்தான் இருக்கு, ஒருவேளை திரெளபதி டயட்டில் இருப்பார்கள் போல, அதுனால அவங்களுக்கு இல்லை.ஆனாலும் பீமனின் சாப்பாடு ரொம்ப அதிகம். நமக்கு ஒரு வருசம் வரும் போல இருக்கு. நாங்கள் சென்றபோது மழை இல்லை என்றாலும் அதற்கு முன்னர் ஒருவாரம் விடாமல் மழை பெய்து இருந்ததால் அங்கு பாதை முழுதும் சத சத என வழுக்கலாக இருந்தது. நாங்கள் பாதையை வீட பக்கத்தில் இருந்த புற்களின் மீதுதான் நடந்தேம். தடியை நன்று ஊன்றிக் கவனமாக நடக்க வேண்டி இருந்ததால் மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும் ஏறினோம். ஈரமான பாதையில் கொஞ்சம் வழுக்கி விழுந்து உருண்டால் நாம் எங்கு போய் சேருவேம் என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் நாங்கள் ஆறு மணிக்கு எல்லாம் சுவாமி மலை உச்சிக்குச் சென்று விட்டேம்.



இந்த சுவாமி மலை மிக செங்குத்தாக இருக்கும். ஒரு புறம் ஏறும் வழி சரிவாகவும், மறுபுறம் மிக ஆபாயமான பள்ளத்தாக்கு ஆக, கீழே அடர்ந்த காடு இருக்கும். கூட்டம் அதிகமான காலங்களில் இங்கு பலர் கூட்ட நெரிசிலில் சிக்கி விழுந்து இறந்து உள்ளனர். ஆனால் இப்போது பக்கதர்கள் கொண்டு வரும் வேலில் ஒரு பாதுகாப்பு தடுப்பு அரண் ஒன்றை அமைத்துள்ளனர். ஆதலால் இதில் விழுந்து இறக்கும் ஆபாயம் இல்லை. இந்த உச்சியில் இரு மிகவும் பெரிய பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சரியாமல் கோபுரம் போல இருக்கும். இதன் அடியில் இடைவெளி இருக்கும். இதை சிலாதோரணம் எனவும், தோரணவாயில் எனவும் அழைப்பார்கள்.மலையைச் சுற்றி ஏறுவபர்கள் இந்த தோரணவாயில் உட்புறமாக நுழைவார்கள். இங்கு செயற்கையாக செய்யப் பட்ட லிங்கங்கள் கோவில் போல வைத்து வணங்குவார்கள். இதில் ஒரு பெரிய பாறையின் அடிப்பகுதியில் தான் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் ஒரு மொட்டுப் பாறை போன்ற லிங்கத்தின் மேற்ப்பகுதிதான் வெள்ளியங்கிரிஸ்வரர் என அகத்திய மாமுனிவரால் வணங்கப் பட்ட சிவலிங்கம் உள்ளது. இங்கும் செயற்கை லிங்கம் ஒன்றும் பிரஸ்திஸ்டை செய்யப் பட்டுள்ளது. நாம் நாளைய பதிவில் இந்த ஈசனின் திருவுருவும், அங்கு நடக்கும் ஒரு அதியசமும் காணலாம். நாளைய பதிவை அனைவரும் தவறாமல் (படிக்க) காணவும். நன்றி.