Wednesday, October 14, 2009

மாசாலாப் பொரியும் 5000 பீரும்

இந்த கோடை நீண்ட பள்ளிவிடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கு ரொம்ப கொண்டாட்டம். எங்களை ஏன்னு கேக்க ஆள் இல்லாம, வெய்யில் பாக்காம, கருவழிஞ்சு ரோடு ரோடா, காடு மேடு எல்லாம் சுத்துவேம். காலை உணவில் இருந்து மதிய உணவு வரை, வயலில் தட்டக்கா(காராமணி) பறித்து உண்பது, கரும்புத் தோட்டத்தில் கரும்பு திருடி தின்பது, கொய்யாக்காய் திருடுவது. நாகப் பழம் பறித்து உண்பது என்று அமாராவதி ஆத்துமேடே கதி என சுற்றுவேம். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்ட உடன் அம்மா பக்கத்தில் படுத்து மாலை நாலு மணிவரை தூங்க வேண்டும். இல்லை என்றால் அம்மா திட்டுவாங்க. மாலை அம்மா டீ மற்றும் திங்க எதாது கொடுத்தால் சாப்பிட்டு இரவு ஏழு மணிவரை தெருத் தெருவாப் போய் சுற்றி பல நண்பர்களுடன் விளையாடி விட்டு ஏழு முதல் ஒன்பது மணி வரை வீட்டின் முன் விளையாடி, கதைபேசி பொழுது போக்குவேம். இதில் சுவாரஸ்யமான இன்னேரு விசயம் என்ன என்றால், இந்த லீவில் சென்னையில் இருந்து எங்க சித்தி சித்தப்பா இருவர்(இரண்டு சித்திகள்),அவர்களின் மூன்று மகன் கள் இரண்டு பெண்கள், எங்க அக்காவின் மூன்று பெண்கள் என்று எங்க வீடு ஒரு பதினைந்து நாளைக்கி களை கட்டும். எங்களை மேய்க்க முடியாமல் அவங்களுக்கு திண்டாட்டம். எங்க பெரிய அண்ணா திங்க அப்ப எல்லாம் ஒரு பெரிய பலாப்பழம், நிறைய வெள்ளரிப் பிஞ்சுகள், தர்ப்பூசனிப் பழங்கள் என வாங்கி வரவார். புளியம்பூ தொக்கு, புளியங்காய் சட்டினி என இந்த வகைகளால் களை கட்டும். ஆனா நமக்குத்தான் ஆத்துமேடும்,எல்லா மரங்களும் இருக்கே. நாங்க எல்லாரும் சமத்துப் பசங்க அது வேனும் இது வேனும் எல்லாம் கேக்க மாட்டேம். என்ன தராங்களே, என்ன கிடைக்குதே அதை பூந்து விளையாடுவேம். கூட்டாங் சேறும், நிலாச் சேறும் சாப்பிடுவேம். இதுல ஒரு நாள் எங்க பெரிய அண்ணன் எங்க மூன்றாது அண்ணாவிடம் நிறைய பணம் கொடுத்து எங்க அனைவரையும் போய் மசாலா பொரி, மசாலா முறுக்கும் சாப்பிட சொன்னார். நாங்களும் கும்பலாய் போய் கடையைக் கலக்கிட்டு வந்தேம். இதுதான் என் முதல் அனுபவம். இதன் பின் இந்த பொரி என் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகி விட்டது. இதன் பின் என் சித்தி மக்களும் எங்கள் ஊருக்கு வந்தால் முதலில் சொல்வது இந்த கடைக்குப் போகலாம்.

பின் கல்லூரி முடியும் வரை பலமுறை இந்த பொரியை வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சாப்பிடுவது வழக்கம். அப்புறம் பட்டம் பெற்று நான் இரண்டு மாதத்தில் சென்னை வந்து பிரபலமான வர்த்தக நிறுவனத்தில் விற்பனை பிரதினிதியாக சேர்ந்ததும், நாங்களும் ரொளவுடி தாண்டா வடிவேலு பாணியில் குடிக்க ஆரம்பித்ததும் தனிக்கதை. வியாபாரக் கூட்டங்கள், முகவர் கூட்டங்கள், வருடாந்திர கணக்கு கூட்டங்கள், சந்தை கண்காட்சிகள் என்று பல நிகழ்வுகளில் பல ஜந்து மற்றும் மூன்று நட்சத்திர ஓட்டலில்லும், ஒயின் சாப்புகளிலும் பல விதமான சைடு டிஸ் வச்சுக் குடிச்சாலும், எனக்கு இந்த மசாலா பொரி மற்றும் மசாலா முறுக்குடன் வைத்து குடிக்க ஆசை வந்துவிட்டது. இது பல வருடங்கள் ஆகிப் பின் நான் எங்க ஊர் அருகில் உள்ள கோவை மா நகரில் உள்ள மபத்லால் நிறுவனத்தில் துணி விற்கும் மாவட்ட ஏரியா சந்தை கண்காணிப்பாளராக வந்து சேர்ந்தேன். அப்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தாரபுரம் வந்துவிட்டு திங்கள் கோவை செல்வது வழக்கம். அப்போது நான், என் உயிர் நண்பன் (இந்த உயிரு,தயிரு நண்பனுக ஒரு நாலு பேரு இருக்காங்க) பூவேந்திரன் மற்றும் ஜெடிசி என்னும் ஜீவா ரவி மூவரும் பீர் குடிப்பது வழக்கம். நான் எங்க வீட்டில் இரவு படத்துக்கு போவதாக கூறிவிட்டு இரவு டிபனை மிகவும் கம்மியா சாப்பிட்டு கிளம்புவேன். பாவம் அம்மா கொஞ்சமா சாப்பிடுறான் என்று திட்டுவாங்க, ஆனா நான் மாலை நண்பர்களுடன் பஜ்ஜி, போண்டா சாப்பிட்டன் பசியில்லை என்று பொய் சொல்லிவிடுவேன்(நான் வளருகின்றேனே மம்மி). அப்பவும் எங்க அம்மா வெள்ளந்தியா மறுவாரம் மாலை வெளியில் கிளப்பினால் குட்டிப்பா வெளியில் எதும் சாப்பிடாத நான் உனக்காக இந்த டிபன் பண்றேன் என்பார். எனக்கு சங்கடமாக இருந்தாலும் மண்டை ஆட்டிக் கிளம்பி விடுவேன். சரி கதைக்கு வருவேம். நாங்கள் மூவரும் கடைக்குப் போய் குடிப்போம். குடித்து விட்டு இந்த பொரிக்கடையில் வந்து சாப்பிடுவேம். நான் ரொம்ப பெரிய மனுசன் ஆகிட்டதால எங்க பெரிய அண்ணன் இப்ப எந்த கண்டிசன் போடுவதே திட்டுவதே இல்லை(இதை தனிப் பதிவாக போடுகின்றேன்). அப்புறமும் ஊரும் பெரிது ஆகிவிட்டதால் இப்ப பாதிப்பேருக்கு என்னை தெரியாது. ஆனாலும் குடித்துவிட்டு போய் கடையில் பொரி சாப்பிடுவது என்பது இரசிச்சு சாப்பிட முடியவில்லை. நம்ம சாப்பிட போகும் போதுதான் யாரது தெரிஞ்சவங்க குடும்பத்தேட பொரி சாப்பிட வந்து நம்ம என்னப்பா நல்லா இருக்கியானு அக்கரையா விசாரித்து ஏறுன மப்பை இறக்குவாங்க. ஒயின் சாப்பில் வைத்து சாப்பிடலாம் என்றால் எல்லாம் வந்து ஹாய் சொல்லிக் கை வச்சானுங்கனா நமக்கு ஒரு வாய்தான் மிஞ்சும். இப்படி இருக்கும்போது நாங்க மூன்றுபேரும் இயற்கை ஆர்வலர்கள் ஆதலால் நாங்க வித்தியாச இருக்க ஜந்து பீர் மற்றும் சைடு டிஸ் வாங்கி இரவு பத்து மணிக்கு மேல் அமராவதி ஆத்துக்கு, பார்க், பைபாஸ் ரோடு, வயல், தோட்டம் என அள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அப்படியே ஜாலியா சும்மா காத்தாட உக்காந்து குடிப்போம். அப்ப ஒரு நாள்ள்ள்ள்ள் இண்டெர்வெல்.

ஒரு நாள் நல்ல முழு நிலவு நாள் நாங்க முனுபேரும் ஜந்து பீர் (நாங்க காம்ப்ளான் பாய் மாதிரி, நாங்க 5000பீர் ஆளுக), ஆளுக்கு ஒரு மசாலா பொரி, மசாலா முறுக்கு, அவனுகளுக்கு சில்லி சிக்கன் என வாங்கிக் கொண்டு ஆத்துமேட்டுக்கு இரவு பத்து மணிக்கிப் போனேம். அங்க முழு நிலவு நல்லா பிரகாசமாக இருந்தது. தண்ணிரில் தெரிந்த அதன் பிம்பம் மிக அழகு, ரம்மியமான சூழ்னிலை, குளுமையான குளிர் காற்று(கொஞ்சம் காத்து அதிகம்) என சூழ்னிலையை நான் ரொம்ப ரசித்து ஆத்துமணலில் அமர்ந்து குடித்தேன். மிகவும் அருமை, நாங்களும் இந்த ரம்மியத்தை இரசிக்கும் வண்ணம் ரொம்பவும் பேசாமல் அமைதியான குரலில் பேசி இரசித்து ருசித்து மிகவும் பொறுமையாக சாப்பிட்டேன். ஆனந்தமாக உணர்ந்தேன். (பேர் அடிக்குதா நில்லுங்க பின்னால என்ன ஆகுது பாருங்க.) எனக்கு இயல்பாக முழு நிலவு நாளில் தனிமையில் அமைதியாக ஆனந்தமாக இருக்கப் பிடிக்கும். மெரினா கடற்கரையில், கல்பாக்கம் கடற்கரையில், வீட்டின் மொட்டை மாடியில், திறந்த வெளியில் உலாத்துவேன். இப்ப பொரி, முறுக்கு, பீர் என இரசித்து ஆத்துமேட்டில் இருந்தேன். பின் நாங்க ஒரு பன்னிடரை வரை பொழுது போக்கி வீடு திரும்பினேன். வழக்கம் போல வாசலில் படுக்கை விரித்து கதவுக்கு வெளியில் நின்று அம்மா நான் வந்துட்டேன் என குரல் கொடுத்துட்டேன். அவர்களும் வழக்கம் போல கதவு திறக்காமல் சரிப்பா, சாமி கும்பிட்டு படுத்து தூங்கு என்றார். நான் வானத்தில் நிலவு பார்த்து தூங்கிவிட்டேன்.

அதிகாலை ஒரு நாலரை மணி இருக்கும் திடிர் என்று விழிப்பு வந்தது, தாங்க முடியாத வயிற்று வலி, குத்தி குத்தி வலித்தது. பின் வாந்தியும் வயிற்றுப் போக்கும் மாறி மாறி வந்தது. நான் நெந்து நூடுல்ஸ் ஆகிட்டன். எங்க அம்மா எனக்கு டீ டிகாசன், லெமன் சாறு என்று நிறைய வைத்தியம் செய்தார்கள். மதியம் வரை ஒரு பத்துமுறை பாத்ரூமுக்கும், பெட்டுக்கும் மாறி மாறி நடைப் பயணம் போகவேண்டியிருந்தது.(என்னது நல்லா வேணும்னு திட்டறிங்களா). மறுனாள் மாலையில் பூவெந்திரன் வீட்டுக்குப் போனால் அவன் பீஸ் போன பல்ப்பு மாறி படுத்து இருந்தான். சரி எழுந்து வா என அவனை கூட்டிக் கொண்டு ஜெடிசி வீட்டுக்கு போனால், வயித்துப் போக்கு அவனை துவைத்துக் காயப் போட்டு இருந்தது. நாங்கள் மூவரும் அவன் வீட்டில் முன்னால் அமர்ந்து என்ன நடந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேம். அப்பதான் புரிந்தது நாங்க மணலில் உக்காந்து சாப்பிட்ட போது அடித்த காற்றில் மணலும் பொரியுடன் கலந்துவிட்டது. நாங்களும் இரசித்து சாப்பிட மணலும், பொரியும் வேலையைக் காட்டிவிட்டது. இரவி சொன்னான் டேய் உன்னாலதாண்டா இப்படி, நீதான் பொரி சாப்பிட ஆசைப்பட்டாய், வேற எதாதுன்னா அப்படியே பாலித்தின் பாக்கொட்டுடன் சாப்பிடுவேம். இது பொரியை பேப்பரில் வைத்து சாப்பிட்டதால்தான் இந்த நிலைமை என்றான். பூவேந்திரனும் மக்கா நீ ஜடியா கொடுக்கும் போதே நினைச்சன் எதே வில்லங்கம் வரப்போகுதுன்ன்னு. இனி நான் எப்பவும் தண்ணியடிச்சா பொரி சாப்பிட மாட்டேன் என்று அடிக்காத குறையாக சொன்னார்கள். நானும் சரி விடுங்கடா நல்லா இரசித்து சாப்பிட்டம் இல்ல அதுக்குப் பரிசு இது என்று எஸ் ஆக, இரவி சொன்னான் நாங்க விடுறம் ஆனா வயிறு இப்ப விடமாட்டங்கது என்று. நாங்கள் மூவரும் சிரித்துப் பிரிந்தேம்.

பின் குறிப்பு : என்னடா பித்தன் குடிகாரனான்னு நீங்க முறைப்பதும், சங்கடப் படுவதும் எனக்கு புரிகின்றது. அது ஒரு காலம். நான் குடிகாரனாக இருந்தது. பின் இது போல ஒரு முழுனிலவு நாளில் கடற்கரையில் அமர்ந்துகொண்டு யோசிக்கையில், நாம் ஏன் குடிக்கின்றேன்.எதுக்கு குடிக்கின்றேன் என நினைக்கையில் குடியின் மீது ஒரு வெறுப்பு வந்து நிறுத்திவிட்டேன். இப்ப ஒரு மூனு மாசத்துக்கு ஒரு தரம் அல்லது எப்போதவது நண்பர்கள் சந்திப்பின் போது மட்டும் பீர் குடிப்பேன். குடிக்க பிடிக்கவிலை என்பதும் ஒரு காரணம். இதுல ஒரு காமெடி என்னா தெரியுமா ரோட்டில் குடிகாரர்களைப் பார்த்தா " இம்ம் வேலை வெட்டி இல்லாதவனுக" என நினைப்பேன். நன்றி.

5 comments:

  1. :)

    unga banner la irukkum varikal nallaayirukku..!

    ReplyDelete
  2. குடிக்கிறது தப்பில்லண்ணா... குடியா குடிக்கிறதுதான் தப்பு.
    ரொம்ப சிரிச்சுட்டேன்.

    ReplyDelete
  3. தங்களின் அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்தும் உள்ளது. இனி நான் தங்களின் கவிதைகளைப் படிப்பேன். நன்றி.

    ReplyDelete
  4. கூர்ந்து கவனித்து இருக்கின்றிர்கள், உண்மையில் நீங்கதான் இரசிகை. நன்றி

    ReplyDelete
  5. நிறைய குடித்துதான் போரடித்து குறைத்துவிட்டேன். நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.