
வியாழக் கிழமை, இரவு மணி ஒன்பது, நான் மாலை வெளியில் சுற்றியவன் வீடு வந்து பரபரப்பாகத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். வீடு பூராவும் தேடுகின்றேன். எல்லா இடத்திலையும் தேடுகின்றேன். பரண், கட்டிலடியில்,புத்தக செல்ப்பில் என்று சகலமும் தேடப்படுகின்றது.
எங்க அண்ணா : என்னப்பா தேடுற,
நான் : ஒன்னும் இல்லை அண்ணா.
அண்ணன் : ஒன்னும் இல்லையா? என்ன என்று சொல்லு நானும் தேடுகின்றேன்.
நான் : இல்லை, அவரசம் இல்லை, நான் தேடிக்கொள்கின்றேன்.மனதுக்குள். (சொல்லிவிட்டு திட்டு வாங்க, நான் என்ன மடையனா?)
அண்ணன் : சரி சரி தேடிக்கே.
அண்ணன் போய் விடுகின்றார். நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். கொஞ்ச நேரம் தேடிக் கொண்டு இருக்கும் போது, மன்னி வர்றாங்க.
மன்னி : என்ன தேடுறிங்க.
நான் : ஒன்னும் இல்லை மன்னி,
மன்னி : ஒன்னும் இல்லாமையா! ஒரு மணி நேரமா தேடுறீங்க. சொல்லுங்க என்ன
தொலைச்சிங்க.
நான் : அது யுனிவர்சிட்டியில(பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மானேஜ்மெண்ட்) இருந்து புக்ஸ் கட்டு வந்தது இல்லையா? அது அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தேன், அதைக் காணவில்லை.
மன்னி : எப்ப வந்தது? எனக்குத் தெரியாதே.
நான் : அது ஒரு ரெண்டு மாசம் இருக்கும், மொத்தம் இரண்டு பண்டில், பத்து புக் இருக்கும்.
மன்னி : அதானே பார்த்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால வைச்சது, அய்யாவுக்கு இப்பத்தான் ஞாபகம் வந்துதாக்கும். நல்லாத் தேடுங்க. அப்பத்தான் புத்தி வரும். இப்ப முதலில் சாப்பிட்டு வந்து தேடுங்க. அதையாது உருப்படியா நேரத்துக்குச் செய்யுங்க.
நான் : இதே ஒரு ஜந்து நிமிசத்தில் வருகின்றேன்.
புக் கட்டுக்கள் இரண்டும் பிரிட்ஜின் பின்னாடி சந்து மூலையில் விழுந்து கிடக்கின்றது. கண்டு பிடித்து எடுப்பதைப் பார்த்து விடுகின்றார்.
மன்னி : என்னது இது? இப்படியா புக்கை மூலையில் போடுவது? இன்னமும் புக் சுத்தி இருக்குற கட்டைக் கூட பிரிக்கவில்லை, வந்து இரண்டு மாசம் ஆயிற்று. நல்லா லட்சணமா படிக்கிறீங்க.
நான் : இல்லை மன்னி, அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அது பின்னால விழுந்து விட்டது.
மன்னி : ஆம்மா இரண்டு மாசமா விட்டு விட்டு, அய்யருக்கு இப்ப ஏன் திடிர்ன்னு ஞாபகம் வந்தது?
நான் : (மென்னு முழுங்கி), இல்லை இந்த வார சனி,ஞாயிறு எக்ஸாம் ஆரம்பம், இந்த வாரத்தில் இருந்து ஜந்து வாரம் வீக் எண்ட் எக்ஸாம்ஸ் இருக்கு.
மன்னி : (அதிர்ச்சியாய்) "என்னது நாளாளைக்கு எக்ஸாமுக்கு, இன்னிக்கு புக்கை தேடுறீங்களா, அய்யய்யே டீ ஆர், ! (அண்ணாவை அழைப்பது) இங்க பாருங்க,நாளாளைக்கு எக்ஸாமாம் இன்னிக்கு புக் தேடுறார் துரை. (நக்கலாக).நல்லா படிக்கிறீங்க போல. உங்களுக்கு எல்லாம் எக்ஸாம் பீஸ்தான் தண்டம்.
அண்ணா : சரி விடு, அன்னிக்கு காலையில தேடாம இப்பவாது தேடுகின்றானே.
மன்னி : சரி, சரி டிபன் சூடு ஆறிவிடும், சாப்பிட்டு விட்டு படியுங்க. ரொம்ப சின்சியர்தான் நீங்கள்.
நான்: சரி என்று தட்டைப் போட்டு உக்காருகின்றேன். அண்ணா மெதுவா ஆரம்பித்து திட்டு விழுகுது.
அண்ணா : என்ன பசங்க நீங்க? ஒரு பொறுப்பு வேணாம், இப்படியா இருப்பாங்க. மத்த பசங்களைப் பாரு, வேலைக்கும் போயிட்டு என்ன அழகா படிக்கிறாங்க. நாளா நாளையிக்கு எக்ஸாமுன்னா, இன்னிக்கா புக்கைத் தேடுவாங்க. உன்னை சொல்லிக் குத்தம் இல்லைடா, உங்களைக் கவலை தெரியாம வளர்த்துட்டேம். அதுதான்.
மன்னி : சரி வளர்ற பையன், சாப்பிடறப்ப திட்டாதீங்க.
அண்ணா: என்ன வளர்ற பையன், வளராத பையன்னு,பையந்தான் வளர்றான், மூளையும் பொறுப்பும் வளர்ந்தால் தானே.
மன்னி : சரி!! சாப்பிட்டு விட்டுப் பேசுங்க, சாப்பிடும் போது பேசாதீங்க. என்ன சுதாகர், இப்படியா இருப்பது? ஒழுங்கா படிங்க. நான் டீ போட்டு பிளாஸ்க்கில் வைக்கின்றேன். இரவு படியுங்க. இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாருங்க.
நான் : சரிங்க மன்னி.
அண்ணா : ஆமா டீ ஒன்னுதான் குறைச்சல், சரி, சரி ஒழுங்கா படிக்கற வழியைப் பாரு. ஆபிஸிக்கு வேணா இரண்டு நாள் லீவு போட்டுக்கே.
நான் : இல்லைன்னா ! நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.
சாப்பிட்டு முடிந்ததும், நான் மறுபடியும் தேடுகின்றேன்.
மன்னி:அதான் புக்ஸ் கிடைச்சாச்சு, அட்டையை பிரிச்சுட்டிங்களே, மறுபடியும் என்ன தேடுகின்றீர்கள்.
நான் : ஒன்னும் இல்லை,
மன்னி : ஒன்னும் இல்லை என்றால் எதே இருக்கு. சொல்லுங்க, நானும் ஹெல்ப் பண்ணுகின்றேன்.
நான் : இல்லை, நான் தேடிக்கிறேன்.
மன்னி: சும்மா சொல்லுங்க, தேடித் தருகின்றேன். தெரிந்த கதைதானே.
நான் : இல்லை அண்ணாகிட்ட சொல்லிடுவீங்க, அவர் மறுபடியும் திட்டுவார்.
மன்னி : சரி சொல்லவில்லை, அண்ணா திட்டுவார் மட்டும் தெரியுது, பொறுப்பா படிக்கத் தெரியல்லையா? சொல்ல மாட்டேன் சொல்லுங்க, என்ன தேடுறீங்க.
நான் : இல்லை, போன வாரம் ஹால் டிக்கெட் வந்தது, எங்க வைச்சேன்னு தெரியல்லை. அதான்.
மன்னி: சுத்தம்!. பெருமாளே!!!! எப்படி இப்படி இருக்கிங்க. ஹால் டிக்கட்டைக் கூட ஒழுங்க வைச்சுக்க மாட்டிங்களே. நாங்க எல்லாம் எக்ஸாம் சொன்னா போதும், சாப்பாடு எல்லாம் இறங்காது,தூக்கம் வராது. எப்படி இப்படி நெஞ்சழுத்தமா இருக்கீங்க. ஒரு பயமே கிடையாதா?
நான் : இல்லை மன்னி, இங்கதான் சோ கேஸ் மேலை வைத்தேன். காணேம்.
மன்னி : ஏன் உங்களுக்கு ஒரு செல்ப், சூட்கேஸ் எல்லாம் இருக்கு இல்லை, அதில வைக்க வேண்டியதுதானே.
நான் : இல்லை, அப்புறமா கவரை பிரிக்கலாம்ன்னு வைத்தேன். அது எங்கயே காணேம்,
மன்னி : ஆமா புஸ்தக கட்டையே இன்னமும் பிரிக்கலை. ஹால் டிக்கெட் கவரையா பிரிக்கப் போறிங்க. என்ன அவரசம் எக்ஸாம் அன்னிக்கு காலையில் தேடினால் போதும். எதுக்கும் சோ - கேஸ் அடியில பாருங்க, வேலைக்காரி கூட்டித் தள்ளியிருப்பா.
நான் : (குனிந்து எடுத்துக் கொண்டு) ஆமா மன்னி அடியிலதான் விழுந்து இருக்கு, நாளைக்குப் போயித்தான் எக்ஸாமினர் சைன் வாங்க வேண்டும்.
மன்னி : பேச்சுடா, நல்ல கவனமாத்தான் இருக்கீங்க. கஷ்டகாலம். பிளாஸ்க்கில் டீ போட்டு டேபிள்ல வைச்சுருக்கேன். தூக்கம் வந்தால் குடியுங்க. நாங்க தூங்கப் போறேம். டீ வீ பார்க்காம இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படியுங்க.
அண்ணா : ஆமா இரண்டு நாள்ல படிச்சு அய்யா டாக்டர் பட்டம் வாங்கப் போறார்.இதுக்கு கட்டுண பீஸைப் பெருமாள் கோவில் உண்டியலில் போட்டா புண்ணியமாவது கிடைக்கும். சரி இப்பவாது ஒழுங்கா படி.
நான் : (ரொம்ப நல்ல புள்ளை மாதிரி) சரிங்க அண்ணா, குட் நைட் மன்னி.
இரண்டு நாளிலும், அதுக்கு அடுத்த வாரத்திலும் வந்த எக்ஸாமும் இரண்டு நாளில் படித்து. அரியர்ஸ் எதுவும் இல்லாமல் சிங்கிள் அட்டம்ப்டில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி விட்டேன்.
மன்னி : நம்ப முடியல்லை, படிக்காம இப்படிப் பாஸ் பண்ணிருக்கீங்க, அதும் பர்ஸ்ட் கிளாஸல. வாழ்த்துக்கள். பால் பாயசம் பண்ணிரலாம். போயிப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் போட்டு,அர்ச்சனை பண்ணி வாருங்கள்.
நான் : பாஸ் பண்ணது நான், பெருமாளுக்குப் பாயசமா,பிள்ளையாருக்கு ஒரு ரூவாய்யா?
மன்னி : இந்தக் குதர்க்கம் எல்லாம் வீட்டுக்கு வெளியில பேசறதேட நிறுத்திக்குங்க. அண்ணா காதுல கேட்டா தொலைச்சிடுவார். தெரியுமில்லை. ஆமா எப்படிப் பாஸ் பண்ணீங்க? பிட்டா இல்லை காப்பியடிச்சீங்களா நம்ப முடியல்லையே.
நான் : மன்னீயீயீ!! எனக்கு பிட்டு காப்பி அடிப்பது எல்லாம் புடிக்காது. இது மார்க்கெட்டிங் பேப்பர்ஸ்தானே. நான் செய்யும் வேலை அதுதானே. அப்புறமும் எல்லா சப்ஜெட்டும் நான் யூஜில படித்ததுதான். நிறைய கேஸ் ஸ்டடிதான் கொடுப்பாங்க,கவனமா எழுதினா போதும், பால் பாயசத்திற்கு தேங்கஸ் மன்னி.
மன்னி : சரி மொதல்ல கோவிலுக்குப் போயிட்டு வாங்க,உங்க அண்ணா அன்னிக்கே என்ன சொன்னார் தெரியுமா?, அவன் சொந்தமா எழுதி பாஸ் பண்னீருவான், ஆனா முன்னாலேயே படித்து நல்ல மார்க் எடுத்தா குறைஞ்சா போயிடுவான் என்றார். இப்ப அவருக்கும் சந்தேசம்.
டிஸ்கி : சித்ரா செல்பேனைத் தொலைத்து விட்டு, தேடிய பதிவால் வந்த கொசுவத்திப் பதிவு இது. உங்களுக்கும் கொசுவத்தி சுத்துமே,அப்ப பதிவா போட்டு விடுங்கள். இந்தப் பதிவைப் போடுகின்றேன் என்று சொன்னதும் சித்ரா என்ன சொன்னாங்க தெரியுமா?
// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //
கொஞ்சம் பெரிய பதிவாய் போய்விட்டது,பொறுமையாய் படித்த அனைவருக்கும் எனது நன்றி.