Wednesday, December 8, 2010

சபரி மலை யாத்திரை














சாமியே சரணம் அய்யப்பா !!!
நாளை இரவு (புதன்) மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து கரூர் சென்று, வியாழன் காலை எனது ஊர் தாராபுரம் சென்று, தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடி கட்டிக் கொண்டு மலைக்கு யாத்திரை கிளம்புகின்றேன். வியாழன் இரவு எரிமேலியில் பேட்டை துள்ளி, வாவர் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு,


















பின்னர் வெள்ளி அதிகாலை நாலு மணியளவில் பம்பா சென்று சக்தி பூஜை முடித்து ஆறு மணியளவில் சபரி மலை ஏறும் திட்டம் உள்ளது.











சென்ற முறை நான் நாலு மணி நேர கியூ இருந்தது, இந்த முறை எப்படி என்று தெரியவில்லை, எத்தனை மணி நேரம் நின்றாலும் பரவாயில்லை, அய்யனின் தரிசனம் நல்ல முறையில் கிடைத்தால் போதும். மலை இறங்கி திருவனந்தபுரம், சுசீந்திரம், கன்யாகுமரி,திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் சென்று மதுரை வழியாக தாராபுரம் திரும்பும் எண்ணம் உள்ளது. எத்தனை மணி நேர கியூ மற்றும் செல்லும் இடங்களில் மழை, பாதை எப்படி உள்ளது என்று அறிந்த பின்னர் தான் மேற்க்கொண்டு பயணம் செல்ல வேண்டும். குருசாமி, முதலில் அய்யனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கி பின்னர் செல்லும் இடங்களைப் பற்றி பேசிக்கொள்வேம் என்று சொல்லிவிட்டார்.

நாளை இரவு கிளம்புவதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது, நான், என் இரண்டாவது அண்ணா மற்றும் மூன்றாவது அண்ணா, ஆக என் வீட்டில் மூவர் செல்லுகின்றேம்.வழக்கம் போல என் நண்பனும் அவனது அண்ணாக்கள் நால்வர்,உறவினர்கள் என வருடா வருடம் செல்லும் பதினைந்து பேர் செல்ல இருக்கின்றேம்.
நல்ல படியாக தரிசனம் கிடைத்து, எங்களின் யாத்திரை நல்ல படியாக முடிய அந்த கன்னிமூல கணபதியை வேண்டிக் கொள்கின்றேன்.

யாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.

சாமியே சரணம் அய்யப்பா!!!

Saturday, December 4, 2010

2010தின் சூப்பர் டூப்பர் காமெடி
















என்ன பதிவு போடலாம், நில்லுங்க கொஞ்சம் சைட் டிஷ் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் எடுத்து வைச்சுக்கிறேன்.நமக்கு எல்லாம் பதிவுக்குக் கூட சைட் டிஷ் வேணும்.

கொறுக் கொறுக்,

என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம துளசி டீச்சர் போட்ட கோயில் பதிவுகளில், எந்த கோயில் பிராசதம் நல்லா இருக்கும்முன்னு சொல்லாம மறைச்சுட்டாங்களே அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்

போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

ஜிலேப்பி மாதிரி வளைச்சு வளைச்சு எழுதுனா கவிதைன்னு ஹேமுவும், தமிழும், தொழில் இரகசியம் சொல்லிக் கொடுத்தாங்களே, அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

வட கொரியா போட்ட குண்டு எல்லாம் எடுத்து, பழைய இரும்புக் கடையில நம்ம சிங்க குட்டி அய்யா போட்டுப், பொட்டுக் கடலை வாங்குனத சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

வர்ற சக்கரைப் பொங்கலுக்கு சக்கரையே போடாம சக்கரைப் பொங்கல் பண்ணாலாமுன்னு சுசி எடுத்த இரகசிய சபதத்தைப் போட்டு உடைக்கலாமா?

கொறுக் கொறுக்,

என்னடா பித்தன் மாலை போட்டுட்டு ஆன்மீகப் பதிவே போடலைன்னு யோசிக்கறவுங்களுக்கு, நம்ம சாமிகிட்ட டூ விட்ட விசயத்தை சொல்லலாமா?.

கொறுக் கொறுக்,

இல்லைன்னா, நம்ம பட்டாபட்டி முதல்வர் எத்தனை பொறம்போக்கு இடத்தை பட்டா போட்டாருன்னு, ஸ்பெக்ட்ரம் கணக்கா ஒரு பதிவு போடலாமா?

கொறுக் கொறுக்

அதும் இல்லைன்னா, நம்ம மங்குனி அமைச்சர், எந்த நாட்டு அமைச்சர்ன்னு கேட்டு ஒரு பொது அறிவுப் போட்டி வைக்கலாமா?.

கொறுக் கொறுக்

இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

இது எல்லாம் வேண்டாம் நம்ம மண்டையில ஏற்கனவே முடி இல்லை, எல்லாரும் சேர்ந்து க்டுப்புல நம்ம மண்டைய ஆளாளுக்கு புடிச்சாங்கனா, அப்புறம் இருக்குற நாலு முடி கூட மிஞ்சாது, பேசாம, தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.

கொறுக் கொறுக்,

அடச்சே இங்க தமிழ் நாட்டுல ஒருத்தர் சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி, அதை வீட மிக சிறப்பான காமெடி இனிமேல வர முடியாது,
அய்யே பாவம், நம்ம கவுண்ட மணி, செந்தில்,விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் கூட இதை வீட எப்படிடா காமெடி போட முடியும் யோசிக்கிறாங்க.அவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்காம வீட்டுக்குள்ள முடங்கிப் போய்ட்டாங்க.

கயிர முத்து அப்படியே ஷாக் ஆகி, இதைப் பாராட்டி என்ன கவிதை எழுதுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்.

கொறுக் கொறுக்,

கஜினி வேற, இருக்குற கன்பியூஸ் பத்தாதுன்னு இன்னம் கன்பியூஸ் ஆகிட்டார், இதுக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தா என்ன சொல்லாம்முன்னு மண்டைய பிச்சுக்கிட்டார், பேசாம இமய மலையில வாங்குன ஊசி,பாசிதான் நம்ம சொத்துன்னு சொல்லற முடிவுல இருக்கார்.

கிமலுக்கு அந்த பிரச்சனையே கிடையாது, எப்படியும் அவரு பேசறது யாருக்கும் புரியாது.(அவரையும் சேர்த்து).

கீரமணி வேற இதைப் பாராட்டி அறிக்கை விட ஜால்ரா கிடைக்காம கஷ்டப்படாறார்.

இப்படி ஒரே அறிக்கையில எல்லாரையும் இவரு தூக்கி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம காமெடி எல்லாம் எடுபடாது.

கொறுக் கொறுக்,

அப்புறம் என்ன பதிவு போடலாம், பேசமா நமக்கு புடிச்ச " தொடரும்" அப்படின்னு போட்டு இதைத் தொடர் பதிவா போட்டுரலாமா?

பதிவு போடாம விட்டா, சாருஸ்ரீ, ஜனனி பர்த்டேக்கு ஸ்விட் தராம விட்ட மாதிரி நம்மளும் பதிவு போடாம விட்டுர மாதிரி ஆயிடும்

கொறுக் கொறு

அச்சேச்சே சிப்ஸ் தீர்ந்து போச்சுங்க சரி அடுத்த வாரம் வேற சிப்ஸ் வாங்கி வைச்சுப் பதிவு போடலாம்.

டிப்ஸ்: ரொம்ப நாள் ஆச்சுன்னு, சும்மா ஒரு ரவுண்ட் எல்லார் பெயரும் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் காஞ்சி முரளி அய்யா வேற இன்னமும் நிறையா பேரை சொல்லலைன்னு கோவிச்சுப்பார், அதுனால மீதி இருக்குறவங்க அப்புறமா ஒரு பதிவில,

வணக்கம் இது எல்லாம் சும்மா தமாசா எடுத்துக்குங்க, சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல,

என்னது சின்னப்புள்ளத்தனமா? பேச்சு பேச்சா இருக்கனும், இப்படி உருட்டுக் கட்டை எல்லாம் எடுக்கக் கூடாது, வரட்டா!!!!!!.