Friday, February 19, 2010

வாங்க சிரிக்கலாம்.... வாங்க

2036 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்தேன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய இருவர் என்னிடம் வந்தார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி என்னைத் தர தரவென இழுத்துச் சென்றார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

காட்சி-1 (வானவீதியில்)

நான்: ஆமாஆஆஆ நீங்க யாரு?

கிங்கரர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.

நான் : என்னது உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.

கிங்கரர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க.

நான் : ஆமா, ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் நல்லா இருக்காங்களா.

கிங்கரர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா?

நான் : என்னது நீங்க வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் வராதா?

கிங்கரர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.

நான்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?.நான் இன்னமும் கடவுளும் கோவில்களும் கட்டுரை கூட எழுதி முடிக்க வில்லையே.

கிங்கரர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வா.

நான்: போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை.

கிங்கரர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்படி வசதி.

நான் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.

















காட்சி - 2 (எமலோகத்தில் எனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).

சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.

யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.

நான் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.

கிங்கரர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.

நான் : சரி அப்பு.

சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....

யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.

நான் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாது போட்டுக்குவேம்.

கிங்கரர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.

சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் சென்னையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......

யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி,டாமர் உன்னை....

சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.

யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,சென்னை என்றவுடன் அதன் பாஷை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு கிங்கரர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.

சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,கல்பாக்கத்தில் இவன்........

யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.

சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, சிங்கப்பூரில் இவன் பதிவு என்ற பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் பதிவர்களிடம்......

யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் சுக்கா வறுவல் பண்ணுங்கள்.

நான்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,கைமா போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்.

யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

கிங்கரன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?

நான் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.

சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.

யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.

நான்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.

சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.

நான்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவே பார்த்துட்டேம்,இது என்ன..

யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.

நான் : .... நாட்டுல ... ஆட்சியில அமைச்சரா போடுவாரா? வாயைத் திறக்காமல் இருக்க...

கிங்கரன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.

யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.

சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.

நான்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.

யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.

நான் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.

யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.

நான் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கினேன்.அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்தி கண்விழிக்கின்றேன்.

(பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்).

டிஸ்கி: சும்மா கடவுள்,கோவில் குளம்ன்னு போடாம. நகைச்சுவையா ஒரு சின்ன பதிவா
போடலாம்ன்னு பார்த்தா! அப்படியே எனது கற்பனை வளம் ஊறிப் பெருக்கு எடுத்ததில் பெரிதாகி விட்டது. எனக்காக எவ்வளவே சகிச்சுக்கிற நீங்க, இதையும் சகிக்க மாட்டீர்களா?. ஆனா ஒன்னுங்க, என் பதிவை விடாம படிக்கின்ற, நீங்க எல்லாரும் ரொம்பாஆஆஆ நல்லவங்க......... நன்றி. தொடராது. (ஹி ஹி தொடரும் போட்டு பழக்க தோசம்தான் )

22 comments:

  1. //
    பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்
    //
    ஓகோ... அப்படியா

    ReplyDelete
  2. ஆஹா............. சிங்கையில் தங்கமணி!!!!!!

    சொல்லவேயில்லை????????????

    இன்னும் 26 வருசம் உயிருக்குக் கேரண்டீ:-)))))

    ReplyDelete
  3. ///பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்).//

    இனி தேவ தூதர்கள் வரமாட்டாங்க பயப்படவேண்டாம் அதான் தங்ஸ் இருக்காங்களே.

    ReplyDelete
  4. நல்ல வேலை சார்..
    தூக்கதிலிருந்து எந்திருச்சுட்டிங்க..இல்லாட்டி எம தர்மன் கதி ?..

    பதிவு நல்லாயிருக்கு சார்....

    ReplyDelete
  5. ஐயா பித்தனின் வாக்கு
    உங்க blog இப்பதான் பார்த்தேன். உங்களோட blog - க சும்மா சுதிபார்கவே (சந்தோசா ஐலன்ட் மாதிரி ) எனக்கு ரெண்டு மணிநேரம் ஆச்சு(சார் நான் ரொம்ப புதுசு அதுதான் ) புல்லா படிக்கனும்னா ஒரு ஆறு மாசம் ஆகும் (எப்படியும் படிசுர்றேன்) அதோட நீங்க வாட்ச் பண்ற blogs ஐயும் பார்த்தேன் மொத்தம் 237 (கவுன்ட் பண்ண 10 நிமிடம் ஆச்சு ) இதுலருதே நீங்க ஆபீஸ்ல எவ்வளவு சின்சியரா வேலைபாக்கிரிங்கன்னு கண்டுகிட்டேன் (சார் நம்ம பட்டாபட்டியும் அப்படிதான் சார் ).
    237 blogs ஆபீஸ்ல உட்காந்து என்னியிருகேன்னா நான் வேலைல எவ்வளவு சின்சியர்னு பார்த்துகோங்க
    நான் இப்பதான் அடியாள ஆகியிருக்கேன் சீக்கிரம் ரவுடி ஆயிடுவேன் .
    இனி சீரியஸ்
    சார் உங்க காமடி கதை நல்லாயிருந்தது நீங்க புதுசா வர்ற எல்லாத்தையும் நல்லா என்கரேஜ் பண்றீங்கன்னு நீங்க வாட்ச் பண்ற blogs எண்ணிகைய பர்தா தெரியுது ரொம்ப தேங்க்ஸ் சார்

    ReplyDelete
  6. நல்ல ஒரு நகைச்சுவையான கற்பனை

    \\யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி,டாமர் உன்னை....
    சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.
    யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,சென்னை என்றவுடன் அதன் பாஷை ஒட்டிக் கொண்டது.//

    சென்னை தமிழகத்தின் தலைநகர்..மேற்கண்ட பாஷையை பேசுவோர் சாலையோரத்தில் வசிக்கும் குடிகாரர்களும் பொறுக்கிகளும்தான்..இது சென்னை பாஷை என்றல்..இதைத்தான் தமிழக முதல்வர்களும் அமைச்சர்களும் பேசவேண்டும்..
    இதை பொறுக்கிகள் பாஷை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..

    தமிழ் ஒரு நல்ல பாஷையாக மாற இந்த பொறுக்கிகள் ஒழிந்தால்தான் நல்லது

    தொடரட்டும் உங்கள் பணி பித்தன்..

    ReplyDelete
  7. //தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க //

    :))ப்ளாக் ஒ மேனியா

    ReplyDelete
  8. good one !!!

    I think You shud also start one cooking blog instead of giving recipe in other's blogs comments

    ReplyDelete
  9. நகைச்சுவை உணர்வு எல்லாருக்கும் வராது.உங்களுக்கு அந்தக் கொடுப்பனவு இருக்கு.அசத்துங்க.

    ReplyDelete
  10. //நீ எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும்.//
    நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க.. பதிவ படிக்கிறத விட அதில இருக்குற எழுத்து பிழைய திருத்த சொல்லுங்க.. :)))

    செம காமடி அண்ணா..

    ReplyDelete
  11. ரொம்ப நகைசுவையான பதிவு

    ReplyDelete
  12. செம காமெடி!!சிங்கையிலும் தங்கமணி இருக்காங்களா அண்ணா....

    //ஆமா, ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் நல்லா இருக்காங்களா.
    //இதுல என்னை வேற எதுக்கு இழுக்குரீங்க...நான் நல்லாயிருக்கேன் அண்ணா...

    ReplyDelete
  13. kalakkitinga ponga!

    aanaalum yaarum vivek vali comedy panrathillayaa?

    கலக்கிடிங்க போங்க !

    ஆனாலும் யாரும் விவேக் மாதிரி காமெடி பண்றதில்லையா ?

    ReplyDelete
  14. அண்ணாச்சி, கனவில் ஏன் இந்த "கொலை வெறி சிரிப்பு"? ஹா,ஹா,ஹா,ஹா...... நல்லாத்தான் கனவு கண்டு இருக்கீங்க. நல்ல காமெடி. நன்றி.

    ReplyDelete
  15. நகைசுவையுடன் யமதர்மரா.கலக்குங்க.

    ReplyDelete
  16. இப்ப இந்த பதிவ படிச்சுட்டதால... மேல போகும் போது எனக்கு தண்டணை குறைய வாய்ப்பு உண்டுதானே?

    நகைச்சுவையாக இருந்தது....

    ReplyDelete
  17. ஹா ஹா ஹா..செம காமெடி அண்ணா..

    ReplyDelete
  18. சர்வசாதாரணமா நகைச்சுவையிலே பின்னியிருக்கீங்க! அப்பப்போ இந்த சங்கதியையும் எடுத்து வுடுங்க! நாங்கெல்லாம் படிச்சுப்புட்டு சிரிப்போமில்லா? :-))

    ReplyDelete
  19. நன்றி ஜெகதீசன்,
    நன்றி டீச்சர், ஆமாம் இன்னம் 26 வருடம் கஷ்டப் படவேண்டும். டீச்சர்,இங்க தங்கமணி யாரும் இல்லை. நான் சொன்னது 2036ல், அதுக்குள்ள யாராது ஏமாறுவாங்கன்னு நம்பிக்கைதான்.
    நன்றி ஜெய்லானி, தங்கஸ் ஒரு கற்பனைதான். ஆனா கண்டிப்பா தேவதூதர்கள் எல்லாம் வரமாட்டாங்க.
    நன்றி பட்டாபட்டி,இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ன்னுதான்,ஆனா பதிவு ரொம்ப நீளம் ஆனதால எமன் எஸ் ஆகிட்டார்.
    நன்றி அண்ணாமலையான்.
    நன்றி மங்குனி அமைச்சரே, நீங்க மட்டும் என்னவாம். உங்க சிலாங்க் எனக்கு வரவில்லை. நன்றாக எழுதுகின்றீர்கள்.
    நன்றி மர்மயோகி, சென்னை பாஷை என்று நான் நகைச்சுவைக்காக குறிப்பிட்டேன். கோவிச்சுக்காதிங்க.
    நன்றி ஜெட்லி. பிளாக்கே ஓ மேனியா. இது கூட நல்லாயிருக்கு. நான் எனக்கு பதிவு ஓ போபியா என்றுதான் நினைத்துருந்தேன்.
    வருகைக்கு நன்றி பவித்ரா,
    நன்றி ஹேமூ,இது கடியுணர்வுதான்,
    வாம்மா சுசி, இது கூட நல்லாயிருக்கு,இது எனக்குத் தோனலை. இதுக்குத்தான் தங்கை வேணுமின்னு சொல்றது. சரி தண்டனைய மாத்திருவேம். அல்லது தப்பைக் குறைப்போம். நன்றி.
    நன்றி சாருஸ்ரீராஜ்,
    அய்யோ, இங்க அப்படி யாருமில்லை, மேனகா சத்தியா உங்க அப்பா ரொம்ப புத்திசாலி, நீங்க இப்படிக் குழம்புவீர்கள் என்றுதான் பெயரில் சத்தியாவையும் உடன் இணைத்து விட்டார். நான் கேட்டது மேனகாவை மட்டும் தான். ஹா ஹா நன்றி.
    நன்றி வசந்த்,
    நன்றி சுவையான சுவை,
    நன்றி சரத்,
    நன்றி சித்ரா, இது கொலைவெறி இல்லை. கடிவெறி.
    நன்றி மாதேவி, எத்தனை நாள்தான் யமனை பயத்துடன் பார்ப்பது, கொஞ்சம் காமெடியன் ஆக்கலாமே.
    நன்றி கருணாகரசு, கண்டிப்பா, அதுதான் இங்க அனுபவிக்கிறீர்களே அது பத்தாதா. எதுக்கும் மேல போன யமன் கிட்ட சொல்லிடுங்க. நான் இந்த பிளாக் பாலோயர்ன்னு, அவரு இரக்கப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பி விடுவார். வருகைக்கு நன்றி.
    நன்றி திவ்யாஹரி,
    நன்றி சேட்டைக்காரன், இதுவும் அப்ப அப்ப வரும்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.