Thursday, September 17, 2009

அண்ணா நீங்க நல்லவரா? கொட்டவரா?

அண்ணாவின் பிறந்த தினமா அல்லது இறந்த தினமா, தெரியவில்லை, அனால் பகுத்தறிவு இன மான திலகங்கள் எதாது கொண்டடுனா இந்த இரண்டுல ஒன்னாதான் இருக்கனும். பண்டிகை கொண்டாடுனா அது மூட நம்பிக்கை,இந்த ரெண்டுல ஒன்னு கொண்டாடுனா அது பகுத்தறிவு (என்ன இழவோ). இது பத்தாதுனு நம்ம திராவிட பகுத்தறிவு பதிவர்கள் வேற அண்ணா ஆண்ணானு பதிவு போடறாங்க, நம்மளும் போடலைனா நம்மளை பதிவர்னு ஒத்துக்க மாட்டங்க அப்பிடினு நானும் ஒரு பதிவு போடறங்க(ஆணி புடுங்கறத்து இது ஒகே). நீங்களும் ஆணி புடுங்காம இத படிச்சு ஒரு ஆட்டோ அனுப்புங்க.

அது என்னனு தெரியல அண்ணாவைப் பத்தி எளுத எனக்கு ஒன்னும் தெரியலை. அப்புறம் என்ன எளுதுவது என்று எனக்கு புரியாமல் அண்ணா ஸ்டைல பேனாவை தாவகொட்டாயில வச்சுட்டு யொசனை பன்னா திடீர் ஒரு சத்தம் கேட்டுது என்னனு பார்த்த ஒரு அம்மா தன் குழந்தைக்கு ஸோறு ஊட்டிவிட்டு இருந்தாங்க, அப்ப குழந்தை அம்மா அண்ணா என்பவர் யாருனு கேட்டா?
அதுக்கு அந்த அம்மா " பாப்பா அந்தக் காலத்தில் அண்ணா அண்ணானு ஒரு கெட்டவர் இருந்தார், அவர் ரொம்ப கொலைகாரர், கொள்ளையடிப்பவர்னு சொல்லிக்கொடுத்தார். எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு, தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தென். அந்த அம்மா மேல சொல்ல ஆரம்பித்தார்கள்.
" ஒரு நாளு அவருக்கு திடீர்னு தான் இறந்து போய்டுவம்னு தெனுச்சு அப்ப அவர் தன்னுடைய
கொள்ளைகூட்டத்தை பார்த்து நான் இறந்த நாளைக்கு நீங்க என்ன பண்ணனுனா நம்ம ஜயில்ல இருக்கற கொள்ளைக்காரனுக மற்றும் கொலைகாரனுக கொஞ்ச பேரை என் நினைவா விடுதலை செய்யனுன் கேட்டார். அதனால இன்னமும் நம்ம அரசாங்கம் அவர் பிறந்த நாள் அல்லது இறந்த நாளுக்கு கைதிகளை விடுதலை செய்யறாங்க. அப்பிடினு சொல்லிமுடித்தார். திடுக்கிட்ட நான் முழித்து பார்த்தப்தான் தெரிஞ்சுது நான் கண்டது கனவுனு. என்னாடா இப்படி ஏடாகூடமா கனவு வருது யோசிக்க ஆரம்பித்தென். அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது. நியாம நம்ம தீபாவளிக்கு ஒரு நரகாசுரன் கதை சொல்லி ஒரு நாள் கொண்டாடுவேம். அப்புறம் சுதந்தர தினம்,குடியரசு தினம்னா முட்டாய் கொடுத்து கொடி குடுத்து கொண்டடாடுவேம். அதுமாதிரி ஒரு தினத்தில் இது மாதிரி கைதிகளை விடுதலை செய்து கொண்ட்டாடுனா அப்ப அவங்கள பத்தி எதிர்காலத்தில் இது மாதிரி ஒரு கதை வர வாய்ப்பு உண்டு இல்லையா? அதானால இந்த கைதிகளை விடுதலை செய்யும் பழக்கம் தெவையா? கொஞ்சம் சிந்தீப்பீர். அதுக்குத்தான் இந்த பதிவு.
அப்புறம் ஒரு விசயமுங்க அது என்னமே தெரியலை இந்த ஆளுங்கட்சி ஆளுகளுக்கு அண்ணா மேல என்னமே கோவங்க அதனால அவரை எப்படி எல்லாம் அசிங்கப்படுத்துகிறர்கள் பாருங்க,
மெதல அண்ணா பிறந்த நாளுக்கு திருட்டு குற்றம் மற்றும் சிவில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தார்கள், மக்களுக்கு சரி அவங்களுக்கும் அண்ணாவுக்கு எதோ சம்பந்தம் இருக்கும் போல நினத்து போசம இருந்துட்டாங்க. அப்புறம் பாருங்க அண்ணாவுக்கு இந்த அசிங்கம் பத்தாதுனு கொலை, கொள்ளை அடிக்கிற ஆயுள் தண்டணை கைதிகளை விடுதலை செய்தார்கள்.
இப்ப மறுபடியும் அவரை அசிங்கப் படுத்துனும் நேக்கத்தில் வெடிகுண்டு கைதிகளை விடுதலை செய்து இருக்கிறார்கள். ஒருவேளை அண்ணாவுக்கு இவங்களை எல்லாம் புடிக்கும் போல இருக்கு,
நமக்கு என்ன தெரியும் பகுத்தறிவு திலகங்கள் சொன்னா சரி.
எதோ கொஞ்சம் அப்ப அப்ப பூசல் இருந்தாலும் கோவை, ஈரொடு எல்லாம் அமைதியாய் இருந்துங்க, பழனிபாபா தலைமையில ஒரு கும்பல் வன்முறை ஏவிவிட அவங்க பண்ணுன கூத்துதான் கோவை வெடிகுண்டு சம்வங்கள் அதுக்கு அப்புறம் கரும்புக்கடை, குனியமுத்தூர்,செல்வபுரம் எல்லாம் இன்னும் பிரச்சனை தாங்க. அப்படி குண்டு வச்சவங்களை தான் இப்ப அடுத்த எலக்சன்ல சிறுபான்மை ஓட்டுக்காக் விடுதலை பண்ணி இருக்காக, இல்லைன இவங்கல அண்ணாக்கு புடிக்கும் போல, எதுவும் நம்ம மரமண்டைக்கு உறைக்குலைங்க. உங்களுக்கு எதாது புரிஞ்ச சரி. அடுத்த அண்ணா பிறந்த நாளுக்கு இவங்களுக்கு மத்தியில செல்வாக்கு இருந்தா அஜ்மல் காஸப்பும், பார்லியமெண்ட் தாக்குதல் புகழ் வீரப்புதல்வன் அக்பரும் விடுதலை செய்வாங்கனு எதிர்பாக்கலாம். இது எல்லாம் நமக்கு எங்க புரியும், நம்ம எதோ நாய்களும் நரிகளும் ஆட்சி செய்தால் போய்களும் சொல்லுமாம் சாஸ்த்திரம்னு பஞ்சாங்கம் படிக்கற ஆளு. இது மாதிரி உன்மையை சொன்னா நம்மளை தமிழின துரொகி, பார்ப்பன ஆளு அப்பிடினு சொல்வாங்க, அதுனால நானும் இந்த பதிவ போடுல நீங்களும் இந்த பதிவை படிக்கலைனு நினைத்து மறக்காம பின்னூட்டம் போட்டு திட்டி விட்டு மறந்துட்டு பொழப்பை பாக்க போங்க.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.