Friday, August 21, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை- பாகம் 2

இந்த மூன்று நாகரீங்களும் ஆற்றுபடுகைகளை கொண்டது, ஆகவே, கால்நடை,விவசாயம் மற்றும் நெசவு என வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த தொழில் ரீதியான ஒற்றுமை இவர்களின் கடவுள் ரீதியான ஒற்றுமைக் கூட ஒரு காரணம் என சொல்லலாம். எனவே கடவுள் பற்றி நாம் கூற முற்ப்படும் முன்னர் இவர்களின் வாழ்க்கைதரம், மற்றும் சூழ்நிலைகளை பற்றி அறிந்தால் மட்டும் கடவுளின் கோட்பாடும் அறிய முடியும். நாம் கடவுள் யார் என்பதை இவர்களை வைத்துதான் அறிய முடியும். கடவுள் எப்படி உருவகம் செய்யப்பட்டார் எனவும் அறிய முடியும். நாம் முதலில் கடவுள் எப்பிடி உருவானார், பின் எப்பிடி பல உருவங்கள் எடுத்தார் எனப் இந்திய வரலாற்றுடன் பார்க்கலாம்.
கடவுளை பற்றி கூறும்முன் ஒரு கவியரசரின் பாட்டு பற்றி கூற விரும்ப்புகின்றேன்.
அது கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்றூ வந்ததும் கொடி அசைந்ததா?
இதில் ஒரு இயக்கம் மற்றும் ஒரு இயக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. கொடி தானக அசையாது, ஆக காற்று வந்துதான் கொடி அசைய முடியும், இல்லயா, மாற்றிக்கூறினால் கொடி அசைந்த உராய்வின் காரணமாக காற்று வந்திருக்கலாம் எனவும் விவாதம் செய்யமுடியும். அனால் காற்றினால் கொடி அசைந்தது என்பது மட்டும் பொரும்பாழும் ஏற்றுக்கொள்ளப்படும் உன்மை. அதுபோல
கடவுள் மனிதனை படைத்தான், மனிதன் கடவுளை படைத்தான் எனபதும் உன்மை. இதை கொஞ்சம் இந்திய வரலாற்றையும் கடவுள் வராலாற்றையும் ஸேர்த்து படித்தால் தெரியும்.
ஆதியில் மனிதன் உணவு, இருப்பிடம், காமம் மட்டும் கொண்டு இருந்தான், பின் அவன் நிலையாக ஒரிடத்தில் தங்கி உணவு மற்றும் இருப்பிடம் கொண்டபோது அவனுக்கு அதை பாதுகாப்பது பிரச்சனையாக இருந்தது.
எதிரிகள் மூலம் பிரச்சனை இருந்த போது சண்டையிட்டான். ஆனால் இயற்க்கை மூலம் பிரச்சனை எங்கின்ற போது அவன் தன்னை மீறிய சக்தி உள்ளது என நம்ப்பதொடங்கினான். இந்த நம்பிக்கைதான் கடவுளின் மூல ஆதரம். தன்னை மீறி விசயங்கள் நடக்கும் போது எல்லாம் தனக்கும் மீறிய சக்தியை நம்ப்பதொடங்கினான்.
முதலில் அவன் தன் இருப்பிடத்தில் இருக்கும் அடைக்கலம் கொடுக்கும் மரம், காற்று, தன்னீர் கொடுக்கும் மழை ஆகியவற்றை நன்றி மற்றும் தெவைகள் காரணமாக வணங்க ஆரம்பித்தான். பின் தன் இந்த வாழ்வை கெடுக்கும் சக்திகளை பயத்தின் காரணமாக வணங்க ஆரம்பித்தான். எனவே அவனை அழிக்க அல்லது ஆக்க சக்திகளான
நெருப்பு, நதிகள் மற்றும் ஒளி கொடுக்கும் சூரியன் ஆகியவற்றை வணங்க ஆரம்பித்தான்.
இப்போது மீண்டும் அந்த பாடலைப் பார்ப்போம் காற்று என்கிற சக்தி கொடியை அசைத்தது போல் இயற்க்கை அல்லது நம் முன்னொர்கள் கூறியது போல் எதோ ஒரு கடவுள் (என்னைப் பொறுத்தவரையில் எலக்ட்ரோ மாக்னட்க் போர்ஸ்) நம் பிரபஞ்சம் முலுவதும் நிறைந்தூள்ள அந்த சக்தி எதோ ஒரு இயக்கதின் காரணமாக உயிரினம் தொன்றி அது பரினாமவளர்ச்சி அடைந்து இருக்கலாம். எனினும் மனிதன் எனபன் தானாக உருவாகமல் இன்னொரு சக்தியால் உருவாக்கப்பட்டு இருக்க சாத்தியகூறுகள் அதிகம்.
ஆக கடவுள் மனிதனை படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புகொள்வார்கள். டார்வினின் கொள்கைபடி பார்த்தாலும் அந்த முதல் உயிரினத்தை மூலக்கூறுகள் எனகின்ற சக்திதான் படைத்தது, எனவே நாம் அறியாத சக்திதான் கடவுள் எனபது முதற்க் கருத்து. நமக்கும் மீறிய ஒரு சக்தி உள்ளது அது நம்மால் உணர மட்டும் முடியும், நாம் அதை கட்டுப்படுத்த முடியாது என மனிதன் நினைத்தாணே அன்றுதான் கடவுளும் படைக்கப்பட்டார்.அந்த சக்தி உள்ளது உன்மை ஆக கடவுள் இருப்பதும் உன்மை..
ஆக கடவுளின் தொடக்கம் என்பது மனிதனின் நன்றி, பயன்பாடு மற்றும் பயத்தின் காரணமாக பஞ்ச பூதங்ககளையும் வணங்க ஆரம்பித்தான். இவைகள் தான் முதல் கடவுள்.
ஆக இயற்கையின் மீது தன்னை மீறிய சக்தியின் மீது மனிதன் கொண்ட நம்பிக்கை தான் கடவுள். நம்பினால் கடவுள் நம்பாவிட்டால் இல்லை, அனால் மனிதன் எல்லொரும் ஒரு கட்டத்தில் கடவுளை நம்புவார்கள், அதுதான் கடவுளின் லீலை.. மரணம் எப்போது வரும், எப்பிடி வரும் என்று நிச்சயமாக தெரியாதவரை மனிதன் கடவுளை கண்டிப்பாய் நம்புவான். மரணத்தை மறைத்துதான் கடவுள் தன் நாடகத்தையும் நடத்துவார். ஒரு விசயம் தெளிவாக கொள்ளுங்கள் நம்பிக்கைதான் கடவுள். இதை நான் பின்னாளும் பலமுறை கூறுவென் அதாலால் மனிதனின் பயம் மற்றும் தெவைகள் தான் தன்னை மீறிய ஒரு சக்தியிடம் நம்பிக்கை கொள்ள வைத்தது.
எனவே நம்பிக்கைதான் கடவுள் என கூறி பதிவின் நீளம் கருதி முடித்து பின் மீண்டும் நமது இந்திய வரலாறும் இந்துக்கடவுள்களும் பத்தி எளுதுகின்றேன். நன்றி.

Thursday, August 20, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை

நான் வால்பையன் அவர்களை ஒரு பின்னூட்டத்தில் சிந்து,ஆர்ய,ஸ்மெரிய எகிப்து நாகரீங்களை படிக்க சொல்லி பசுபதி நாதர் ல இருந்து ஆரம்பிக்க சொன்னென், அவர் சில கேள்வி பதில்களை பதிவாக இட்டூள்ளார். அதன் தொடர்ச்சியாக தான் இந்த பதிவு.
நான் மனிதனாக பிறந்த்தமைக்காக் முதலில் பொருமைப்படுகிறேன் பின் இந்தியனாக இந்த பாரத கண்டத்தில் பிறந்த்து குறித்து மிகவும் பொருமை படுகின்றேன்.
இந்தியா ஏறக்குறைய 15,000 முதல் 10000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது அனால் எல்லா நாடும் தங்களின் ஒன்றும் இல்லாத சரித்திரம் காட்டி பொருமை படும் வேளையில் நாம் நமது சரித்திரம் திரிக்கப்பட்ட சரித்திரம் வைத்து சண்டை போடுகிறேம். இந்தியாவின் சரித்திரம் என நமது வராலாறு ஆசிரியர்களால் போதிக்கப்படும் சரித்திரம் பாதி திரிக்கப்பட்டவை, மீதி மறைக்கப்பட்டவை. நமது வலதுசாரி சிந்தனை உள்ள அரசியல் தலைவர்கள் அவர்களின் மேற்கு நாடுகளின் மூலம் நமது சரித்திரத்தை பாழ் படுத்திவிட்டர்கள். தங்களின் மதத்தையும் நாட்டின் அதிகாரத்தையும் பரப்புவதற்காக அவர்கள் நமது சரித்திரம் முலுவதும் எளானம் செய்தும் மாற்றியும் அமைத்தார்கள். ஆனால் மாக்ஸ் முல்லர் பாரட்டி விட்டு நம் முந்தைய முலிகை மற்றும் தத்துவங்க்களை காப்பியடித்து போனார். இங்கு நான் எனக்கு தெரிந்த இந்திய வரலற்றை எளுதி இருக்கிறேன். இதில் கருத்துவேறுபாடுகள் இருப்பின் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இது முற்றிலும் எனது சிந்தனை மட்டுமே.
நமது இந்திய சரித்திரம் மொத்தம். பல பாகங்களை கொண்டது.
நாகரீங்களின் காலம் ( திராவிட, சிந்து, ஆர்யா)
வேத காலம்.
மன்னர்கள் காலம்.
காந்தி காலம் முன் (காந்தியின் எரா)
காந்தி காலம் பின் (காந்தியின் எரா)
சுதந்திரம் பின் & முன் என பிரிக்கலாம்.
இதில் நாகரிக காலம் என்பது மனிதர்கள் கூட்டமாக தங்களுக்குள் கட்டுப்பாடுகள் ஏற்ப்படுத்தி வாழ முற்ப்பட்ட காலம்.
இதில் திராவிட நாகரீகம் என்பது இந்தியவின் தென் பகுயில் வாழ்ந்த்தவர்கள், இவர்கள் பொரும்பாலும் இந்தோ அஃப்பிரிக்க குடும்பத்தை ஸேர்ந்தவர்கள்.
இவர்களின் தொழில் வேட்டையாடுதல், கால்நடை வளர்த்தல், மீன் பிடித்தல் போன்றவை. மிகக் குறைவாகத் தான் விவசாயம் செய்துவந்தனர். இவர்களின் வீடுகள் பொரும்பாழும் குடிசை மற்றும் மூங்கில் மரவேலைப்பாடுடன் இருக்கும். இவர்களின் காலப்பிற்பகுதியில் தான் நெசவுத்தொழிலை(பருத்தி) செய்ய ஆரம்பித்தனர்.
சிந்து நாகரீகம் மட்டும்தான் நம்மிடம் ஆதாரத்துடன் உள்ளது, இவர்கள் சுட்ட செங்கல் மற்றும் களிமண் வீடுகளை பயன்படுத்தி வந்தார்கள். இவர்கள் கால்நடை வளர்த்தல் முக்கிய தொழிலாகவும் விவசாயம் அடுத்த தொழிலாகவும் இருந்து வந்தது. இவர்கள் கால்நடை (கம்பளி)ஆடைகளை பயன்படுத்தி வந்தனர். இந்தோ ஆசிய குடும்பத்தை செர்ந்தவர்கள்.
ஆர்ய நாகரீகம் இந்தியாவின் வடமேற்கு புறத்தில் இருந்தவர்கள், கருப்பு நிற திராவிடர் மற்றும் பளுப்பு நிற இந்தியர்களையும் கண்ட வெள்ளைப்பரங்க்கிகள் தங்களை போல சிவந்த நிறமுடைய இவர்களை இந்தியர்கள் என சொல்ல கூச்சப்பட்டு இவர்களை இந்தோ எரானிய குடும்பத்தில் ஸெர்த்தனர். உன்மையில் ஆர்யர்கள் அஃஃப்கானிஸ்தன் மற்றும் பஞ்சாப் பகுதியில் வாழ்தவர்கள்தான். இவர்கள் வந்தொறிகள் என்றால் இவர்களின் மூதாதர்யகள் எங்காவது வசித்து இருக்கவேண்டும் அல்லது இன்னும் இருக்கவேண்டும் அல்லவா? ஏன் இல்லை என்றால் அவர்களின் இருப்பிடம் இந்தியாவின் வடமேற்கு பகுதிதான். அவர்கள் அங்கு குடிஏற்வில்லை எனபதுதான் உன்மை.
இவர்களின் தொழில் முக்கியமாக கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயும் ஆகும். இவர்களும் கம்பளி ஆடைகள் தான் நெசவு செய்ததனர்.
இந்த மூன்று நாகரீகளுக்கு உள்ள ஒற்றுமை என்ன என்றால் கால்நடை வளர்ப்பும் விவசாயம்தான். இதுதான் இந்த மூன்று நாகரீகங்க்களும் ஒன்றுடன் ஒன்று கலக்க வழி செய்தது.
இந்த மூன்று நாகரீங்களும் தங்களுக்கு உள்ளும் சுமெரிய, கிரெக்க நாகரீங்களுடன் தொடர்பு கொண்டும் இருந்தது. மற்ற இன்று பகுத்தறிவு போசும் மேல்நாட்டு நாகரீங்கள் எல்லாம் அன்று செவ்விந்தியர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் சமுதாயம்தான்.
இதில் ஆற்றின் போக்கு மற்றும் நாகரிக கலப்பு காரணமாக சிந்து நாகரீகம் வீழ்ச்சி அடைந்து ஆர்ய நாகரீகத்துடன் முற்றிலும் இனைந்த்து. பழக்கவழக்கம் ஒன்று என்பதால் முலுதும் இனைய சாத்தியம் இருந்தது.
இதன் பின் பழக்க வேறுபாடும் தூர இடைவெளி அதிகம் என்பதால் திராவிட நாகரீகம் முற்றிலும் ஆர்ய நாகரீகத்துடன் இனையவில்லை.
ஆனாலும் இரண்டு நாகரீங்களும் இந்தியாவில் பக்தி என்ற ஒலுக்கம் காரனமாக நல்ல கட்டுபாடு இருந்துவந்தது. இந்த பக்தி மற்றும் ஒலுக்க கட்டுபாடு இருக்கும் வரை இந்தியாவை முலுதும் பிடிக்க முடியாது என அறிந்த ஆங்கில அரசு இதனை சிதைக்க ஆரம்பித்தது. பின்னால் பார்ப்போம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

பள்ளிக்கு கட் அடிக்கலாம் வாங்க

நான் ரெண்டாவது படிக்கும் போது நடந்த சம்பவம். எனது நண்பன் அந்தொனி பத்தி முந்தைய பதிவில் கூறீருந்தென். அவனுடன் நடந்தது. எங்கள் ஊரில் ஒரு வாய்க்கால் இருந்தது அதன் பெயர் இராஜவாய்க்கல்.
அதில் வருடம் ஆறுமாதங்கள் தண்ணிர் ஓடும் பின் சாக்கடை தண்ணிர் ஓடும், தண்ணிர் ஓடும் சமயங்களில் அதில் குளிப்பது என்பது எனக்கு பிரியம் அதிலும் கட்டைபாலத்தின் மீது ஏறி அதில் குதித்து நீந்துவது நல்லா இருக்கும்.
எங்கள் வீட்டில் அவ்வளவு குளிக்க அங்க அனுப்ப மாட்டார்கள். சுமார் 10 அடி உயரத்தில் இருந்து குதித்து நீச்சல் அடித்து கரை ஏற வேண்டும். ஒரு நாள் நான் ரெண்டாவது படிக்கும் போது, அந்தொனீ என்னிடம் மதிய வகுப்பு போது குளிக்க போலாமா என கேக்க நானும் விசயம் புரியாமல் அவனுடன் குளிக்க சென்றென். பின் பள்ளிக்கு வந்தால் எனனை காணாமல் பார்த்து இருக்கார்கள். டீச்சர் எங்கு சென்றிர்கள் எனக்கேக்க நான் சத்தமாக வீரசாகஸம் புரிந்தவனாக வாய்க்காலுக்கு குளிக்க போனாம் டீச்சர் என கூறினென். அவர் பள்ளிக்கு கட் அடித்தது இல்லாமல் அதை பொருமையாக கூறுகிறாய் என அடித்து எங்களை பள்ளியின் பிரயார் க்ரௌண்டில் முட்டிபோடவைத்தார்.
வெய்யில் மணலில் முட்டிபோட்டது கூட வலிக்க வில்லை எல்லாரும் பார்த்து கொண்டுபோனது எனக்கு அவமானமாக இருந்தது. அந்த டீச்சருக்கு நான் யார் எங்கின்ற விவரம் தெரியாது. தெரிந்தால் எங்கள் வீட்டுக்கு சொல்லி என்னை அடிக்காமல் விட்டுஇருப்பார். நான் தர்மசங்கடத்தில் முட்டிபோட்டு இருந்த போது என் அப்பா பள்ளிக்கு வந்த்தார். அப்பாவை பார்த்த உடன் எனக்கு பயம் அனாலும் முட்டி போடவிடமாட்டார் என சந்தொசம்.
என் அப்பாவை பத்தி சொல்லனும் இல்லையா.. அவர் இந்த பள்ளிகளுக்கு ஒரு டேப்பிடி இன்ஸ்பெக்டர் ஆப்பிஸ் இருக்கும் இல்லை ( கல்வித்துறை ஆய்வாளர் அலுவலகம்) அதில் அவர் ஹெட் க்ளார்க் ஆக வேலை பார்த்துவந்தார். நல்லவர், யாருக்கும் உதவீ செய்வார். அந்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர் அனைவரும் ஒரு சந்தெகம் என வந்தால் என் அப்பாவிடம் தான் கேப்பார்கள். எனது முன்று ஸகோதரிகள் மற்றும் 4 ஸகோதர்கள் அனைவரும் நல்ல நடத்தையும் நல்ல படிப்பும் உள்ளவர்கள். எங்களின் வீட்டில் படிப்பும் டிசிப்பிலின் தான் முக்கியம், இதில் தவறினால் பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள், இதனால் எங்கள் குடும்பத்திற்கு நல்ல பெயர் இருந்தது. மற்றபடி நான் கடைக்குட்டி செல்லம் ரெம்பா அதிகம். நான் முட்டிபோட்டு உள்ளதை பார்த்தபடி உள்ளே சென்ற என் அப்பா அதை பற்றி தலைமை ஆசிரியரிடம் ஒரு வார்த்தை கூட போசாமல் வந்தார். என் அப்பாவை வழியனுப்ப வெளிய வந்த தலைமை ஆசிரியர் நான் முட்டி போட்டு உள்ளதை பார்த்து காரணம் கேக்க அப்போதுதான் என்னை பார்த்த காந்திமதி டீச்சர் என் வகுப்பு ஆசிரியையிடம் நான் யார் என கூறினார். உடன் அந்த டீச்சர் வந்து தலைமை ஆசிரியரிடம் என் அப்பாவிடமும் வந்து காரணத்தை கூறி மன்னிப்பு கேக்க தலைமை ஆசிரியை முட்டிபோட்டது போதும் எனக் கூறினார். அதுவரை அமைதியாய் இருந்த எனது அப்பா இல்லை அவன் இன்னும் ஒரு அறைமணி நேரம் முட்டிப் போடட்டும் என கூறி ஆசிரியை பாரட்டிச்சென்றார்.
எனக்கு வருத்தம் தாங்கவில்லை. அப்போதுதான் நான் எதோ தவறு செய்துவிட்டென் என உனர்ந்த்தென்.
பின் வீட்டிற்கு வந்ததும் அப்பா சிவந்து வீங்கிய என் முட்டிகாலுக்கு என்னை தடவி பள்ளியில் இருந்து சொல்லாமல் வெளியில் செல்லக்கூடாது என அறிவுரை கூறினார். ஆனால் எங்க அம்மா மேலும் முட்டி போட சொன்னத்தற்க்காக எங்க அப்பாவை நல்லா டின்(திட்டி) கட்டினாங்க்க எங்க அம்மாவிற்க்கு அவர் பிள்ளைகளை யாரும் எதும் சொன்னால் பிடிக்காது.

மாடு அடக்க போலமா

எங்கள் ஊரில் ஜல்லிகட்டு நடக்கும் விதம் தனி அலாதியானது, மைதானம் ஏதும் கிடையாது ஆதலால் ரோட்டில் தான் மாடு ஓடவிடுவார்கள். மாட்டுக்கு நலலா சரக்கு ஏற்றிவிட்டு மனிதர்களும் சரக்கு சாப்பிட்டு அடக்குவார்கள்.
நான் ஜல்லிகட்டு கிளம்பும்போதே எனக்கு எங்க அம்மா ஆயிரம் கண்டிஸன் போட்டுதான் அனுப்புவார்கள்.
ஆண்கள் ஒரு ட்ரவுசர் போட்டு, முண்டா பணியன் அனிந்து காளையை அடக்குவார்கள். குழந்தைகள் நடை பழகும் வணடியில் ஒரு நீழா மூங்கில் தடியில் கட்டி மாட்டின் முன் ஒடவிட்டு மாட்டை உசுப்பேற்றி ஓடவிடுவார்கள்.
மாடு அந்த வண்டியை முட்டித்தள்ளி நல்ல வெறியில் வரும் அப்போது மாட்டை அடக்கி அதன் களுத்தில் உள்ள துனியை எடுப்பார்கள். நானும் மாடு அடக்க போவன். எங்கள் ஊரில் தெற்க்கு தெரு, வடக்கு தெரு மற்றும் பள்ளர் தெரு( இப்ப சீதா நகர்) ஆகிய இடங்களில் ஜல்லிகட்டு நடக்கும். நானும் ட்ர்வுசர் சட்டை அனிந்து போவென்.
அப்ப அங்கு மாங்க்காய் மற்றும் குச்சி ஜஸ் வாங்கித்தின்று விட்டு நல்ல உயரமான பி டவுல் டி ஆப்பிஸ் காம்பொவுண்ட் சுவரின் மீது ரொம்ப ஸேப்பிடிய உக்காந்து பார்த்து விட்டு வருவென். நம்ம லெவலுக்கு மாடு அடக்கமுடியாது பாஸ். மாடு நம்ம ஃப்ரெண்ட் இல்ல. அதான் அடக்க ரிஸ்க் எடுக்கறது இல்லை.

இருவர் ஒரு வித்தியாசமான உன்மைக் கதை

எனக்கு 5 வய்து வந்ததும் எனனை சர்ச்சு தெருவில் உள்ள தூய வளனார் பள்ளியில் ஸேர்த்தார்கள்.

மூன்று வயதில் சி ஸ் ய் கான்வெண்ட் பள்ளியில் ஸேர்த்து பின் திக்குவாய் வந்து, இந்த மரமண்டைக்கு தமிழ் மீடியம் போதும் என முடிவு செய்து வீட்டின் அருகில் உள்ள இந்த பள்ளியில் ஸேர்த்தார்கள். (அப்பக்கூட எனக்கு இப்பவும் தமிழ் எனக்கு எலுத வராது எனசொல்ல வெக்கப்படுகின்றென்). காக்கி ட்ரவுசரும் வெள்ளச்சொக்காயும் போட்டுக்குட்டு மஞ்ச்ச பையில சிலெட்டு பென்சில், புஸ்த்தகம் தூக்கிட்டு போனன். மொதல் ரெண்டு நாள் அக்கா கொண்டு போய் விட்டாங்க. அப்புறம் நானா ஒடிப்போய்விடுவென். ஓரே தெருவுல இருக்க ஸ்லுக்கு எதுக்கு பாடிகார்ட் எல்லாம். ஒன்னாம் வகுப்பில் வந்த காந்திமதி டீச்சர் தான் எனக்கு எலுத்து அறிவித்த தெய்வம்.
எப்பவும் சிரித்தமுகம் அவர்கள் யாரையும் அடித்து நான் பார்த்தது இல்லை. நல்ல ஆசிரியர்க்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அந்த எனது குரு + தெய்வத்திற்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

சரி குருவணக்கம் முடிந்தது, மேட்டருக்கு போவம். இந்த ஒன்னாம் வகுப்பில் எனது பக்கத்தில் தடியா, கொஞ்சம் கருப்பா, குண்டா வந்து உக்காந்தவன் தான் ஆனந்தக்குமார் என்னும் ஆனந்த். இவன் சமயம் கிடைக்கும் போது எல்லாம் என்னை அடிப்பான், என் தொடையில் நல்லா கிள்ளிவிடுவான். நான் டீச்சரிடம் சொன்னால் அவர்கள் சமாதானம் செய்து வைப்பார். அப்படி சொன்னத்தற்கும் ஸேர்த்து அடிப்பான். ஏன் எதற்க்கு என்று காரணம் கிடையாது, என்னை அடிப்பதில் அவனுக்கு ஒரு குசி. அவ்வளவுதான். நான் இவனை அடிக்க இவனை வீட நல்ல பலசாலி நண்பன் ஒருவனை ஸேர்த்து கொண்டேன் அவன் பெயர் அந்த்தொனி ( இவனுக்கும் தனி பதிவு போடுவம் இல்லை). ஒரு நாள் என் வீட்டில் எனது சிவந்த தொடைகளை குளீக்க வைக்கும் போது பார்த்து காரணம் கேக்க நான் ஆனந்தன் அடிக்கும் விசயத்தை சொன்னேன். என் அக்கா என்னை அவன் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவன் அம்மாவிடம் சொன்னார்கள். அவன் அம்மா என்னை அழைத்து அவர் மடிமீது அமரவைத்து, எனக்கு ஆறுதல் கூறினார்கள். பின் அவர் ஆனந்தனை திட்டிவிட்டு நீங்கள் இருவரும் இனிமேல் முதல் நண்பர்கள் ஆக பழக வேண்டும் என கூறினார்கள். தானே கொண்டுவந்து வீட்டில் விடுவதாக கூறிய அவர் என் அக்காவை அனுப்பிவிட்டு எனக்கு தின்ன பாலக்காடு சிப்ஸ், மற்றும் அல்வா கொடுத்தார்கள். அவர் கனவருக்கு கேராளாவில் வேலை என்பாதால் தினமும் அவர்கள் வீட்டில் இந்த நொருக்கு தீனீ கிடைக்கும்.
அதன் பின் நானும் ஆனந்த குமாரும் ஒன்னாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பு ஒரே பொஞ்சியில் தான் படித்த்தொம். இருவரும் குருப் ஸ்டடி கூட படித்த்தொம். நான் அவனும் மாத்தி மாத்தி 3 அல்லது 4 ராங்க் எடுப்போம். +2 வில் நான் முதல் தனிப்பாடமாக அறிவியல் மற்றும் கணக்கு பாடம் எடுக்க அவன் காமர்ஸ் வகுப்பில் இனைந்தான். அப்போதும் பக்கத்து பக்கத்து வகுப்பு ஆதலால் எங்கள் நட்பு தொடர்ந்தது.
கல்லூரியில் நான் பி.எ. கூட்டுறவு எடுக்க அவன் பி.காம் ஸேர்ந்தான் அந்த மூன்று வருடமும் நாங்கள் பக்கத்து வகுப்பில் படித்தால் எங்கள் நட்பு ஒன்னாம் வகுப்பில் இருந்து கல்லூரி முடியும் வரை தொடர்ந்து இருந்தது. அவன் திருமணம் பாலக்கட்டில் நடந்து நான் போய் இருந்து பின் மழம்புலா டாம் சென்றுவந்தென். இது நல்ல நண்பர்கள் இருவரின் கதை. என்னங்க நல்லா இருக்கா?????

தமீங்கலம் வேண்டாம் பாஸ்

எங்கள் ஊர் தாராபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிதான் அப்போது பெரிய பள்ளி.

ஆறாம் வகுப்பு முதல் +2 வரை இங்குதான் படித்து முடித்தென். என் வகுப்பில் 60 நண்பர்கள் படித்தார்கள்.

நாங்கள் 5 மாணவர்கள் மட்டும் ரொம்ப முக்கியமான ஆளுகள். அது எப்போதும் முதல் மதிப்பொன் எடுக்கும் வெங்கடெசன், ரெண்டாம் மதிப்பென் எடுக்கும் பாலசந்திரகுமார். மூன்றாம் அல்லது நாண்காம் மதிப்பென் எடுக்கும் நான். இதுபோல் எனது உயிர் நண்பன் அனந்தகுமார்( நான் 3 என்றால் இவன் 4, இவன் 3 எனறால் நான் 4 மதிப்பென் எடுப்போன். இவர் நண்பன் ஆனது தனி பதிவு போடனும் தலை)
5 ஆவது மதிப்பென் எடுக்கும் சகுனிபாளையம் குப்புசாமி. இவர்கள் தான் எங்கள் வகுப்பின் எல்லா மனப்பாடம் செய்து ஒப்பித்தல், மற்றும் பாட சம்ப்பந்தமான வேலையும் செய்வொம்.

ஒரு நாள் ஆர்.கெ. நாராயனின் ஒஹ் ஆங்கர் இஸ் ஆன் ஈவில் திங்க், என்ற பொயம் ஒப்பிக்கவேண்டும்.

நான் படித்து ஒப்பித்து பிரம்படியில் இருந்து தப்பித்தும் விட்டான். அப்போது கோவிந்தசாமி எங்கின்ற நண்பன்
கைகளை பின்னால் கட்டிகொண்டு கட கட என முச்சு விடாமல் சத்தமாக ஒப்பித்தான். அவன் ஒப்பித்த விதத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிக அதிசயமாக பார்த்தொம். அவன் அந்த அளவு புத்திசாலி இல்லை, பின் எப்படி என வியப்புடன் பார்த்து பாரட்டினேன். ஆனால் வாத்தியாருக்கு ஆச்சயர் கலந்த சந்தெகம் எப்படி என அடுத்த நாள் அவனை ஒப்பிக்கும் முறை வரும் பொலுது அதே போல் ஒப்பித்தான். ஆசிரியர் அவனை போர்டில் போயத்தை எலுத சொன்னார். அவன் திரு திரு என விளித்தான். ஏண்டா ஒப்பிக்கர எலுத மாட்டியா என ஆசிரியர் மிரட்ட அவன் உன்மையை சொன்னான். ஆங்கிலத்தில் உள்ள போயத்தை அப்பிடியே தமிழில் எலுதி ஒப்பித்தானம்.
இப்படி ஒரு முறை இருப்பது அப்பொதுதான் எனக்கு தெரியும். நல்ல அடியும் வாங்கினான். இப்படி படிப்பது நல்ல முறை அல்ல நீங்கள் படிக்கவேண்டும் எனத்தான் ஒப்பிக்கசொல்லுகிறம் ஆதலால் படித்து ஒப்பியுங்கள் ஏமாத்தீர்கள் என சொன்னார். கடைசியாக அவன் திறமையை பாரட்டிய ஆசிரியர் அவனை இனிமேல் படித்து ஒப்பிக்கசொன்னார்.

Tuesday, August 18, 2009

நட்பின் ஆரம்பம்,,,

நான் தாராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தண்டபாணி என்கின்ற நண்பன்
இருந்தான் அவனுக்கு கொஞ்சம் நாக்கு குளறும். அவன் திணறி திணறி போசும் மழலை தமிழ் எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
அவன் வாழைப்பழம் என்பதை வாயப்பயம் எனவும் புஷ்பம் என்பதை புய்பம் எனவும் கூறுவான்.
நாங்கள் அவனை பலசமயம் கிண்டல் செய்தாலும் அவன் அதை பொருட்படுத்த மாட்டன்.
நல்ல நண்பன். நான் பலமுறை அவனுக்கு சொல்லித்தர முயன்று முடியாமால் போனது.
அப்போது பெரியசாமி என்று ஒரு ஆசிரியர் இருந்தார், மிகவும் கண்டிப்பானவர்.
அவர் அந்த வழியாக நடந்து வரும்பொது நான் தண்டபாணியிடம் பெரியசாமி என கூறும்படி கூறினேன்.
அவர் வருவதை அறியாத அவனும் பெய்யசாமி பெய்யசமி என கூறினான்.
தன்னை கிண்டல் செய்கிறான் என்று அவர் அவனை நன்றாக அடித்துவிட்டார். மிகவும் அடி வங்கினாலும் எங்களை அவன் காட்டிகொடுக்கவில்லை. விளையாட்டாய் ஆரம்பித்த சம்பவம் மிகுந்த வேதனையில் முடிந்த்தது.
நான் அவனிடம் பலமுறை மன்னிப்பு கேக்க அவனோ சிரித்துகொண்டு சரி விடுடா என்றான். அதுமுதல் அவன் எனக்கு நல்ல நன்பன் ஆனான். நான் அவனுக்கு பாடம் சொல்லித்தர ஆரம்பித்தென்.

Monday, August 17, 2009

பிரார்த்தனை செய்வோம்

மனது வலிக்கின்றது, இன்னொரு உயிர் துடிக்கும் போது எல்லாம் அதூவும் துடிக்கின்றது.

வாடும் பயிர் வாடும் போது எல்லாம் வாடினேன், வாடி படும்துயர் அடைந்தென் என வள்ளளாரின் கூற்று போல

ஒரு சக பதிவர் இதய வலியில் வேதனை படுவதை நினைக்கும் போது மனம் வாடுகின்றது,

உடனடியாக பொருள் அல்லது உதவி ஏதும் செய்ய இயலவில்லை எனும் போது வெக்கம் வருகிறது.

ஆனாலும் என்னிடம் இருப்பது பிரார்த்தனை ஒன்றுதான்.

நான் வணங்கும் தெய்வங்கள் அவர் காக்க அருள் புரியட்டும். அந்த ஜந்து மலைக்கு அதிபதி எனது அய்யப்பன் காப்பான் என நம்பிக்கை வைக்கிறேன்.

கடவுளை நம்பினொர் கை விடப்பாடார் என்பது பைபிள்.

தட்டுங்கள் திறக்கும் கேளுங்கள் கிடைக்கும் என்பது குரான்.

நாமும் நம்புவோம் நமது பதிவர் நலமுடம் திரும்பி வந்து நம்முடன் இணைவார்.

பலரும் கூடி செய்யும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு நிறைய பலங்கள் உள்ளதாக தத்துவங்கள் கூறுகிறது.

எனவே நாம் அனைவரும் பிரார்த்திப்போம் அவர் குணமடைய,

நமக்கு மீண்டும் அல்வா கொடுத்து மகிழ்ச்சியில் அழ்த்துவார் என நம்பிக்கையுடன்..............

Friday, August 14, 2009

எனது இரத்தம்

ஈழத்தில் நடக்கும் போராட்டங்கள் எனக்கு சிறூவயது நினவுகளை தூண்டுகிறது.

நான் +2 படித்து கொண்டு இருந்த சமயம் ஈழத்தில் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டு இருந்தது,

அச்சமயம் ஜீனியர் விகடனில் இப்பொது வரும் ஈழப்போராட்ட கட்டுரை வெளீவந்து கொண்டு இருந்தது.

அதில் குட்டிமணி, தங்கதுரை, ஜகன் அகியோரின் போராட்டம் மற்றும் தூக்கு தண்டனையும் என்னை விடுதலை புலிகள் ஆதரவு ஆளக மாற்றியது. நான் என் பாட புத்தகங்களீல் கிட்டு, பிரபாகரன் படங்களை ஒட்டி வைத்து இருப்பேன்.

எனது அக்கா அவர்கள் அசிரியராக பணி புரியும் பள்ளியில் தேசிய மாணவர் படையின் அதிகரியாக உள்ளார்,

ஏனவே அவர் பள்ளியின் அனிவகுப்பு நடக்கும் போது எல்லாம் நானும் போவேன், ஆதலால் எனக்கு இந்திய ரானுவத்தின் மீது மட்டற்ற காதல் உள்ளது.

அது 1975 1976 காலம் நானும் என் நன்பன் ப்ரபா எங்கின்ற பிரபாகரனும் ( இவன் பெயரும் பிரபாகரன் இவனும் பிள்ளை இனத்தை சர்ந்தவன்) என்னை காட்டிலும் தீவீர விசுவசி. நாங்கள் இருவரும் வீடு வீடாக சென்று துணி, மருந்துகள் ஆகியன தீரட்டி அதை ஈழத்தமிழருக்கு அனுப்பி வைப்போம்.

இந்த காலகட்டத்தில் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் போட்டு அதன் பின் இந்திய ரானுவம் இலங்கை சென்றது.

இந்திய ரானுவம் முதலில் புலிகளை சரியாக கணீக்கவில்லை, அதன்பின் முதலில் பாரா மிலிட்டரி படை ஒன்றை
வன்னிக்காட்டில் இறக்கியது. அதில் மரத்தில் மீது இருந்த புலிகள் அந்த பாரா மிலிட்டரி படை வீரர்களை அந்தரத்தில் குருவி சுடுவது போல சுட்டார்கள். மொத்த வீரர்களூம் கொல்லப்பட்டனர். இதுதான் புலிகள் தங்களுக்கு வரவளைத்து கொண்ட முதல் அழிவு. இந்திய ரானுவத்தினரும் இதனால் கோவம் கொண்டு வன்னி பகுதியில் அத்து மீறீ நடந்து கொண்டனர்.
இந்த சம்வத்திற்கு பின் நான் விடுதலை புலிகளின் ஆதரவாக போசுவதை கூட நிறூத்தி விட்டன்.

ஆனாலும் நம் தமிழ் ரத்தம் எங்கு சிந்தினாலும் நம் இதயம் துடிப்பதை நிறுத்த முடியாது.

எனக்கு மிகவும் புடித்த இளம் தலைவர் இராஜிவ் காந்தி அவர்கள் கொல்ல பட்டவுடன் அது புலிகளின் மீது வெறுப்பாக மாறியது.
இருந்தாலும் தற்போது நடைப்பெற்ற சண்டையில் புலித்தலைவர் கொல்லப்பட்டது பல லட்சம் தமிழர்களீன் மரணம் நமக்கு வேதனை தருவதாக உள்ளது.
தனித்தமிழ் ஈழத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை எனறாலும் ஒரு சமஸ்டி அரசாங்கம் அமையும் என நம்புகிறேன்.

ஈழத்தமிழரின் வேதனை தீரவும் அவர்களூக்கு ஒரு நல்ல பழய நிலமை தீரும்பவும் இறைவனை பிரார்த்தனை செய்வது நன்மை பயக்கும். தினமும் வரும் செய்திளை படிக்கும் போது நம் இதயம் துடிக்க சொல்வது இறைவா எனது சகோதர சகோதரிகளூக்கு நன்மையும் நல்லதயும் செய்யுங்கள்.

Thursday, August 13, 2009

ஒரம் போ, ஒரம் போ

சிறுவயது ஸ்ய்க்கீள் ஓட்டூவது என்பது அலாதி இன்பம், அதிலும் ஒட்டி பலகுவது அதை வீட இன்பம்.
நிறைய விளுப்புண்கள், பின் அனுவங்கள் இருக்கும், அதிலும் வித்தியாசமான அனுபம் என்னுது,
நான் கத்து கொண்டு புதியதாக ஒட்ட அரம்பித்த சமயம், எனக்கு அவ்வளாக ஹண்ட்ல்பார் வளைக்க தெரியவில்லை, எங்கள் ஊர் காவல் நிலைய அருகே உள்ள ஒரு ரவுண்டானாவில் வளைக்க தெரியாமல்,
ஸைக்கிளை நேராக காவல் நிலையம் உள்ளோ உள்ள பூங்காவில் கொண்டு மொத விட்டு கிழா விலுந்தொன்.
அங்கு உள்ள ரேய்ட்டெர் ஒடி வந்து ஏண்டா காவல் நிலயத்தில் கொண்டு வந்து மொதர என்று என்னை புடித்து கொண்டார், நான் பயந்து நடுங்கி நின்றென், இல்ல அய்யா எனக்கு ஒட்டத் தெரியாது என்று கூறீயும் அவர் விடவில்லை, அப்பொது ஒரு மகளிர் காவலர் ஒருவர் என் அக்காவின் ஸ்டுடெண்ட் என கூறி என்னை அவரிடம் இருந்து அழைத்து சென்று அமர வைத்து பின் பயப்படாமல் இருக்க கூறீனார். பின் எனக்கு டீ முறூக்கு வாங்கி தந்து அனுப்பினார். இப்பொது நினத்தால் கூட சிரிப்பு வரும் இந்த சம்பவம் எனக்கு ஒரு நல்ல அனுபவம் ஆகும்.
பின் வண்டி ஒட்டும் பொது எல்லாம் காலி மைதானம் சென்று விடூவென், ஒரம் போ ஒரம் போ ராஜாதி ராஜா வண்டி வருது என பாட்டுடன் வண்டி ஒட்ட அரம்பித்தன்.

Wednesday, August 12, 2009

ஏ ஆத்தா ஆத்தோரமா வாரிய

அது பூவிலங்கு படம் வெளியனா சமயம், நகரங்களில் மட்டும் வெளியானது.
அப்பொது எங்கள் உருக்கு வந்திருந்த சித்தி மகன் நான் அனைவரும் அமராவதி ஆறுக்கு குளிக்க சென்று இருந்தொம். நான் மற்றும் உள்ளுர் நன்பர்கள் அனைவரும் ஆற்றின் கொஞ்சம் ஆழமான பகுதியில் குளித்து கொண்டு இருந்தொம். என் சித்தி மகன் சென்னை வாசி ஆதலலால் கொஞ்சம் முழங்கால் அளவு தன்னிரில் விரமாக நீந்தி கொண்டு இருந்தான், அவன் நல்ல சந்தொசத்தில் ஏ ஆத்தா ஆத்தொரமா வரியயா என பாட
அங்கு குளித்த பொண் அவனை திட்ட ஆரம்பித்து விட்டனர். சத்தம் கேட்டு ஒடி போய் பார்த்தால் அந்த அம்மா
குளிக்கும் இடத்தில் எஃப்டி பாடுகிறான் என திட்ட ஆரம்பித்து விட்டார். நல்லவேளை அவர் எங்கள் வீட்டில் காய் விற்ப்பவர். நான் அது புதியதாக வந்திருக்கும் பட படல் எனவும் அவன் வேணூம் என்று பாடவில்லை தெரியாமல் பாடிவிட்டான் என கூறியதால் சமாதனம் அடைந்தார், பின் பெரிய இடத்து பசங்க ஏன் இது மாதிரி பாட்டு எல்லாம் பாடறிங்க போய் படிப்பு எளுத்த பாருங்க என புத்தி சொன்னார் பின் பாட்டு எலுதியவனை திட்டி கொண்டு போனர்.
நான் என் தம்பிடம் டாய் இது ஊருடா ஏதாது பிரச்சனை என்றால் டின் கட்டி விடுவார்கள் என்று புத்தி சொன்னொன். இன்றும் அந்த பாடலை கேக்கும் போது எல்லாம் எனக்கு சிரிப்பு வரும். ஆனால் அவனுக்கு சிறுவயது மற்றும் பாடலின் அர்ததம் புரியமால் தான் பாடினான். இப்ப வர தரம் குறைந்த பாடலை சிறிய வயது குழந்தை டீ வீ மேடையில் பாட அதன் பொற்றோர் ரசித்து கேக்கின்றனர். என்ன இருந்தாலும் நமது காலம் பொற்காலம் தான்.

Friday, August 7, 2009

அமராவதி என் காதலி

அமராவாதி ஒரு பெண் அல்ல அவள் ஒரு ஆழகான நதி, ஆம் உடுமலை அமராவதி அனையில் பிறந்து எனது ஊர் தாரபுரம் வந்து பின் கருர் தாண்டி கவிரியில் கலக்கும் நதி.
அதிக ஆழம் பின் அதிக இலுவை இல்லாத குளிக்க சுகமான ஆறு.
அதும் தாரபுரத்தில் அந்த ஆறு பரந்து விரிந்து அதிக ஆழம் இல்லாமல் ஒடும் அழகு தனி.
என் சிறுவயது வாழ்க்கை முலுதும் இந்த ஆறு கலந்து இருக்கும்,
என் பிக்னிக் ஸ்பொட் எனறால் அது இந்த ஆறு தான்.
நான் நீச்சல் கத்துகொண்டது இங்குதான், படிப்பது கூட இந்த ஆற்றீன் கரையில் தான்.
இதில் ஆறு மதம் தன்னிர் ஒடும் 3 மாதம் தன்னிர் கிடையாக இருக்கும். 3 மாதம், வற்றீ இருக்கும்.
எல்லா காலம்களில் நாங்கள் இந்த ஆறு பயன் படுத்தி வருவாம்.
சபரி மலை காலம் இங்கு காலையும் மாலையும் குளிப்பது ஒரு சுகமான அனுபவம்.
பயம் இல்லமால் குளிக்கலாம் என்பது மிகவும் நன்மை. குடிக்க அருமையான தன்னிர்.
இந்த ஆற்றீல் நீங்களும் ஒரு முறை குளித்து பாருங்கள்.

Tuesday, August 4, 2009

வரம் தரும் அனுமான்

அன்பான வாசாகர்கள் இது எனது முதல் பதிவு, படித்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றன்.
எனது சொந்த ஊர் தாராபுரம், ஈரொடு மாவட்டம்.
தாராபுரத்தில் உள்ள ஸ்ரீ காடு அனுமந்தராய ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ஹனுமன் எனது விருப்ப தெய்வம் ஆகும்.இவர்தான் எனது வழிகாட்டியும் ஆவார்.

இந்த ஹனுமான் சிலை பூமியை ஏர் கொண்டு உழவு செய்யும் போது கிடைத்தது. இந்த விக்ரகம் முன் உள்ள இராமர் சீதா சிலை தாஞ்சாவுர் அருகில் மணல் மேட்டில் கிடைத்தது.ஒருமுறை எங்கள் ஊரில் உள்ள கோயில் தக்கார் ஒருவருக்கும்,இந்த அனுமார் சிலை பூஜை செய்பவருக்கும், தாசில்தாருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கனவு வந்து, அதில் இந்த மணல் மேடு அடையாளம் காட்டி அந்த சிலைகளை இங்கு கொணர்ந்து பிரதிஸ்டை செய்யுமாறு பணித்தார்.

இந்த ஹனுமான் சிலை ஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் ப்ரதிஸ்டை செய்தது.
ஒரு குட்டி கதை ( சினிமா பானில சொன்னா ப்லாஸ்பேக்)
ஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் மத்வ மத பீடாதிபதியா இருந்தப்ப அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது.
இனம்புரியாத வருத்தம் இருந்தது. அது ஏன் என்று பார்த்த பொழுது அவர் முன் ஜன்மத்தில் ப்ரகலாதனாக அவாதரம் செய்ததாலும், அசுர ஜென்ம பாவம் காரணமாக அவர் மனதில் நிம்மதி இல்லய். எனவே அவர் 1008 இடங்களில் ஹுனுமார் சிலை நிருவ வெண்டும் எனக் கண்டுபிடித்தார்.அவர் இந்தியக் கண்டம் முழுவதும் 1008 இடங்களில் சிலை நிறுவினார், அதில் ஒன்றுதான் ஸ்ரீ காடு ஹுனுமந்தராய ஸ்வாமி திருக்கொவில்.

மிகவும் சக்தி வாய்ந்த அஞ்சிநேயர் இவர், நின்ற திருக்கோலம், பார்க்க பரவசம் தரும்,
ஒரு கையில் பாரிஜாத மலரும், மறுகையில் அபயஹஸ்தம் வழங்கும் திருக்கோலம்.
கிழக்கு பார்த்த முகம் இடையில் கத்தி, வாலில் முன்று மணிகள் கட்டி இருக்கும்..
ஒரு சமயம் அங்கிலயர்கள் காலம் அப்போது அங்கில தாசில்தார் ஒருவருக்கு முதுகில் ராஜா பிளவை என்கின்ற வியாதி வந்து மிகவும் சிரமப்பட்டார். அப்போது அவரிடம் நீங்கள் இங்கு உள்ள அமராவதியாற்றில் நீராடி பின் இந்த கோவிலுக்குப் போய் வாருங்கள் உங்களின் வியாதி தீரும் என்று சொன்னார் அவரின் துனைத்தாசில்தார். அவரும் தினமும் இந்த கோவில் வந்து துளசி தீர்த்தம் வங்கி பருகினார். ஒரு நாள் கனவின் போது ஒரு குரங்கு வந்து அவர் முதுகை தடவு தந்தது போல் கண்டு எழுந்தார். அடுத்த சில நாள்களில் அவர் வியாதி முழுவதும் குணம் ஆகியது. அவர் இந்த கோவிலுக்கு முன் மண்டபம் கட்டிக் கொடுத்தார். இவர் நடத்தும் அற்புதங்கள் ஏராளம்.
பீ. வீ நரசிம்ம ரொவ் மகன் கோவில் பின் மண்டபம் கட்டி கொடுத்து உள்ளார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருகோவிலுக்கு நீங்களூம் ஒரு முறை வாருங்கள், அவன் அருள் பெறுங்கள்.