
நான் எட்டாவது படிக்கும் சமயம் எனது நண்பன் பிரபாகரனின் வீட்டில் பொழுதைப் போக்குவேன், கலந்து படித்தல் மற்றும் விளையாடுதல் ஆகியன இருக்கும். அவனின் அம்மா எங்கள் இருவரையும் நல்லாக் கவனித்துக் கொள்வார்கள். நாலு குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் கூட்டுக் காலனி அது. பிரபாகரன் அம்மா, ஜெயா அக்கா,வசுமதி அம்மா மற்றும் யசோதா அம்மா (ஜெயாக்காவின் அம்மா) ஆகியோர் அமர்ந்து ஒன்றாகக் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள். தொலைக்காட்சிகள் வராத சமயம் அது. கூடிப் பேசுதல் மட்டும்தான் அவர்களின் பொழுது போக்கு. இப்படிப் பேசும் போது சில சமயம் நான் மாட்டிக் கொள்வேன். அப்போது ஜெயா அக்காவிற்க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுருந்தார்கள். அது பற்றியும் பேசுவார்கள்.
பிரபாகரன் அம்மா : சுதா நீ யாரைடா கல்யாணம் பண்ணிக்குவ?
நான் : நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.
வசுமதி அம்மா: ஏண்டா யாரையும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா, யார் உனக்கு சோறு ஆக்கிப் போடுவா?
நான் : எங்கம்மா சாப்பாடு போடுவாங்க.
யசோதா அம்மா : அவங்க எத்தனை நாளுக்குத்தான் போடுவாங்க, நாளைக்கு நீ யாரையாது கல்யாணம் பண்ணித்தானா ஆகனும்.
நான்: அது அப்ப பார்ப்போம், நான் எங்க அக்கா பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன். ஆனா அவளுக்கு சமைக்கத் தெரியாது.
பிரபாகரன் அம்மா: அது சரி, அய்யா ரெடியாத்தான் இருக்காரு.
ஜெயாக்கா : டேய் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நான் நல்லா சமைப்பேன்.
நான்: ஹிகும் மாட்டேன். நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்
வ அம்மா : ஏண்டா அக்காவை உனக்கு பிடிக்காதா.
நான் : ரொம்ப பிடிக்கும், ஆனா அவங்க பெரியவங்க.
ஜெயாக்கா : டேய் பரவாயில்லைடா,
பி அம்மா: பாருடா அவளே சொல்லிட்டா, பேசாம கல்யாணம் பண்ணிக்கடா?
ய அம்மா : ஆமாண்டா எனக்கும் மாப்பிள்ளை பார்க்கின்ற வேலை மிச்சம்.
நான் : சரி நான் வேலைக்கு போய்ட்டு, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்குறேன்.
வ அம்மா: டேய் அதுக்குள்ள அவளுக்கு வயசு ஆகிவிடும்.
நான் : பரவாயில்லை, இப்பக் கல்யாணம் பண்ணினா அப்புறம் மளிகை சாமான் வாங்க முடியாது.
பி அம்மா: டேய் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற.
நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.
வ அம்மா: அப்புறம்,
நான் : நான் சம்பாதித்துக் கொடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.
ஜெயாக்கா : டேய், புடவை துணி மணி எல்லாம் வாங்கித் தரமாட்டாயா?
நான் : ஓ நிறைய வாங்கித் தருவேன்,
பி அம்மா: அப்புறம் என்ன ஜெயா, பிரச்சனை இல்லை. (அக்காவின் முகத்தில் வெட்கம்).
ய அம்மா : டேய் என் பொண்ணைக் கட்டனும்னா நிறைய சீர் எல்லாம் செய்யனும்.
நான் : ஓ நான் நிறைய சம்பாதித்து செய்யறன்.
வ அம்மா: ஒன்னும் பிரச்சனை இல்லை, டேய் கல்யாணம் பண்ணினா மத்த வேலை எல்லாம் செய்யனுமே.
நான் : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, எங்க வீட்டுல மாதிரி, வேலைக்காரி வச்சுக்கலாம்.
பி அம்மா : ஜெயா, பையன் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கான்.
ஜெயாக்கா : போங்க அக்கா, நீங்க ஒன்னு.
ய அம்மா: டேய் என் பொண்ணை கண்ணு கலங்காம காப்பாத்துவாயா?
நான் : இம்ம் சூப்பரா வச்சுக்குவேன்.
பி அம்மா : ஆகா இப்பவே ரெடியா இருக்கான். ஆமாண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டா இராத்திரி எல்லாம் இவகூடத்தான் இருக்கனும் தெரியுமில்லை.
ஜெயாக்கா : அக்கா! பிளிஸ், என்னது விவஸ்த்தை இல்லாமல்.
நான் : அது எல்லாம் முடியாது, நான் எங்க அம்மா பக்க்தில் தான் தூங்குவேன்.
வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் இருக்கனும். இப்ப நாங்க எல்லாரும் அம்மா கூடவா இருக்கின்றேம்.
நான் : அது எல்லாம் தெரியாது, நான் அம்மாவின் பக்கத்தில் தான் இருப்பேன்.
பி அம்மா : போச்சுடா, அப்படி எல்லாம் கூடாது, நீ அக்கா கூடத்தான் இருக்கனும், அப்புறம் மத்த வேலை எல்லாம் யாரு பார்ப்பாங்க.
நான் : அப்புறம் என்ன?. சாப்பிட்டாத் தூங்க வேண்டியதுதான, அவங்க, அவங்க அம்மாகிட்ட தூங்கட்டும், நான் என் அம்மாவிடம் தூங்குவேன்.
வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் தூங்கனும்.
நான் : சரி அப்படின்னா, நான் எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்து தூங்கறேன்.
வ அம்மா : அப்புறம் என்ன ஜெயா! நல்ல நாளு பார்க்க வேண்டியதுதான்.
ஜெயா அக்கா : சீய் சும்மா இருங்க அக்கா, சின்னப் பையன் சொல்றான்னு.
நான் : பராவயில்லை அக்கா, நான் எங்க வீட்டுல சொல்லிட்டு வரறன்.
வ அம்மா,பி அம்மா : சிரிப்புடன், அப்புறம் என்ன ஜெயா பையன் ரெடி.
ய அக்கா : சும்மா இருங்கடி, அவன் வீட்டுல போயி எதாது உளறி வைக்கப் போறான்.
லஷ்மியக்கா (எங்க அம்மா பெயர்) பெத்த பசங்க ஒன்னு ஒன்னு தங்கம். நல்ல பசங்க.
பி அம்மா : சரி சுதா, முதல்ல நீ போய்ப் படி, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்.
நான் : சரிங்கம்மா. நான் போயிட்டு வறேன்.
ஜெயாக்கா : டேய், என்னை மட்டும் மறந்துடாதடா .
நான் : இல்லையக்கா, மறக்க மாட்டேன். நான் படிச்சு வேலைக்குப் போயிட்டு வந்து , உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.
வ அம்மா : என்னது இது, சும்மா சொன்னா, நிஜமாகவே பண்ணிடுவாங்க போல இருக்கே . ரெடியா இருக்காங்க.
ய அம்மா : சும்மா இருங்கப்பா, சுதாக்குட்டி தங்கமான பையன், விட்டாக் கெடுத்துருவீங்க போல.
(பெண்கள் அனைவரும் சிரிக்க, நான் ஒன்னும் புரியாமல் வெட்கத்துடன் ஓடுகின்றேன். )
வ அம்மா : பாருங்கப்பா பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னதும் வெட்கம் வந்துருச்சு. என்று கூறி மீண்டும் சிரிக்கின்றார்கள்.
நான் சுறுப்சுறுப்பாக ஓடி அம்மாவிடம் சொல்கின்றேன். அம்மா என் தலையை வருடி, ஆமா இவங்களுக்குப் பொழுது போகலைன்னா என் பையன் தான் கிடைத்தானா என்று சிரிக்கின்றார். இப்படிக் கூடிக் கும்மி அடித்தது ஏராளாம். இப்படிச் சாம்பிளைக் கூறி தொடரை முடிக்கின்றேன். அதுக்காக கும்மி எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அப்ப அப்ப நகைச் சுவை பதிவுகளில் எழுதுகின்றேன்.
என்னை மட்டும் இப்படி மாட்டி விட்டா எப்பூடீயீயீயீயி ?. ஆதுனால நான் இந்த தொடரைத் தொடருவதுக்கு அழைப்பது
பெண் பதிவர்களில்
சுசி தங்கை, ஜெலில்லா அக்கா, சாருஸ்ரீராஜ், சித்ரா தங்கை மற்றும் கவிதாயினி ஹேமு.
ஆண் பதிவர்களில்
மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.
நான் அழைத்த பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே இத்தொடரைப் போட்டுருந்தால், அதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு, விட்டு விடுங்கள், இதுவரை போடவில்லை என்றால் பதிவு இடுங்கள் நன்றி. இனித் தொடராது.
டிஸ்கி : நாளைக்கி இதை வீட சூப்ப்பாரா ஒரு பதிவு போடப் போறேன். அதை நீங்க எல்லாரும் படிச்சித்தான் ஆகனும். இல்லைன்னா என் சாபம் உங்களுக்குக் கிடைக்கும். அது என்னன்னா
காலையில் ஆறு மணிக்கு உங்களுக்கு வயிறு பிசையும்,
எட்டு மணிக்கு பசி எடுக்கும்,
மதியம் பன்னிரேண்டுக்கு வயிறு கப கபன்னு பசி எடுக்கும்,
இராத்திரி தூங்குனத்துக்கு அப்புறம் கண்ணுத் தெரியாது.
கனவுல திரிஷா, ஸ்ரேயா எல்லாம் வருவாங்க, பெண் பதிவர்களுக்கு விஜய்,அஜித்,சல்மான் சாருக் எல்லாம் வருவாங்க.
அதுனால ஒழுங்கா அடுத்த பதிவைப் படிச்சுருங்க. நன்றி.














