எனக்கு இந்தத் தொடர் விளையாட்டுக்கள் பிடிக்காது. ஏன் என்றால் இதனால் சற்றுப் பொழுது போவதைத் தவிரச் சொல்லவே, பகிரவோ எதுவும் இல்லை,என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பதிவர்கள் இந்தத் தொடரில் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதும் புரியவில்லை.
பதிவர்கள் இத்தொடரில் ஒருவரைப் பிடிக்காது என்பதால், அவருக்குப் பிடிக்காதவர் உணர்ந்து மாறிவிடுவாரா? அல்லது இவருக்கு பிடிக்கும் என்பதால்தான் தொடர்ந்து அப்படியே சேவை செய்யப் போகின்றாரா எதுவும் இல்லை, பின் எதுக்கு? சரி பிடிக்கும், பிடிக்காது என்பதை வைத்து ஒரு பதிவரின் குணாதியசத்தைக் கணக்கிடலாமா, என்றால் அதுவும் முடியாது. மனிதர்களில் பலரும் கடவுள் பாதி, மிருகம் பாதி வகைதான். வாய்ப்புக் கிடைத்தால் தவறு செய்யும் சராசரிகள்தான். ஆனாலும் பலரும் படிக்கும் பதிவில் தங்களின் கடவுள் குணத்தைத் தான் காட்ட முற்படுவார்கள். இதில் நாம் அவரைக் கணிக்க முடியாது. எதே பொழுது போகுது என்பதுதான் இத்தொடர்கள். எங்க மச்சானும் சந்தைக்குப் போனார் என்பது போல நானும் தொடர் போட்டேன் என சந்தோசப் படலாம், என்பதைத் தவிர வேற எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனக்கு சிலுக்கு ஸ்மிதா புடிக்கும் என்று எழுதினால் நான் கெட்டவனும் ஆகவும் மாட்டேன், கே ஆர் விஜயாவின் அம்மன் வேடம் புடிக்கும் என்றால் நான் நல்லவனும் இல்லை. பின் எப்படி கணிப்பது. நம் இதர பதிவுகள், கருத்துக்கள், பொதுவான எண்ணங்களில் யதார்த்தங்கள் ஆகியனவும், நம் நல்ல நடத்தையும் தான் நம்மை கணிப்பவை. நமது புறத் தோற்றங்கள் மற்றும் நமது வெளிப் பாடுகள் அல்ல. எனது இந்த கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
ஆனாலும் என்னை இத் தொடருக்கு அழைத்தது என் அன்புத்தங்கை சுசி, ஆதலால் நானும் இத்தொடரில் கில்லியடிக்கின்றேன். அப்புறம் அவர் போயும் போய் இந்தப் பைத்தியத்தைப் (பித்தன்)போய்க் கூப்பிட்டேன் பாரு என்று நினைக்கக் கூடாது அல்லவா. ஒளிவு மறைவு இன்றி மனம் திறக்கின்றேன்.
1. அரசியல் தலைவர்
பிடித்தவர்கள் :-காமராஜ், கக்கன்,தோழர் ஜீவானந்தம், இரா.செழியன்,நல்ல கண்ணு மற்றும் வை கோ ( மோடி எனக்கு பிடித்த தலைவர், அடால்ப் ஹிட்லரையும் மிகவும் புடிக்கும்)
பிடிக்காதவர்கள் :- ஊழலில் வயிறு வளர்க்கும், எந்த பிணம் திண்ணும் நாய்களையும் எனக்குப் பிடிக்காது.
2. எழுத்தாளர்
பிடித்தவர்கள் :- கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன்,சுஜாதா, பீ வி ஆர். சோ மற்றும் மாத்ரு பூதம் (புதிரா புனிதமா)
பிடிக்காதவர்கள் :- இளைஞர்களைக் கெடுக்கும் ஆபாச எழுத்தாளர்கள்.
(ஒரு வரியில் ஒன்பது தப்பு செய்யும் பித்தனின் வாக்கு சுதாகர்--எழுதுவதில் இன்னமும் திருப்தி வரவில்லை)
3. கவிஞர்:
பிடித்தவர்கள் :- கண்ணதாசன், வைரமுத்து, எழுத்தோசை தமிழரசி, கவிதாயினி ஹேமா, கலகலப் பிரியா மற்றும் கயல்விழி நடனம்.
பிடிக்காதவர்கள்:- ஆபாசப் பாடல்(இரட்டை அர்த்தம்) எழுதும் அனைவரும்.
4. இயக்குனர்:
பிடித்தவர்கள் :- நாகராஜ ராவ் (திருவிளையாடல் ) பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர். கர்ணன்(சிறிது ஆபாசம் இருக்கும்), மணிரத்தினம் அண்ட் மணிவண்ணன்.
பிடிக்காதவர்கள்:- ஜோஸி, கோபால கிருஷ்னன். (மக்கா ஒரு பிட்டுப் போட ஒருமணி நேரம் அறுப்பாங்க).
5. நடிகர்:
பிடித்தவர்கள் :- என்றும் சிவாஜி. அண்ணன் ரஜினி காந்த், விக்ரம், மம்முட்டி , கமல் (நடிப்பு மட்டும்)
பிடிக்காதவர்கள்: - சரியா சொல்லத் தெரியலை. நம்ம அருண் பாண்டியன்,ராஜ் கிரண் மாதிரி எல்லாத்துக்கும் ஒரே ஆக்சன் பண்ணுவபர்கள்.
6. நடிகை:
பிடித்தவர்கள் :- ஜெயந்தி, தேவிகா,வென்னிற ஆடை நிர்மலா, ஜெயப்பிரதா, பானுப் பிரியா, கனகா, சோபனா,மீனா மற்றும் கண்கள் அழகாய் உள்ள அனைத்துப் பெண் நடிகைகள்(பெண்களும்) பிடிக்கும். ஜெயபாரதி ரொம்ப புடிக்கும். சில்க் ஸ்மிதாவின் வசிகரமான கண்கள்.
பிடிக்காதவர்கள் :- இதுவும் கண்ணுதான், அதுல எப்பவும் கண்ணீர் கொட்டுற அழுகாய்ச்சி நடிகைகள் புடிக்காது உதாரணம் கண்ணாம்பா ஆனால் இவர் மிகவும் திறமையான நடிகை. கோலங்கள் அபி. சுஜாதா, வரலட்சுமி.
7.இசையமைப்பாளர்:
எல்லா மெலோடி இசையமப்பாளர்களையும் பிடிக்கும்.
சாவு மேளம், டப்பாங்குத்து இசைக்கும் இசையமைப்பாளர்களைப் புடிக்காது.
8. பாடகர்:
என்றும் யேசுதாஸ், வீரமணி, பாலமுரளி கிருஷ்னா, சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,சிதம்பரம் ஜெயராமன், பிபி ஸ்ரீனிவாஸ். ஏ.எம்.இராஜா, அந்த குடுமி பாடகர் பெயர் என்ன அவரின் படல்கள் ரொம்ப புடிக்கும் (வென்னிலவே வென்னிலவே - மின்சாரக் கனவு)(கலோனிகல் கஸின்ஸ்)
பிடிச்ச லிஸ்ட் அதிகம் ஆனா பிடிக்காதவர்கள்- குத்து பாடும் பாடகர்கள்.
9. பாடகி:
பிடித்தவர்கள் :- பானுமதி, ஜமுனா, ஜானகி, சித்ரா, சாருலதா, அவரின் தங்கை(பெயர் தெரியவில்லை) , எல் ஆர் ஈஸ்வரி. எவர் கீரீன் பாடகி பி. சுசிலாம்மா, மகானதி சோபனா மற்றும் நித்தியஸ்ரீ.
பிடிக்காதவர்கள் :- நல்ல திறமை இருந்தும் காசுக்காக கத்தும் மாலதி (மன்மத ராசா). இன்னும் குத்துப் பாட்டில் முக்கி முனகும் பாடகிகள்.
10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்கள் :- ஸ்ரீகாந்த், யஸ்பால் ராணா, தெண்டுல்கர். ரெய்னா, அனில் கும்ளே, வெங்சங்கார், குண்டப்பா விஸ்வனாத். செக்ஸ் (சாரி) செஸ் ஆனந்த். நம்ம அண்ணாத்தே கபிலு. சின்ன அண்ணார் அஸாருத்தின்.
பிடிக்காதவர்கள் :- ஹாராத்து ஹர்பஜன் சிங், தலைக்கனம் சுனில் காவஸ்கர்,யுவராஜ் மற்றும் இரவி சாஸ்த்திரி.
அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது. எதோ நான் மூனு பேர டீல்ல விடனுமாம்மில்ல யாரை மாட்டலாம் ஆங்க்க்க்க்க்க்
மூனு பேரு வேண்டாம் நம்ம நாலு பேருக்கு நல்லது பண்ணமுன்னு பேரு வரனுமில்லை, அதுதானய்யா முக்கியம்
அந்த நாலு நல்லவிங்க யாருன்னா
நம்ம இளமுருகு தம்பி, (அப்பாவியை மாட்டி விடனும் இல்லையா)
நம்ம சுரு ஸ்ரீ சுவையான சுவை அக்கா,
நம்மளை அன்பாய் மிரட்டும் திருமதி.துளசி டீச்சர்.
அப்புறம் ஒரு நல்ல பையன் மாதவிப் பந்தல் கே ஆர் எஸ்.
நாலு படிச்சா ஒரு பதிவு இலவசம்,இலவசம்
எங்க ஊரு அம்மிணி, கொங்கு மண்ணின் சிங்கம், தாரையின் தங்கம், என் சமையலறையில் பதிவர், திருமதி தெய்வ சுகந்தி அவர்கள்.
ஹையா எதோ என்னால முடிஞ்ச ஜந்து பேரை மாட்டி விட்டுட்டேன்.
பின் குறிப்பு : எனது கருத்துக்களின் காரணமாக அல்லது நான் மாட்டிவிட்ட பதிவர்கள் யாராயிருந்தாலும் எனக்கு ஆட்டோ அனுப்பும் போது மருத்துவச் செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்(கொல்கின்றேன்) - உங்களுக்காக இன்று இரண்டு பதிவுகள், அவன் தான் மனிதன் பாகம் 4 படிக்கவும் நன்றி.