Wednesday, November 25, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 7

சென்னையில் எங்களின் பெரிய குருசாமி, முரளிதர சுவாமிகள், எங்களை அனுப்பும் போது முழு பயணத் திட்டத்தையும் வடிவமைத்துச் செய்ய வேண்டியவைகளையும் கூறி, நாராயண குருசாமியின் தலைமையில் அனுப்பி இருந்தார். அவரின் கூற்றுப் படி, முதல் நாள் நாங்கள் கரிவலந்தோட்டை அடையும் போது, இரவு மணி பத்து ஆகும் எனவும், அன்று இரவு அங்கு தங்கும் படியும், எக்காரணம் கொண்டும், இரவு கரிமலை ஏற வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் நாங்கள் இரவு 8 மணிக்கே கரிவலந்தோடு அடைந்தேம். குருசாமி பத்து மணிக்கு மேல் தான் ஏற வேண்டாம் என்றார். இப்ப மணி எட்டு தான, ஆதலால் நாம் தொடர்ந்து ஏறி, இரவு பத்து மணிக்குள் கரிமலை உச்சியை அடைந்து, அங்கு தங்கலாம் என முடிவு செய்து கரிவலந்தோட்டைக் கடக்க ஆரம்பித்தேம் ஆரம்பித்தோம்.

இந்தக் கரிவலந்தோடு பெயரே கொஞ்சம் டிரையலா இருக்கும். கரி= யானை, வலம்= சுற்றுதல், தோடு= பகுதி. இப்ப புரியுதா. ஏன் இரவு ஏறவேண்டாம் என்றார். அதாவது கரிமலை, பம்பை ஆகிய பகுதிகளின் அடிவாரமும், மலை ஏறாமல் மிருகங்கள் சுற்றி வரும் பகுதியும் இது ஆகும். இது போதாது என்று அங்கு உள்ள ஒரு வாய்க்கால்(காட்டாறு) சுற்றியும் போர்டு வைத்து இருப்பார்கள். "புலிகள், இராஜ நாகம் அதிகம் உலாவும் பகுதி, பக்தர்கள் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல வேண்டாம்", என்று பத்தடிக்குப் பத்தடியில பல போர்டுகள் வைத்து இருப்பார்கள். முக்குழித்தாவளத்தில் இருந்து கரிமலை ஏற்றத்தில் உள்ள மூங்கில் பள்ளம் வரை பள்ளம் உள்ள பகுதிதான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அடர்த்தியான காடு, பாதையின் இருபுறமும் ஆள் உயர புதர்கள், ஒரு யாணை நின்றால் கூடத் தெரியாத மூங்கில் மற்றும் கோரைப் புல் புதர்கள். காட்டின் உள் வெளிச்சம் படாத ஈரவாசம், பாதையில் அட்டைகள், பெரிய மரவட்டைகள் என இயற்க்கையின் அட்டகாசம் நிறைந்த பகுதி. நாங்கள் இந்த கரிவலந்தோட்டைக் கடக்க முற்ப்பட்ட போது அங்கு உள்ள நடைப் பாதைக் கடையில் சிலர் கூட்டமாக, பாதையின் ஒருபுறம் நெருப்பு வைத்தும், பட்டாசு வெடித்தும் பரபரப்பாக இருந்தனர். என்ன என்று பார்த்தால் ஒரு யாணைக் கூட்டம் ஒன்று பிளிறிக் கொண்டு மேல வந்து கொண்டியிருந்தது.இவர்கள் அதை விரட்டப் பாடுபட்டனர். நாங்கள் குருசாமி கூறிய உண்மையை உணர்ந்து, இரவு பயணத்தை முடித்து அங்கயே தங்கி விடலாம் எனவும், அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பலாம் எனவும் முடிவு செய்து, இரவு அங்குக் கடையில் உள்ள விரியில் தங்கி விட்டேம். நல்ல உறக்கம். அதிகாலை எழுந்து கிளம்பி, காலை பத்து மணியளவில் பம்பையை அடைந்தேம். பம்பை வரை எதும் பேசாமல் வந்த குருசாமி,மற்றும் சீனியர் சாமிகள், பம்பையில் நான், என் அண்ணா முரளி சாமி, மற்றும் இன்னேரு கன்னி சாமியை அழைத்து,அழைத்து, ஏன் சாமி இரவு அப்படியா தூங்குவிங்க, இரவு மறுபடியும் யாணைக் கூட்டம் வந்து, ஏறக்குறைய இருவது, முப்பது வெடிகள் வைத்துதான் போயிற்று. இது கூட தெரியாம தூங்கறிங்க, ஒருவேளை மேல வந்துவிட்டால், நாங்கள் உங்களைப் பார்ப்பதா, இல்லை ஓடுவதா? என்று கோவித்து, பின்னர் வீட்டை விட்டு, காட்டுக்கு வந்தால் கொஞ்சம் அலார்ட்டாக இருக்கனும், என்னதான் கடவுள் துணை இருந்தாலும், நாமும் விழிப்புணர்வுடன் செயல்படனும் என்றார். நாங்களும் சரணம் அய்யப்பா என்று கூறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். சரி இங்கு நடந்த அற்புதம் என்ன என்று பார்க்கலாமா?


நான் பயண யாத்திரை கிளம்புவதற்க்காகக் காட்டில் செல்ல, புது எவரெடீ டார்ச் ஒன்றை வாங்கி இருந்தேன். ஆறு பாட்டரிகளைப் போட்டு, பெரிதாக வட்ட வடிவமாக ஒளி தரும் டார்ச் அது.மாலை நாங்கள் முக்குளித்தாவளம் வழியாக கரிவலந்தோடு வரும் போது, நான் ஆர்வத்தின் காரணமாக டார்ச்சைக் காட்டுக்குள் அடித்து வேடிக்கைப் வேடிக்கைப் பார்த்தபடி வந்தேன். பயண விதிகளின் படி டார்ச்சைக் காட்டுக்குள் அடிக்கக் கூடாது, பாதையில் மட்டும்தான் அடிக்கனும். காட்டுக்குள் அடித்தால், அந்த ஒளி மிருகங்களை ஈர்க்கும் என்பார். ஆனால் நான் அடித்து வேடிக்கைப் பார்ப்பது, பின் பாதையில் அடிப்பது என்று மாறி, மாறி செய்தேன். (மலோரியா சாமி அப்பத்தான் சேட்டை சுவாமி எனப் பெயரேடுத்தேன். இன்னமும் எங்கள் பயணக் குழுவில் என்னை சேட்டை சுவாமி அல்லது மண்டி சுவாமி என அழைப்பார்கள். நான் இது போல செய்யும் சேட்டைகளும், அதுக்கு அய்யனின் விளையாட்டுக்களும் தமாசா இருக்கும். ஒகே சுயபுராணம் நிறுத்தி மேட்டருக்குப் போவேம்). அப்படி அடிக்கும் போது என் அண்ணாவும், மத்த சாமிகளும் என்னை அடிக்க வேணாம் என்று கூறினார்கள். நான் சொன்னா கேக்கற ஆள் இல்லை அல்லவா.
குருசாமியும் இருமுறை "சாமி டார்ச்சை பாதை மாற்றி அடிக்காதிங்க" என்றார். நான் பாதையில் அடிப்பது, கல், வேர் எதுவும் இல்லை என்றால் நொடியில் காட்டில் அடிப்பது, பின் பாதையில் அடிப்பது என விளையாடி வந்தேன். பின் சிறிது தூரத்தில் என் டார்ச் அனைந்தது. நான் ஸ்பேர் புது பாட்டரிகளைப் போட்டேன். எரியவில்லை. அங்கு ஒரு கடையில் புது பல்பும் போட்டேம் எரியவில்லை. டார்ச்சை தட்டி, தலைகீழாக திருப்பி எல்லாம் செய்தேன். எரியவில்லை. பின் சமர்த்தாக என் அண்ணாவும், இன்னேரு சாமியும் அவர்கள் டார்ச்சில் அடித்து முன்னும் பின்னுமாக என்னை அழைத்துச் சென்றனர். நானும் ரொம்ப நல்ல பையனாக என் டார்ச்சை மூட்டை கட்டி வைத்து விட்டு, அவர்கள் காட்டிய பாதையில் நடந்தேன். இரவு நான் தங்கிய விரிக் காரர் டார்ச்சை முழுமையாக பரிசேதித்து விட்டு, நல்லாதான் இருக்கு ஏன் எரியவில்லை எனத் தெரியவில்லை என்றார். அதிகாலையிலும் நான் இந்த இருவரின் டார்ச் வெளிச்சத்தில் சமர்த்தாக நடந்து வந்தேன்.( நான் நல்ல பையன் தான). பின் டார்ச்சின் உபயோகம் இல்லாதால் நான் அதை எடுக்கவில்லை.

பயணம் முடிந்து வீடு வந்த நாங்கள், காலை பூஜை முடித்து, பிரசாதங்கள் அருந்தி, பயணக் கதை பேசும் போது, என் டார்ச் எரியாத விசயத்தைக் கூறினேன். என் சித்தி மகள், தங்கை லாவன்யா, " "இல்லை அண்ணா அது நல்ல எரியும்" என்று பேக்கில் இருந்து எடுத்து ஆன் செய்ய டார்ச் பளீர் என்று பிரகாசமாக எரிந்தது. எரிந்தது, நான் ஆச்சரியத்துடன் அதை வாங்கி, ஆட்டிப்பார்த்துப், பின்னர் அதன் தலையில் ரெண்டு தட்டி, ஆன் செய்தாலும் எரிந்தது. அதை என்ன செய்தாலும், குலுக்கினாலும் புது டார்ச் பிரகாசமாக எரிந்தது. நான் குழப்பத்துடன் என் அண்ணா முரளி சாமியைப் பார்க்க, அவர் சிரித்துக் கண் மூடி, "சாமி சரணம் அய்யப்பா", என்று சிரித்தார். நான் உடனே பூஜை அறைக்குள் ஓடி " சாஸ்தா அபராத இரட்சகனே சரணம் அய்யப்பா" என்று கூறி கீழே விழுந்து வழிபட்டேன். அவர் எப்போதும் போல குறும்பு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தார். அடுத்த பதிவில் நாம் பம்பையிலும், நீலி மலையிலும் தொடரலாம்..... தொடரும்.

டிஸ்கி : எனக்கு விருது அளித்து கொளரவித்த சுவையான சுவை சகோதரிக்கு நன்றி. நான் எப்பவும் ஒன் வே டிராபிக் மாதிரி, வாங்கற பழக்கம் தான், கொடுக்கற பழக்கம் இல்லை. வரவு மட்டும் தான் செலவு இல்லை. ஆனால் இந்த தொடர் முடிந்ததும் நான் வாங்கிய விருதுகளை பகிந்து அளிக்கின்றேன். சுசி அழைத்த தொடர் பதிவும் போடுகின்றேன். எனக்கு நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்கள் மிகவும் பெரிய விருது ஆகும். நன்றி. குறைகளை என்னிடமும், என் எழுத்துக்கள் நல்லா இருந்தால், உங்களுக்கு பிடித்து இருந்தால் சக பதிவர்களிடமும் படிக்கச் சொல்லவும். இதுவே தாங்கள் அளிக்கும் மாபெரும் விருது ஆகும்.

4 comments:

  1. அண்ணே வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக உள்ளது.

    ரங்கன்

    ReplyDelete
  3. ரொம்ப சுவாராஸ்யமா இருக்கு...

    ReplyDelete
  4. //மலோரியா சாமி அப்பத்தான் சேட்டை சுவாமி எனப் பெயரேடுத்தேன். //
    ஹாஹாஹா....

    //நான் சொன்னா கேக்கற ஆள் இல்லை அல்லவா//
    அதானே...

    //அவர் எப்போதும் போல குறும்பு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தார். //
    அற்புதம்... படிச்சதும் அவர் சிரிப்பு மனக்கண்ணில்....

    //சுசி அழைத்த தொடர் பதிவும் போடுகின்றேன்.//
    ஞாபகம் இருக்கு. மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.