Tuesday, September 15, 2009

இந்திய வரலாறு ஒர் சிந்தனை - பாகம் 6

பாகம் ஜந்தில் நான் கூறிய அனைத்தும் ஆரீயர் சமூதாய பழக்கவழக்கள். நாம் அந்த காலகட்டத்தில் குமரிக்கண்டம், தட்சினபாரதம் எனப்படும் தென்பகுதியினை பார்ப்போம். எனக்கு ஆந்திரா,கர்னாடக வராலாறு (மிகவும் பழைய) தெரியாதலால் பழ்ந்தமிழ்ர் நாகரீகம் மட்டும் பார்ப்போம்.
தமிழர் நாகரீகம் மிகவும் கட்டமைப்புடன் விவசாயம், வாணிபம், மற்றும் கோட்டை கொத்தளங்களுடன் இருந்தது. இங்கும் பொண்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டு இருந்தது.
கபாடபுரம் என்னும் கொற்கை, புகார், மதுரை,வஞ்சி, உறையூர் போன்ற நகரங்கள் இருந்தன. சொல்லப்போனால் ஆரியர்களுக்கும் முன்னதாக நகரங்களை உருவாக்கியது தமிழர்கள் தான் என்பது எனது கருத்து. பழந்தமிழரில் மகளிர் கல்வி கற்கவும் கவீ இயற்றவும் முடிந்தது. முறையான கட்டுப்பாடுடன் கூடிய சமுதாயம் இருந்தது, ஆனாலும் கள்ளுண்டலும்,பரத்தையரும் இருந்தனர். இவைகளைப் பயன்படுத்தும் ஆடவர்கள் சமூகத்தில் தரம் குறைந்தவர்களாகக் பார்க்கப்பட்டனர். நமது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தமிழ்ழகத்தில் ஜாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்தது போலவும், ஆரியர்கள் வந்துதான் வருனாசிரம தர்மம் மூலம் அடிமைப்பட்டனர் போலவும் திரித்துகூறினார்கள், ஆனால் ஆரியர்கள் வருவதற்கு முன்போ இங்கும் ஜாதிய அமைப்பு அவர்களின் தொழில் வழி அமைந்து இருந்தது, கோவில் அல்லது இறையிலியிடங்கள் அல்லது இறைக்கோட்டங்கள் பராமரிப்போர் குருக்கள் அல்லது ஓதுவார்கள் எனவும். வேளாங்குடியினர்,கள்ளர்,மறவர்,தொவர்,இளந்திரையர்கள் மற்றும் உடையார் ஆகியோர் மறக்குடியினராகவும், வியாபாரம் மற்றும் முத்து மணிகள் வாணிகம் செய்தவர்கள் வாணிபச்செட்டியார்கள்(தமிழ்) எனவும், தச்சுஆசாரி,பொற்கொல்லர்,கணக்கன்,மணியம், குயவர்,காரனீகர் மற்றும் பாணர்(யாழ் பாட்டு பாடுவர்கள்)ஒரு பிரிவும் செருப்பு தைப்போர், பறை அடிப்போர், வேடுவர்,மீனவர்(செம்படவர்கள்,வலைஞர்கள்)கள் மற்றும் முடிதிருத்துவேர் ஆவர். இதுவும் தொழில்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகாளாக இருந்து பின் ஜாதியாக மாறி பின்னர் பிரிவுகளாக மாறியது. ஜாதீ என்பது ஆரியர்கள் வருமுன்னர் இருந்த ஒன்றுதான். இங்கு தொழில்கள் வாரிசு அடிப்படையில் வந்தாலும் கல்வி முதல் மூன்று வகை பிரிவுக்கும் பொதுவாக இருந்தது. இவை சங்க இலக்கியங்கள் மற்றும் கதை நூல்கள் மூலம் அறியலாம். இங்கும் கடைனிலை தொழில் புரிவேர்க்கு உரிமைகள் மறுக்கப்பட்டது.இந்த அமைப்புகளை ஆரியர்கள் பின்னாள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதுதான் உண்மை, ஆனால் ஜாதியம் என்பது ஆரியர்களிடம் இல்லை பிரிவுகள் தான் இருந்தது. இதுவும் இரு நாகரீகங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமை எனலாம். இதுவரை தொழிலின் பொயரால் பிரிந்து இருந்தாலும் மக்களிடம் எந்த பாகுபாடும் இல்லை எனக்கூறலாம், ஏன் என்றால் அப்போது பணம் என்பது கண்டுபிடிக்கப்படாமல் பண்டமாற்று முறை மற்றும் பொருள் கூலீ முறைதான் இருந்தது.
சமூகத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்துவந்தனர். எனவே பாகுபாடு குறைவாக இருந்தது. மற்றும் மக்கள் அனைவரும் இறை நம்பிக்கை மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்கள் ஆக இருந்தனர். என்னைப் பொறுத்தவரையில் பழந்தமிழரின் நாகரீகம் மற்ற திராவிட, ஆரிய மற்றும் சுமெரிய நாகரிங்களை காட்டிலும் முன்னெறீருந்தது(கலை,இலக்கியம் மற்றும் பண்பாடு).
தமிழர் நாகரிகமும் எகிப்து நாகரீகமும் ஒன்றை ஒன்றை போட்டியிடுவதாகவும் சம அளவில் இருந்தாக உணர்கின்றேன்.

2 comments:

  1. ஜாதி என்ற சொல்லே வடமொழிச்சொல்!
    பின் எப்படி ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழகத்தில் ஜாதி இருந்ததென்று சொல்கிறீர்கள்!
    ஆரியர்களுக்கு வக்காளத்து வாங்கவா?

    ReplyDelete
  2. உங்களது பதிவில் சரியான சான்றுகள் இல்லாமல், உணருகிறேன், கருதுகிறேன் போன்ற வார்த்தைகள் தான் காட்டுகிறது! தவறான தகவல்கள் வரலாற்றுக்கு இழுக்கு!

    அதுக்கு சும்மாவே இருக்கலாம்!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.