Friday, February 26, 2010

லீவு விட்டாச்சு


சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். தொடருக்குப் படங்கள் கொடுத்து உதவிய துளசி டீச்சர், தலைப்பை கொடுத்த சித்ரா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளைக் காட்டிப் பிடுங்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டதின் காரணமாகப் பணியைத் தவிர வேறு எதுவும் சிந்திக்க இயலாத நிலை உள்ளது.

ஆதலால் ஒரு வாரகாலம் எனது பிளாக் பணிகளுக்கு ஓய்வு அளிக்கின்றேன். கடவுள் தொடரும், காதல் கதை தொடரும் மறுபடியும் எழுதுவேன் என உங்களைப் பயமுறுத்தித் தற்காலிக விடுப்பு(நிம்மதியை ) உங்களுக்கு அளிக்கின்றேன். நன்றி.

15 comments:

  1. //ஆதலால் ஒரு வாரகாலம் எனது பிளாக் பணிகளுக்கு ஓய்வு அளிக்கின்றேன்.//

    இதெல்லாம் சொல்லிட்டு செய்யக்கூடாது. நாங்கெல்லாம் புரிஞ்சுக்குவோம்.

    ReplyDelete
  2. இதெல்லாம் சொல்லிட்டு செய்யக்கூடாது. நாங்கெல்லாம் புரிஞ்சுக்குவோம்.//


    ஆமாம்...ஆமாம்.

    ReplyDelete
  3. நிசமாத்தான் சொல்றீங்களா...
    சரி.. போயிட்டு சீக்கிரம் வாங்க..

    முக்கியமா , லீவ் எக்ஸ்டெண்ட் கேட்கக்கூடாது...
    இப்பவே சொல்லிட்டேன் சார்..

    ReplyDelete
  4. அண்ணாச்சி, சீக்கிரம் ஆணி பிடிங்கிட்டு வாங்க......... !!!
    தற்காலிக விடுப்பு(நிம்மதியை ) உங்களுக்கு நாங்கள் அளிக்கின்றோம்.
    :-)

    ReplyDelete
  5. 'ஆணி குறைய!'

    பதிவுலக ஒளவை'யார்' அருளியது:-)

    ReplyDelete
  6. ///பட்டாபட்டி.. said...
    நிசமாத்தான் சொல்றீங்களா...
    சரி.. போயிட்டு சீக்கிரம் வாங்க..

    முக்கியமா , லீவ் எக்ஸ்டெண்ட் கேட்கக்கூடாது...
    இப்பவே சொல்லிட்டேன் சார்..///

    ரிப்பிட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  7. சார் சீக்கிரம் வந்து எங்களை பயமுறுத்தவும் :))

    ReplyDelete
  8. சார் உங்க கேர்ள் பிரண்டோட நீங்க மலேசியா டூர் போறத நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் நாங்க பயந்தவங்க இல்லை அண்ணா..

    அடுத்த வாரம் எழுதணும்.. கண்டிப்பா..

    ReplyDelete
  10. சுதானந்த சுவாமிகள் எங்கேயாக்கும் புறப்படுறார்.
    சீக்கிரமா வந்து எழுதுங்க சாமி.

    ReplyDelete
  11. //சார் உங்க கேர்ள் பிரண்டோட நீங்க மலேசியா டூர் போறத நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்//

    அப்படியா நெசமாவா?

    ReplyDelete
  12. நன்றி சின்ன அம்மினி,சொல்லிட்டு செய்யற சூப்பர் ஸ்டார் இரசிகன் நான்.
    நன்றி கருணாகரசு,
    நன்றி பட்டாபட்டி,
    நன்றி சித்ரா,
    நன்றி டீச்சர்,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி நாஞ்சிலாரே,இது மிரட்டல் இல்லை,நான் தரும் அவஸ்தை,
    மங்குனி சார், நீங்க அமைச்சரா இல்லை எதிரியா? இப்படி போட்டுக் கொடுக்க, நான் எங்க கேர்ள் பிரண்டைக் கூட்டிப் போவது, செலவு ஜாஸ்தியாகுமுன்னு ஹனிமூனுக்குக் கூட தனியா போற ஆளு.
    நன்றி சுசி,
    எங்கயும் போகலை ஹேமு, வேலை அதுதான்.நன்றி.
    நன்றி ஜெலில்லா, வதந்திகளை நம்பாதிர்கள். இது எதிர்க் கட்சினயினரின் சூழ்ச்சி. என் படத்தைப் பாருங்கள். இந்த மூஞ்சி கூட யாரு போவான்னு உங்களுக்கே புரியும்.
    அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  13. நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன், ஊர் சுற்றி வந்ததிலிருந்து என் பதிவு எது பாயிஜா பதிவு எதுன்னு தெரியாம பின்னூட்டம் போட்டு கொண்டு இருக்கீஙக

    (இப்ப ஊர் வதந்திய நம்பவா வேண்டாமா?


    சிந்து வெளி பெரிய பதிவா இருக்கு கொஞ்சம் கொஞ்சமாதான் படிக்கனும்.

    ReplyDelete
  14. // நானும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன், ஊர் சுற்றி வந்ததிலிருந்து என் பதிவு எது பாயிஜா பதிவு எதுன்னு தெரியாம பின்னூட்டம் போட்டு கொண்டு இருக்கீஙக //
    உங்களுக்கு மட்டும் இல்லை, சுவையான சுவை, சாருஸ்ரீராஜ் இருவரின் பதிவுகளும் குழப்பமா இருக்கு. எனக்கு இப்ப மூன்று நிறுவனங்களின் ஆண்டு இறுதிக்கணக்கு நடக்கின்றது. அது இடையில் பதிவு படித்துப் பின்னூட்டம் இடுவதால் குழம்பி விடுகின்றது.
    மன்னிக்கவும், இனிமே கவனித்துப் பின்னூட்டம் இடுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  15. http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.