Tuesday, September 22, 2009

வருங்கால உலக ஜானாதிபதி- நான்

வணக்கம் நண்பர்களே. என் நாலம் வகுப்பு படிக்கறப்ப ஒரு சம்பவம் உங்ககிட்ட பகிர்ந்துகொள்ள விரும்புறன். அப்ப எல்லாம் எனக்கு சிவாஜி சாரையும், இந்திரா அம்மாவையும் ரொம்ப புடிக்கும். ஏன் புடிக்கும்னு காரணம் எல்லாம் கேக்கப்படாது. புடிக்கும் அவ்வளவுதான்.(எனக்கே தெரியாது).

எங்க தெருவுல தியாகி முனுசாமிபிள்ளை ஒருத்தர் இருக்கார். எங்க குடும்ப நண்பர், எனது ஆருயிர் தொழனின் தாத்தா. அவருடன் எனக்கு பழக்கம் அதிகம்.அவருக்கும் என்னை ரொம்ப புடிக்கும்.(எனக்கு ஒன்பது, அவருக்கு ஜம்பது(வயசுதாங்க) அப்போது அவர் காங்கரஸில் செல்வாக்கு உள்ள அரசியல்வாதி, எம்.சி யாக இருந்தார். அவர் வீட்டீல் இருந்துதான் பிரச்சாரம் தொடங்கும். கார்களில் வந்து அவரை பிரச்சாரத்துக்கு அழைத்துசெல்வார்கள். ஒருமுறை நான் அவர்கள் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தென்,அப்பொழுது அவர் எனக்கு வழக்கம் போல் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் போட்ஜ் ஒன்றைக்கொடுத்தார். நான் அப்ப தெர்தல் சமயத்தில் அதை சட்டையில் குத்திக்கொள்வது வழக்கம். அன்றுமாலை வழக்கம் போல போட்ஜ் குத்தி அவர் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தென்,அப்போது மாலை ஆறு மணி இருக்கும், அவரை பிரசாரத்திற்கு அழைத்துச்செல்ல கார் வந்தது, அதில் நானும் ஒரு ரவுண்டு போற ஆசையில ஏறிக்கிட்டேன். அவங்க பிராசாரம் தொடர்ந்து இரவு பத்து மணிவரை நடந்தது. நான் வீட்டிற்கு திரும்ப முடியாமல் நல்லா மாட்டிக்கிட்டேன்.

நான் எப்பவும் எங்க வீட்டை சுத்தி இருக்கற நாலு தெருவுலையும் எந்த வீட்டுக்குள்ளையும் போற ஆசாமி. எந்த வீட்டுல போய் என்ன வோனா எடுத்து தின்னுட்டு அறைமணி நேரம் அங்க இருக்கறவங்க கூட கதை அடித்துவிட்டு வருவென், நல்லா பேசக்கூடிய சின்னப் பையன்னு நம்மளை தனியா கவனிப்பாங்க, அவங்க வீடுகளுக்கு போகலனாதான் கோவிச்சுகுவாங்க, அதானால எங்ககையாது ஒரு வீட்டுல இருப்பான் விட்டுட்டாங்க ஆனா எட்டு மணிக்கு மேல நான் வீடு திரும்பவில்லை, அதுக்குள்ள இங்க எங்க வீட்டுல பையன கானமுன்னு ஒரே காலாட்டா, எல்லா இடத்துலையும் தெடி இருக்காங்க,அதானல் ரொம்ப கவலைப்பட்டு எனது மூன்று சகொதரிகள், நாலு சகொதரகள் அம்மா,அப்பா, சித்தப்பா, மாமா, பாட்டி என ஒரு படையே என்னை தெடி இருக்காங்க. ஒரு ஒன்பது மணிக்கு எங்க தெருவுல இருக்க கீரைக்காரம்மா என்னும் ஜனதாகாரம்மா நாங்க பிரச்சாரம் பண்ண இடத்தில் பிரச்சாரம் பண்ணீட்டு திரும்பிபோய் இருக்காங்க அப்ப என் வீட்டுவாசல்ல இருக்க கூட்டத்தை பார்த்து என்ன என்று கேட்டு, இவங்க கிட்ட நான் தியாகி முனுசாமிபிள்ளை அவர்களுடன் காங்ககிரஸுக்கு ஓட்டு கேக்கற விசயத்தை சொல்லி இருக்காங்க, அதுக்கு அப்புறம் எங்க வீட்டுல சமாதானம் ஆகி அமைதியாய்ட்டாங்க. நான் போன கார் திரும்பி வர இரவு பத்து மணி ஆகிவிட்டது. என் தந்தை மிகவும் கோவமாக என்னை சொல்லாமல் போனத்ற்காக என்னை அடிக்கோலால் காலில் அடித்தார். எனது நாற்பது வயது வரை உயிருடன் இருந்த எனது தந்தை என்னை முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை அடித்த சம்பவம் இது. எங்க அம்மா என்னை தன்மடியில் உக்காரவைத்து செல்லமாக இனிமேல் எங்கயாவது போவதாக இருந்தால் அம்மாவிடம் சொல்லிவிட்டுதான் போகவேண்டும் என்றார். அதுமுதல் நான் எங்க அம்மாகிட்ட சொல்லாம எங்கயும் போறது கிடையாது. நம்ம எல்லாம் ஒன்பது வயசுல ஓட்டுகேக்கப் போன ஆளு, அதுனால அடுத்து நடக்கப்போற உலக ஜானாதிபதி தெர்தல எனக்கு ஓட்டுபோட்டுங்க.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.