Wednesday, September 16, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 7

பணம் என்னடா பணம், பணம் என்று நான் தனியாக ஒரு பதிவு போட காரணம் என்ன என்றால்
இதுவரை ஒழுங்காக கட்டுப்பாட்டுடன் ஒருவரை சார்ந்து ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்ந்த நாகரீக காலம் முடிந்து ஒருவருக்கு ஒருவர் ஏமாற்றி, அடிமைப்படுத்தி, வென்று வாழத்தழைப்பட்டனர். ஏன் தெரியமா வேதகாலத்தின் பின்பகுதியில்தான் பண்டமாற்று முறைக்கு பதிலாக பணம் அல்லது தங்க நாணயம் முறை வந்ததது. தங்கம் மற்றும் செல்வம் மனிதன் மனதை ஆக்கரமித்த பின் அவன் முற்பட்ட நாகரீக பழ்க்கவழக்கள் முழுதும் மாறின. மனித இன அழிவும் இங்குதான் ஆரம்பிக்கின்றது. இந்த வேதகால பின்பகுதியினை வர்ணிக்குமுன் நான் ஒன்றை கூற விரும்புகின்றென். ஒரு சமுகம் நன்றாக வளரவேண்டும் என்றால் அந்த சமுகத்தில் உள்ள பொரியோர்கள் அதனை நல்லமுறையில் வழி நடத்தி செல்லவேண்டும். வழிகாட்டுதல் நன்றாக இருந்தால்தான் அந்த பயணமும் நன்றாக இருக்கும். முதலில் சொன்னமாதிரி
பிரம்மத்தை உனர்ந்த அந்தனர் முதலிலும் பின் அவரையும் அனைத்து குடிகளை காக்கும் சத்த்ரியரையும் பின் அனைவருக்கும் தெவைகளை பூர்த்தி செய்யும் சூத்திரர்களும் பஞ்சமர்களும் இருந்தார்கள், இவர்கள் அனைவரும் தாம் ஒருவர் ஒருவர் சார்ந்து பண்டமாற்று அல்லது உணவு அல்லது உடை கூலியாக பொற்று வாழ்க்கை நடத்தினர். இவர்களிடம் பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒற்றுமை இருந்தது. ஆனால் பணம் அல்லது செல்வம் வந்த பிறகு அந்தனர்களும் சத்திரியர்களும் தங்களை முன் நிலைப்படுத்திக் கொண்டனர். மற்ற சமூகங்கள் இவர்கள் சார்ந்து இருக்கத் தலைப்பட்டனர். இதில் அந்தனர் சூழ்ச்சி அதிகம் இருந்தது. யாகங்கள் தவங்கள் ஆகியன மக்களின் நன்மைக்காக இருந்தமைப் போய், செல்வம், வெற்றி ஆகிய பயன் கருதிசெய்யப்பட்டன.
என்னைப் பொறுத்த வரையில் உன்மையான அந்தனர்கள் வேதகால பின்பகுதியில் அழிந்துவிட்டனர். இதற்கு பின் வந்தவர்கள் எல்லாம் பரம்பரை தான் தவிர பழக்கத்தால் அல்ல.
கட்டுரைக்கு போவேம்.
வேதகாலம் பின்பகுதியில் நிறைய உபனிசத்துகள், சூத்திரங்கள் எளுதப்பட்டனர். அதனில் அந்தனர்கள் முன் நிலைப்படுத்தப்பட்டனர், பின் சத்திரியர்கள் முன் நிலைப்படுத்தி அந்தனர்கள் பிழைத்துக்கொண்டார்கள். வேதகாலப் பின்பகுதியில் கூட ஒரு அளவுக்கு அந்தனர்கள் ஒழுக்கம் காத்தனர், ஆனால் மன்னர்கள் காலத்தில் அது மறைய தொடங்கியது.
இதை பற்றி பார்ப்போம். மனிதன் கொஞ்சமாக இருந்த பொழது அவன் தெவைகள் குறைவாக இருந்தது.( சப்பளை அதிகம், பயன்பாடு குறைவு). ஆதாலால் ஒரு நிறைவு இருந்தது. அனால் மக்கள்தெகை வளர வளர அவன் தெவைகளும் அதிகரித்தது. ஆக ஒருவரை ஒருவர் ஏமாற்றவும் ஏய்க்கவும் தலைப் பட்டனர். இதை இன்னம் கொஞ்சம் மாற்றிப்பார்த்தால் மனிதன் தென்றி பின் காடுகள் மலைகள் வேட்டையாடி வசித்துவந்தான் இது கொஞ்சம் காட்டுமிராண்டிகளின் காலம் கூட, பின் விவசாயம் புரிய ஆரம்பித்தவுடன் நதிக்கரையிலும் சமவெளிகளிலும் வீடுகளை கட்டி குடும்பம் நடத்தினான், பின் அந்த குடும்ப கூட்டங்களுக்கு தலைவர்கள் வந்தார்கள். பின் இயற்கை மற்றும் இடர்களிடம் இருந்து தங்களை காக்க கோட்டை மற்றும் கொத்தளங்கள் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். பின் தங்கள் காக்க மன்னர்கள் வந்தார்கள், வழி நடத்த அந்தனர்கள் வந்தார்கள். வந்தவரை எல்லாம் சரியாக போய்க்கொண்டுதான் இருந்தது, ஆனால் செல்வாக்கு போராட்டத்தில் சத்திரியர்கள் முன் நிலைப்படுத்தி அந்தனர்கள் மற்ற அனைவரையும் தங்களின் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்தனர். இதில் இருந்துதான் சமுகம் தடுமாறத் தொடங்கியது எனலாம். முதலில் உபனிசத்தில் அந்தனர்கள் முன் நிலைப்படுத்தி சமுகம் அமைக்கப்பட்டது, பின் சத்திரியர்கள் அந்தனர்கள் வழியில் ஆட்சி செய்யும் முறை வந்தது. இது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.