Friday, August 14, 2009

எனது இரத்தம்

ஈழத்தில் நடக்கும் போராட்டங்கள் எனக்கு சிறூவயது நினவுகளை தூண்டுகிறது.

நான் +2 படித்து கொண்டு இருந்த சமயம் ஈழத்தில் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டு இருந்தது,

அச்சமயம் ஜீனியர் விகடனில் இப்பொது வரும் ஈழப்போராட்ட கட்டுரை வெளீவந்து கொண்டு இருந்தது.

அதில் குட்டிமணி, தங்கதுரை, ஜகன் அகியோரின் போராட்டம் மற்றும் தூக்கு தண்டனையும் என்னை விடுதலை புலிகள் ஆதரவு ஆளக மாற்றியது. நான் என் பாட புத்தகங்களீல் கிட்டு, பிரபாகரன் படங்களை ஒட்டி வைத்து இருப்பேன்.

எனது அக்கா அவர்கள் அசிரியராக பணி புரியும் பள்ளியில் தேசிய மாணவர் படையின் அதிகரியாக உள்ளார்,

ஏனவே அவர் பள்ளியின் அனிவகுப்பு நடக்கும் போது எல்லாம் நானும் போவேன், ஆதலால் எனக்கு இந்திய ரானுவத்தின் மீது மட்டற்ற காதல் உள்ளது.

அது 1975 1976 காலம் நானும் என் நன்பன் ப்ரபா எங்கின்ற பிரபாகரனும் ( இவன் பெயரும் பிரபாகரன் இவனும் பிள்ளை இனத்தை சர்ந்தவன்) என்னை காட்டிலும் தீவீர விசுவசி. நாங்கள் இருவரும் வீடு வீடாக சென்று துணி, மருந்துகள் ஆகியன தீரட்டி அதை ஈழத்தமிழருக்கு அனுப்பி வைப்போம்.

இந்த காலகட்டத்தில் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் போட்டு அதன் பின் இந்திய ரானுவம் இலங்கை சென்றது.

இந்திய ரானுவம் முதலில் புலிகளை சரியாக கணீக்கவில்லை, அதன்பின் முதலில் பாரா மிலிட்டரி படை ஒன்றை
வன்னிக்காட்டில் இறக்கியது. அதில் மரத்தில் மீது இருந்த புலிகள் அந்த பாரா மிலிட்டரி படை வீரர்களை அந்தரத்தில் குருவி சுடுவது போல சுட்டார்கள். மொத்த வீரர்களூம் கொல்லப்பட்டனர். இதுதான் புலிகள் தங்களுக்கு வரவளைத்து கொண்ட முதல் அழிவு. இந்திய ரானுவத்தினரும் இதனால் கோவம் கொண்டு வன்னி பகுதியில் அத்து மீறீ நடந்து கொண்டனர்.
இந்த சம்வத்திற்கு பின் நான் விடுதலை புலிகளின் ஆதரவாக போசுவதை கூட நிறூத்தி விட்டன்.

ஆனாலும் நம் தமிழ் ரத்தம் எங்கு சிந்தினாலும் நம் இதயம் துடிப்பதை நிறுத்த முடியாது.

எனக்கு மிகவும் புடித்த இளம் தலைவர் இராஜிவ் காந்தி அவர்கள் கொல்ல பட்டவுடன் அது புலிகளின் மீது வெறுப்பாக மாறியது.
இருந்தாலும் தற்போது நடைப்பெற்ற சண்டையில் புலித்தலைவர் கொல்லப்பட்டது பல லட்சம் தமிழர்களீன் மரணம் நமக்கு வேதனை தருவதாக உள்ளது.
தனித்தமிழ் ஈழத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை எனறாலும் ஒரு சமஸ்டி அரசாங்கம் அமையும் என நம்புகிறேன்.

ஈழத்தமிழரின் வேதனை தீரவும் அவர்களூக்கு ஒரு நல்ல பழய நிலமை தீரும்பவும் இறைவனை பிரார்த்தனை செய்வது நன்மை பயக்கும். தினமும் வரும் செய்திளை படிக்கும் போது நம் இதயம் துடிக்க சொல்வது இறைவா எனது சகோதர சகோதரிகளூக்கு நன்மையும் நல்லதயும் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.