Friday, January 22, 2016

S.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை

இன்னிக்கி காலையில நான் வீட்டை விட்டு வெளியில வந்தபோது, எதிர்த்தாப்புல சர்ச் சுவரில், “ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவங்களே, என்னிடம் வந்து இளைப்பாருங்கள்” அப்படினு ஒரு வசனம் பார்த்தேன். நம்மளும், ”ஏன் வருத்தப்பட்டு வேலை பார்ப்பவர்களே இங்க வந்து சிரிச்சுட்டு போங்கனு” ஒரு நகைச்சுவைப் பதிவு போடக் கூடாதுன்னு ஒரு எண்ணம். சரி பார்க்கலாம்னு சொல்லிட்டு டீவி போட்டால், ஜெயா டீவில ராமேச்சுவரம் திருக்கோவில் மற்றும் ஆண்டாள் திருக்கோவில் குடமுழுக்கை ஒரே நேரத்தில் காட்டினார்கள், அட இது என்ன புதுமை, இரண்டு கோவில் குடமுழுக்கு ஒரே நேரத்தில், அதுவும் சைவம்,வைணவம் இரண்டும் ஒரே நேரத்தில், அப்படினு ஆச்சிரியப்பட்டு பார்க்க ஆராம்பித்து விட்டேன். விளம்பர இடைவேளையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போனா, அங்க அடிக்கப் பொறந்த மாதிரியே, வார்னரும்,பிஞ்சும் நம்ம பெளலர்களை பின்னி பெடல் எடுத்துட்டு இருந்தாங்க. நம்ப பெளலர்களும் அடி வாங்க பொறந்த மாதிரியே பந்து வீசிட்டு இருந்தாங்க, பந்து வீசுவது என்றால் சும்மா பந்து போடுவது இல்லை, விக்கெட் எடுப்பதுன்னு யாரும் சொல்லித்தரலை போல. அட இது வேலைக்கு ஆவாதுன்னு சொல்லி, தூர்தர்சன் போனா அங்க P.S.L.V ராக்கெட்டில், அன்னிய நாட்டு ஆறு சாட்டிலைட்டுகளை ஒன்னா லாஞ்ச் பண்ணாங்க. நம்ப விஞ்னானிகளின் சாதனைக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு பார்த்தேன். விஞ்னாத்தில் ராக்கெட் புதுமை, அதே சமயம் குடமுழுக்கு பழமையும் கலந்த நம் பாரத கலாச்சாரம் பத்தி வியந்து விட்டேன். என்னடா இவன் நகைச்சுவைனு சொல்லிட்டு கடுப்பு அடிக்கறான்னு நினைக்காதிங்க, பதிவுக்கான பின்னனி இதுதான். சரி நம்ம வடிவேலு பாணியில் பதிவுக்கு போகலாம்.


P.S.L.V ராக்கெட் விட்டுட்டு ஒரு கூட்டம் போட்டாங்க, நானும் அதுல கலந்துக்கிட்டு ராக்கெட் விடுற செலவு எல்லாம் சொன்னாங்க. இவ்வேளோ காஸ்ட்லியா இருக்கே, இதை இன்னும் கம்மி பண்ண முடியாதான்னு யோசிச்சேன், அப்பத்தான் என் தேங்காய் மண்டையில ஒரு ஜடியா வந்துந்ச்சு. அதுதான் கம்மி செலவுல சாட்டிலைட் அனுப்பும் S.S.L.V ராக்கெட் லாஞ்சிங்க் புராஜெட். இந்த ஜடியாவோட நான் அங்க சுத்தி சுத்தி வந்தேன். அப்பத்தான் ஒரு தமிழ் நாட்டு விஞ்னானி ஒருத்தர் வந்தார். டபால்னு அவரு கால்ல போய் விழுந்தேன். அவரு டக்குனு திகைச்சு போய், இப்படி சட்டுனு கால்ல விழுறானே ஒருவேளை மந்திரியா இருப்பாரான்னு ஸாக் ஆகிப் பார்த்தார். நான் எந்திரிச்சு, சார் உங்களுக்கு என் வணக்கங்கள் என்று சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். ஏம்பா என் கால்ல விழுற தமிழ் நாட்டுல ரெண்டு பேரு கால்ல விழுந்தா பதவியாது கிடைக்கும் என் காலில் ஏன் விழுறேன்னு கேட்டார். அதுக்கு நான் சார் உங்க கால்ல மட்டும் விழவில்லை, எல்லா I.S.R.O விஞ்னானிகள் காலில் விழுந்தேன் என்று கூற அவரும் மார்கழி மாசம் பனியில் நனைஞ்ச மாதிரி புல்லரித்துப் போய், என்னப்பா வேணும்னு கேட்டார். நான் சார் எனக்கு ராக்கெட்னா ரொம்ப உசுரு, அதுனால அதைப் பத்தி எனக்கு சொல்லித் தருவீங்களான்னு அப்பாவியா கேக்க, அவரும் சந்தேகத்தோட என்ன தெரியனும் அப்படின்னு கேட்டார். சார் இந்த ராக்கெட் எப்படி அனுப்புறிங்கன்னு கேட்டேன், அதுக்கு இப்ப நான் பிஸியா இருக்கேன், நீங்க இரவு ஒரு 7.30 மணிக்கு வாங்கன்னு சொன்னார். நானும் ராத்திரி போனேன். அப்ப அவரு எனக்கு ராக்கெட் பாகங்கள், எரிபொருள், பூஸ்டர்கள்,ராக்கெட் லோட், ஆர்பிட், மற்றும் கிரையோஜெனிக் எஞ்சின் பத்தி எல்லாம் சொன்னார். நானும் எல்லாம் ஆர்வமாக கேட்டு முடித்துவிட்டு மெதுவா என் S.S.L.V புராஜெட் பத்தி சொல்ல ஆரம்பித்தேன். அவரும் ஆர்வமா நான் சொல்வதை கேக்க ஆரம்பித்தார்.
சார் இப்ப இந்த ராக்கெட் லாஞ்சில எரிபொருள் செலவைக் குறைப்பதுதான் என் திட்டம், இப்ப நீங்க இந்த மாதிரி ராக்கெட் எரிபொருள் போட்டு,அதை லாஞ்ச் பண்ணா அதை ஜியோ ஸ்டேசனரி ஆர்பிட்ல நிலை நிறுத்த சுமார் ஒரு பன்னிரெண்டு அல்லது பதிமூன்று மணி நேரம் ஆகும். அதுக்கு பதிலா நீங்க SSLV யூஸ் பண்ணினா ரொம்ப கம்மி செலவுல சுமார் மூன்று அல்லது நாலு நிமிசத்தில் நிலை நிறுத்தி விடலாம் என்றேன். அவரும் ரொம்ப ஆச்சிரியமா,  அப்படியா அப்படி ஒன்னு இருக்கான்னு சீட் நுனிக்கே வந்துட்டார். எங்க சொல்லுங்க, சொல்லுங்க சொல்லிகிட்டே இருங்கனு சொல்லி ஆர்வமாயிட்டார். நானும் SSLV பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

நான்: சார் இதுக்கு மொதல்ல என்னை மாதிரியே ஒரு முன்று பேரை குளேனிங் எடுக்கனும், அதுவும் சேர்த்து நாங்க நாலு பேரு ஆகிடுவோம், அதுக்கு அப்புறம் ராக்கெட் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும் போது எங்களையும் கவனிக்க ஆரம்பிக்கனும்,உதாரனமா இப்ப நாளைக்கு காலையில்ல லாஞ்ச் பண்னறிங்கனா, முந்திய நாள் மதியமே எங்களை ரெடி பண்ண ஆரம்பிக்கனும் என்றேன். இது வரைக்கும் ஆர்வமா கேட்ட அவர் நம்பிக்கை இல்லாம சீட்ல நல்லா உக்காந்து, இவன்  கொஞ்சம் லூசா இருப்பானோன்னு சந்தேகத்தோடு கேட்டார்.
அவர்: என்னப்பா ரெடி பண்ணனும்?.
நான்: சார் மொதல்ல காய்களில் அவரைக்காய்,பூசனிக்காய்,கொத்தவரங்காய்,குடை மிளகாய் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய் மற்றும் கிழங்கு வகையில் சேனை,உருளை,சேப்பங்கிழங்கு கருனைக்கிழங்கு மற்றும் சுண்ட வத்தல் எல்லாம் போட்டு ஒரு குண்டான் நிறைய கதம்ப சாதமும், தொட்டுக்க ஒரு தட்டு நிறைய உருளை சிப்ஸ் தரனும்.


அவர்: அது எதுக்கு? என்றார் நம்பிக்கை இழந்தவராய்.
நான்: சொல்றேன் சார். அப்புறம் நாங்க நல்லா சாப்பிட்ட உடன் டீவி பார்த்துக் கொண்டு கொஞ்சம் கொறிக்க எதுனா சைட் டிஸ் தரனும், சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், மாலையில் மறுபடியும் டீவில டிஸ்கவரி சேனல் பார்க்கும் போது, பட்டானி,மொச்சை,பாசிப்பயறு,கொண்டைக்கடலை மற்றும் காராமணி போட்டு நவதானிய சுண்டல் ஒரு தட்டு நிறைய தரனும்.
அவர் : கொஞ்சம் கடுப்பாகி, அப்புறம் என்றார்.
நான்: சார் அதுக்கு அப்புறம் ஒரு வாணலி நிறைய கேரட்,பீன்ஸ் போட்டு உருளை மசாலுடன் முப்பது அல்லது நாற்பது பூரிகள் இரவு சாப்பாட்டுக்கு தரனும்.
அவர்: கொஞ்சம் மெர்சலாகி, அப்புறம் என்றார்.
நான்: இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் நான் சூப்பர் சிங்கர், மேன் வெர்ஸஸ் வைல்டு, சிஜடி புரோக்கிராம் எல்லாம் டீவில பார்ப்போன் அப்ப கொறிக்க நிறைய குச்சிக் கிழங்கு சிப்ஸ்,கடலை பர்ப்பி,முறுக்கு எல்லாம் தரனும்.
அவர்: செம கடுப்பாகி, அவ்வளவுதான இன்னும் இருக்கான்னு கேக்க,
நான்: அவ்வளவுதான் சார்,அதுக்கு அப்புறம் காலை நாலு மணி வரைக்கும் தூக்கம் போட்டுட்டு, சரியா ஜந்து மணிக்கு எங்க நாலு பேரையும் ராக்கெட் கீழ சைடுல நல்லா டைட்டா கட்டி விட்டுடிங்கனா, சரியா ஜந்து மணியில இருந்து ஜந்து அரை மணியில சும்மா பத்து என்பீல்டு புல்லட் சவுண்ட்ல ஏழு போயிங் 747 விமான வேகத்துல பின்னாடி கேஸ் ரிலிஸ் ஆகும் பாருங்க, அதுக்கு அப்புறம் ரெண்டு அல்லது மூனு நிமிசத்தில் ராக்கெட் போயி ஆர்பிட்ல கரக்ட்டா சாட்டிலைட் லாஞ்ச் ஆகிடும். இதுதான் சார் என் SSLV (sudhakar Satellite launching vehicle) பிளான் என்றேன் பெருமையாக.
அவர் இதைக் கேட்ட உடனே ரொம்ப அதிர்ச்சியாகி என்னை உதைக்காத குறையா பார்த்து,உடனே இண்டர்காம் எடுத்து நம்பரைத் தட்ட ஆரம்பித்தார். நானும் சரி நம்ப புராஜெட் அவருக்கும் புடிச்சு போச்சு போல, இப்ப சக விஞ்னானிகளை கூப்பிட்டு நம்மை பாராட்டப் போறார்னு நினைத்தேன்.
அவர் இண்டர்காமில், “ ஹலோ செக்கியுரிட்டி கார்ட்ஸ் ஒரு ஆடு ஒன்னு அதுவே மஞ்சத்தண்ணி தெளிச்சு,மாலை போட்டுட்டு வந்து,என்னை வெட்டு வெட்டுன்னு சொல்லுது, நீங்க ஒரு நாலு பேரு வந்திங்கனா வெட்டறதுக்கு சுவாரஸ்யமாய் இருக்கும் என்றார். நான் ஜயோ,ஜயோ சார்னு சொல்லி வெளியில் ஓட்டம் பிடித்தேன். அதாடு என் கற்பனைக் குதிரையும் முடிந்தது.
டிஸ்கி: இப்படி நான் வெளியில் வரும் போது அங்க நம்ப கோவி.கண்ணன் அண்ணா, மாயக்கண்ணனா மாறி சிரித்துக் கொண்டு இருந்தார். ஏண்ணா நீங்க கூட என் புராஜெட் பத்தி கிண்டல் பண்றிங்களேன் என்றேன், அதுக்கு அவர் சிரித்துக் கொண்டு, இதுக்கு எதுக்கு நாலு சுதாகர், நீ ஒருத்தனே போதுமே என்றார்.


1 comment:

  1. ரெண்டு வருசத்துக்கு அப்புறம் இப்பதான் பதிவு போட்டு இருக்கேன்,விட்டுப் போன நம் சொந்தங்கள் எல்லாம் படித்து விட்டு கமெண்ட் பண்ணவும்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.