Thursday, September 24, 2009

இப்படியும் ஒரு காதல் - இது கவிதையா? கவுஜயா?

நான் உன்னை பார்த்து வியந்த போது
நீ மண் பார்த்து நின்றாய்!
நான் உனைப்பார்க்க வரும்போது எல்லாம்
நீ தலைகுனிந்து சென்றாய்!

நான் உனைப்பார்த்து நகைத்தபோது
நீ மறுபக்கம் பார்த்து நகைத்தாய்!
நான் உனைதேடி வரும்போது எல்லாம்
நீ போவதுபோல் காத்து இருந்தாய்


நம் கண்கள் கலந்த போதுதான்
மின்னலையே கண்டுபிடித்தனர்.
நம் கைகள் பற்றினபோதுதான்
மின்சாரத்தையே கண்டுபிடித்தனர்.

நாம் கருத்துபரிமாற்றத்தின் போதுதான்
இலக்கியம் பிறந்தது
நாம் பேசும்போது எல்லாம்தான்
கவிதைகள் பிறந்தன.

எல்லாம் மாறிப்போய்விட்டது
உன் தந்தையின் வடிவில்
அவர் உனக்கு சாலையிட்டார்
அவர் எனக்கு பாலைய்ட்டார் (பாலைத்தினை)

நான் காதல்கடிதம் கொடுக்க
நீயோ உன் மணஓலை கொடுத்தாய்.
நான் மனதுக்குள் அழுது
முகத்தில் சிரித்தென்.

நீ உதட்டில் சிரித்து விழியில் அழுதாய்.
நீ உன் மனாளனின் கரம் பிடிக்க
நான் நெப்போலியனின் கரம் பிடித்தென்
என் கல்லறையில் இடம் பிடித்தென்.

டிஸ்கி: இதை நீங்க கவிதை என்று நினைத்தால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.