Monday, August 17, 2009

பிரார்த்தனை செய்வோம்

மனது வலிக்கின்றது, இன்னொரு உயிர் துடிக்கும் போது எல்லாம் அதூவும் துடிக்கின்றது.

வாடும் பயிர் வாடும் போது எல்லாம் வாடினேன், வாடி படும்துயர் அடைந்தென் என வள்ளளாரின் கூற்று போல

ஒரு சக பதிவர் இதய வலியில் வேதனை படுவதை நினைக்கும் போது மனம் வாடுகின்றது,

உடனடியாக பொருள் அல்லது உதவி ஏதும் செய்ய இயலவில்லை எனும் போது வெக்கம் வருகிறது.

ஆனாலும் என்னிடம் இருப்பது பிரார்த்தனை ஒன்றுதான்.

நான் வணங்கும் தெய்வங்கள் அவர் காக்க அருள் புரியட்டும். அந்த ஜந்து மலைக்கு அதிபதி எனது அய்யப்பன் காப்பான் என நம்பிக்கை வைக்கிறேன்.

கடவுளை நம்பினொர் கை விடப்பாடார் என்பது பைபிள்.

தட்டுங்கள் திறக்கும் கேளுங்கள் கிடைக்கும் என்பது குரான்.

நாமும் நம்புவோம் நமது பதிவர் நலமுடம் திரும்பி வந்து நம்முடன் இணைவார்.

பலரும் கூடி செய்யும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு நிறைய பலங்கள் உள்ளதாக தத்துவங்கள் கூறுகிறது.

எனவே நாம் அனைவரும் பிரார்த்திப்போம் அவர் குணமடைய,

நமக்கு மீண்டும் அல்வா கொடுத்து மகிழ்ச்சியில் அழ்த்துவார் என நம்பிக்கையுடன்..............

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.