Monday, March 29, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 11




















சக்திமூலங்களின் சுழற்சிதான் வாழ்க்கை, சக்திமுலங்கள் நம்மிலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் வியாபித்து இருக்கின்றன. இதையேதான் அங்கும் இங்கும் என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளே என்று பாடியதை அறிவேம். அனைத்து சக்திமூலங்களால் தோன்றியவை என்பதால் தான் குரான் இறைவன் மிகப் பெரியவன், அவன் தன்னில் இருந்து இந்த நிலத்தையும்,நீரையும்,ஆகாயத்தையும், அனைத்தையும் எமக்காக படைத்தான். என்று கூறியுள்ளது. பழைய ஏற்ப்பாடுகள் கூட பரம்பிதாவின் தன்மையை எல்லையற்ற சக்தியாக வடிமைக்கின்றது. நாமும் ஆதிசக்தியாக, பரம்பொருளாக, ஓளியாக பார்க்கின்றேம். இதில் நாம் மட்டும் உருவ வழிபாடுகள் மூலம் கொஞ்சம் வேறுபடுகின்றேம். அதையும் பின்னர் பார்ப்போம். இப்போது சக்திமூலம் தான் இறுதி என்பதும், இது பிராண சக்தி,ஆன்ம சக்தி என்று வகைப் படுத்தியும் பார்த்தோம். பிராண சக்தி பற்றி முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டேன். இனி ஆன்ம சக்தி பற்றிப் பார்ப்போம்.

இந்த ஆன்ம சக்தி உடலில் எந்த பாகத்தில் இருக்கின்றது, என்ன உருவத்தில் இருக்கின்றது என்பது உறுதியாக கூற முடியாது. இது நம் உடல் முழுதும் உலா வரக் கூடியது. இது ஒரு அலைவரிசை போல உடல் முழுதும் பயனிக்கும் தன்மை வாய்ந்தது. கண நேரங்களில் பயணம் செய்யும் வல்லமை பெற்றது. இந்த ஆன்ம சக்தியினை நாம் பெரும்பாலும் உணர்வது இல்லை. நாம் மனது மற்றும் எண்ணங்கள் வழி நடக்கும் போது இந்த சக்தி பெரும்பாலும் அமிழ்ந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும். நாம் இதை உணர முடியாது. எப்போது நமது மனம்,எண்ணம் மற்றும் செயல் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றதே அப்போது மட்டும் ஒரு சில விநாடிகள் இதை நாம் உணரலாம். இந்த உணர்தலின் வெளிப்பாடு, பரவசம் அல்லது உடல் சிலிர்த்தல் போன்றவைகளால் தெரியும். மலைகளில் பயணம் செய்யும் போது,இயற்கையை இரசிக்கும் போது, முழு மனதுடன் கடவுளை வணங்கும் போது, முழு மனதுடன் அல்லது முழு வேட்கையுடன் கலவியில் ஈடுபடும் போது, நம் மனதுக்கு விருப்பமான செயல்களை செய்யும் போது என பல நேரங்களில் வெளிப்படலாம். இது எல்லாம் ஒரு சில விநாடிகள்தான் அனுபவிப்போம். இதை மனிதன் கண்டறிந்து அவன் உருவாக்கியது கோவில்கள் ஆகும். மனிதனின் இந்த ஆன்ம சக்தி எங்கு எங்கு வெளிப்படுகின்றது என்றும் எவ்வாறு வெளிக் கொணர முடிகின்றது என்றும் அவன் தொடர்ந்த ஆராய்ச்சிதான் கோவில்கள். சக்தி மூலங்கள் பெருகும் இடமாக கோவில்களை வடிவமைத்தான். இது போல வடிவமைக்கப் பட்ட கோவில்களுக்குச் சென்றதும் நம் மனம் பரவசமைடையும். அது வேறு ஒன்றும் இல்லை. இது கோவில்தான் என்று இல்லை, எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருந்தும்.















எப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம். சராசரி மனிதர்களுக்கு இது ஒரு விநாடியில் ஏற்ப்பட்டு மறையும். இது அவர்கள் அறியாமல் கூட நடக்கும். நடந்தாலும் புற விஷயங்களான பூஜை,புனஸ்காராம், பிரசாதம்,கலை,சிற்பம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் இந்த நிகழ்வை நாம் புறக்கணிக்கின்றேம். கோவில் என்பது பூஜைகளுக்கு மட்டும் அன்று நம் மன அமைதிக்காகவும் தான். ஆதலால் நாம் சிறிது நேரம் கருவறை அருகில்(முடிந்தால்) அல்லது பிரகாரத்தில், கொடிமரம் அருகில் அமைதியாய் உக்காந்து வருவது மிகவும் அவசியம். இந்த அமைதியான எண்ணங்களற்ற தன்மை, நம் சக்தி மூலங்களை தூண்டி, பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும். இது கோவில்களில் மட்டும் அல்ல உயர்ந்த மலைகளிலும் கிட்டும். எங்கு எல்லாம் எரிமலைகளால்(செம்மண் கரடுகள்) ஆன மலைகள் இருக்கின்றதே அங்கு எல்லாம் சக்தி மூலம் உஷ்ணமாகவும், எங்கு எல்லாம் பாறைகள் உள்ள மலைகள்(மடிப்பு மலை அல்லது படிவுப் பாறைகள்) உள்ளதோ அங்கு எல்லாம் குளுமையான அருமையான, சக்தி மூலங்கள் கிட்டும். சபரி மலை,திருப்பதி, கொல்லி மலை, பர்வதராஜ மலை,சதுரகிரி,வெள்ளியங்கிரி மலை,திருவண்ணாமலை,பழனிமலை, ஸ்ரீசைலம் போன்ற தென்னக மலைகள் எல்லாம் உஷ்ணம் நிறைந்த சக்தி மூலங்களைக் கொடுக்கும் மலைகள். இமயமலை மிகவும் குளுமையான சக்தி மூலங்கள் நிறைந்தது.

மலைகளைப் போலவே, இடங்களுக்கும் சக்தி மூலங்கள் வேறுபடும். இதை வைத்துதான் கோவில்களில் வித்தியாசமும், வழிபாடுகளில் வித்தியாசமும் இருக்கும். சக்தி மூலங்கள் மிகுந்த இடங்களில் கோவில்களை அமைப்பது மூலம் மிகுந்த பயனை அடையலாம். கோவில்கள் அவை கட்டப்பட்ட முறைகள், அங்கு உருவாகும் எண்ண அலைகள், நமது மனதின் செயல்கள் ஆகியவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு இந்த உண்மை புரியும். இந்த சக்தி மூலங்களை இன்னும் ஒரு விதத்தில் சொல்லலாம். நமது எண்ண அலைகளால்,செயல்களால் சக்தி மூலங்கள் ஏற்றம் அல்லது குறைவு அடைகின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா?. இது போல நம் சக்தி மூலங்கள் நம் உடலில் பயணிக்கும் போது உஷ்ணமும், ஓளியும் வெளிப்படுகின்றன. நமது உடலில் இருந்து நிறங்கள் அல்லது ஒளிவட்டங்கள் வெளிப்படும். ஓளிவட்டம் என்றதும் கடவுளில் தலைக்கு மேலே இருக்கும் ஓளிவட்டம் மாதிரி இல்லை. நம் உடலை சுற்றிலும் ஒரு வித நிறங்களை வெளிப்படுத்தும். இந்த நிறங்களைப் பற்றியும், அவை தன்மை பற்றியும் நாம் அடுத்த பதிவில் பார்ப்போம். தொடரும். நன்றி.

16 comments:

  1. நல்ல ஆராய்ச்சி.

    ReplyDelete
  2. /////எப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம்./////


    .......இதோ பார்ரா......அண்ணாச்சியை.......ஆன்மீக தூணிலும் இருப்பார்...... மொக்கை துரும்பிலும் இருப்பார்.......! அசத்தல், அண்ணாச்சி! தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  3. நல்ல ஆராய்ச்சிதான் தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  4. ஆராய்ச்சி ந‌ல்லா போகுது..தொட‌ருங்க‌ள்

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்றிங்க அண்ணா.. ம்ம்.. நல்லா இருக்கு அண்ணா.. நன்றி..

    ReplyDelete
  6. சார் இப்ப உடம்பு நார்மலாயிருச்சா ?
    ஓகே நெக்ஸ்ட் மீட்பன்னுவோம்

    ReplyDelete
  7. என்னங்க ஒரே பக்தி வாசனையா இருக்கு இன்னைக்கு, நல்ல தேடல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வணக்கம் ஆராய்ச்சியாளரே!!
    தொடருங்கள்.

    ReplyDelete
  9. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் அண்ணா..

    ReplyDelete
  10. நல்ல ஆராய்ச்சிதான் ....

    ReplyDelete
  11. இலகுவான மொழிநடையில் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்,,,,
    நன்றி!! தொடர வாழ்த்துகள்!!

    ReplyDelete
  12. ம் ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  13. படங்கள் அற்புதமா இருக்கு.

    நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.

    ReplyDelete
  14. சார் என்னாச்சு , உடம்பு சரியாச்சுள்ள , உங்க ப்ளாக்ளையும், எங்கப்ளாக்ளையும் ஆளையே கானும்

    ReplyDelete
  15. ஆராய்ச்சி படங்களுடன் Continue.........................................Welden.

    ReplyDelete
  16. நன்றி கண்ணகி,
    நன்றி சித்ரா,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி நாடோடி,
    நன்றி திவ்யாஹரி,
    நன்றி மங்குனி அமைச்சரே, இப்ப பரவாயில்லை.
    நன்றி சசிகுமார்,
    நன்றி சைவகொத்துபுரோட்டா,
    விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி திவ்யா,
    நன்றி மேனகாசத்தியா,
    நன்றி பனித்துளி சங்கர்,
    நன்றி சாருஸ்ரீராஜ்,
    நன்றி தீபிகாசரவணன், இணைகின்றேம்.
    தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இர்ஷாத்,
    பின்னூட்டமும் ஒட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.