Tuesday, November 30, 2010

முற்றாக் காமம் என்னும் என் கவிதையின் விளக்கம்



கடவுளைக் காதலிப்பது ஒரு வகை ஆன்மிகக் காமம், திருமங்கை ஆழ்வார் கண்ணனைக் காதலியாகக் கொண்டு பல பாசுரங்களைப் பாடியுள்ளார். பாரதியார் கண்ணனை கண்ணம்மாவாக பாடியுள்ளார். கண்ணதாசனும் கண்ணனனை காதலியாக படியுள்ளார். நான் கண்ணனனை காதலனாக, ஒரு குண்டலினி யோக சாதகனின் நிலையில் எழுதியுள்ளேன். முதலில் தலைப்பு முற்றாக் காமம் பற்றிப் பார்ப்போம்.

மானிடக் கலவியில் எல்லாமும் முற்றும் பெறும் காமம் தான். ஒரு முறை கிளர்ச்சி அடைந்தவுடன் அவன் காமம் முற்றும் பெறுகின்றது. பின்னர் மீண்டும் கிளர்ந்து விடும். இதுக்கு குறிப்பிட்ட கால வரையறை இருக்கும். ஆனால் பேரின்பம் என்னும் யோக சமாதி நிலை ஒரு முற்றாத தெவிட்டாத நிலை. இதுதான் முற்றாத அல்லது முடிவுறா காமம் ஆகும். ஆக இதுதான் தலைப்பு.

முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக

வண்ணம் ஆடையது குழயக்

இது நித்திய யோகத்தில் அமர்ந்து இருக்கும் சாதகனின் நிலை ஆகும். தஞ்சை மன்னர் அபிராமியின் கோவிலுக்கு வரும் போது சுப்பிரமனியன் என்னும் அபிராம பட்டர் அமர்ந்து இருந்த நிலை. வாயில் சலம் ஒழுக, வேட்டி கலைந்தது கூடத் தெரியாமல் பித்தன் போல, பிரம்மம் என்னும் பிரகாச ஒளியை, அவர் தசிக்கும் போது, மன்ன்ர் திதி கேட்டதால் அந்த ஒளியை நிலவு என்று கொண்டு பொளர்னமி என்று கூறினார், ஆனால் அன்று அம்மாவாசை.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

தொடந்து சாதகம் செய்யும் யோகனின் உடல் நெருப்பு போல உஷ்ணம் கொதிக்கும், ஆதலால் மார்கழி குளிரும் தெரியா வண்ணம் ஆடையற்றுக் கிடப்பான், நடு இரவில் குடம் குடமாய் தண்ணி கொட்டுவான். தன் சூட்டை அடக்க முடியாமல் தவிக்கும் சாதகனின் நிலை இதுதான். தக்க குருவின் வழிகாட்டுதல் இருந்தால் தான், சாதகன் தன் நிலையில் இருந்து வெளி வர முடியும். இல்லை என்றால் சாதகன் பைத்தியம் ஆகிவிடுவான். உடல் உஷ்ணம் பொறுக்க முடியாமல் பலமுறை அபிராம பட்டர் இரவுகளில் பலமுறை காவிரியில் குளித்து உள்ளார். எனது இந்த நிலையில் இருந்து வெளிவர நீ வேண்டும் என்று முழு இரவும் காத்துக் கிடந்தேன்.
கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

சித்தம் குளிர -- சித் தம் அதாவது எண்ணம், மனம், உடல் இச்சைகள், சுருக்கமாக சொன்னால் எண்ண அலைகள். சத்தத்தில் கலவி புரிந்து என்பது -- சத் ஆன்மா, ஆன்மாவில் கலவி புரிந்து, அதாவது சத்- சித் கலவி என்பது ஆனந்தம், சத் சித் ஆனந்தம். சத்சித்தானந்தம் என்னும் பரவச நிலையைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஆர்கஸம் என்னும் உச்சம் மட்டும் தான் கிட்டும், அதுவும் எல்லாக் கலவியிலும் கிட்டாது. ஆக உச்சத்தில் மோன நிலை என்பது உச்சத்தைக் காட்டிலும் மேன்மையான சாந்த நிலை, அல்லது பரிபூர்ண இறை நிலையைக் குறிப்பது, இந்த நிலை தொடர்ந்து இருக்க கடவுளை வேண்டுவது.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.


எந்த நிலையில் சாதகன் இருந்தாலும், அந்த நிலையில் அப்படியே சாதகன் பிரமத்தில் நிலைத்து இருப்பது. சுவாமி விவேகானந்தர், இரமணர் போன்றேர் பல நாட்கள் குகைகளில் இப்படி இருந்துள்ளனர். தன் மீது கொசுக்கள் ஒரு போர்வை போல கடிக்கும் நிலையில் கூட விவேகானந்தர் பல நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். எறும்புகள் கடிப்பது கூட தெரியாமல் இரமணர் இருந்துள்ளார். இவர்களின் உச்ச நிலை யோகத்தில் பினைந்து இருக்கும் நிலையை விளக்கியுள்ளேன்.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,


குதம்பை சித்தரின் பாடலில் ஞானப்பால் எனக்கிருக்க மாங்காய் பாலும் தேங்காய்ப் பாலும் எனக்கு எதுக்கடி என்னும் பாடலைத்தான் நான் தெவிட்டாத ஞானப்பால் வேண்டும் என்றும் மாங்காயும் , தேங்காயும் புளித்து(சலித்து) விட்டது என்று குறிப்பிட்டேன். பரமாத்மாவின் லீலைகளில் இருக்கும் ஜீவாத்மாக்களான கோபியர்களின் நிலையில் இருந்து, கண்ணனின் வாயமுதம் என்னும் கீதையை பருகியதால் மற்ற விஷயங்கள் புளித்து விட்டது என்னும் பொருள்.
கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

கண்ணா என்னை ஆள்பவனே என்னை கைவிடாது நித்திய சுகமான உன் அனுக்கிரகத்தில் என்னை ஆழ்த்தி என் பிரம்மம் என்னும் யோகத்தை முடித்தி என்னை இறை நிலை கொண்டு செல்ல வரமாட்டாயா.
இதுதாங்க நான் எழுதிய கவிதையின் பொருள். பக்தி யோகமும், சாங்கிய யோகமான குண்டலினியும் ஒரு மிக்ஸிங் போட்டுள்ளேன்.இப்ப மறுபடியும் கவிதையைப் படித்தால் புரியும்.

இந்த பாடலை சரியாக இறைப் பிரேமம் என்று கணித்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

நன்றி.

Saturday, November 27, 2010

முற்றாக் காமம் !!













கண்ணாளா !!
நின்மேல் முற்றாக் காமத்தில்
முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக
வாடிக் கிடந்தேன்.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

கண்ணாளா !!
கொதிக்கும் உடம்பில
மார்கழி குளிரும் தெரியா
வண்ணம் ஆடையது குழயக்
உள்ளம் கல்லாக
அதிகாலைக் கிடந்தேன்

கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,

கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

டிஸ்கி : சும்மா எப்ப பார்த்தாலும் இந்த ஹேமுவும், தமிழரசியும் காதலும் சோகமும் கலர்ந்து கவிதை எழுதி டார்ச்சர் தர்ராங்க.
நம்மளும் எத்தனை நாளைக்கித்தான் பொறுத்துக் கொள்வது, வடிவேலு ஸ்டைலில் நாங்களும் கவுஜ எழுதுவேம், எங்களுக்கும் எழுத தெரியும்ன்னு கூவி
எல்லாரும் நல்லா பார்த்துக்குங்கே நானும் ஒரு கவுஜ போட்டிருக்க்கேன்.
எல்லாரும் காதல், நட்பு, சோகம் என்று தொடுவார்கள், ஆனால் காமத்தைத் தொட்டால் இமேஜ் குறித்து பயப்படுவார்கள், ஆனால் நாந்தான் வித்தியாசமான பைத்தியம் ஆயிற்றே, கொஞ்சம் அதிகமாக காமத்தைத் தொட்டுள்ளேன். படித்து விட்டு புரிந்ததால் விளக்கவும், கோபப்பட்டால் திட்டவும், அடிக்கவும், ஏன் காறித்துப்பக் கூட உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்களின் கருத்தை மட்டும் சொல்லாமல் போகாதீர்கள்.
சொல்ல விருப்பம் இல்லாவிட்டல் வந்ததுக்கு அடையாளமாக ஸ்மைலி போடவும், கோபம் என்றால் திட்டுவதின் அடையாளமாக -- போடவும்.

இந்தக் கவுஜையின் விரிவு அடுத்த வாரம் அடுத்த பதிவில்.

அய்யா சிங்கக்குட்டி அவர்களே நான் எத்தனை வருடம் மலைக்குப் போனாலும் கன்னிச்சாமிதாங்க. குருசாமி அளவுக்கு பக்குவம் இல்லை.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, கோபமோ அல்லது வருத்தமோ இல்லை பாராட்டோ! எனக்கு வேண்டியது உங்களின் பின்னூட்டங்கள் தான்.
பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துக்கள்தான் என்னை செதுக்கும் உளி.

நன்றி நன்றி.

Tuesday, November 23, 2010

கார்த்திகை தீபங்களின் திருனாள்

ஸ்வாமியே ஸரணம் அய்யப்பா, இந்த முறையும் மாலை போட்டாகி விட்டது, அந்த அய்யனை தரிசிக்க ம்லை யாத்திரை போகப் போகின்றேன்.

சென்ற முறை அய்யப்பன் தொடரில் கொஞ்சம் கணக்கு தப்பா நான் பதினேரம் வருடம் என்று சொல்லிவிட்டேன், பின்னர் உடன் வரும் நண்பர்கள்தான் திருத்தினார்கள், சென்ற வருடம் சென்றது பதினாலாம் வருடம், இந்த முறை பதினைந்தாம் வருட யாத்திரைக்காக மாலை இட்டாகி விட்டது. பூஜை, கோவில் மற்றும் அலுவலகம் என நல்லா பொழுது போகின்றது. இந்த வருடம் கார்த்திகை தீப பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இருந்தேன், அவல் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம், அதிரசம், பொரி உருண்டை என்று பல திண்பண்டங்கள் செய்து இருந்தார்கள். எங்கள் வீட்டு கார்த்திகை தீபங்களை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்,
































எங்கள் வீட்டு ஹாலில் தீபங்களை வைத்து ஏற்றி பின்னர் பூஜை செய்து விளக்குகளை வாசல் மற்றும் பால்கனியில் வைப்போம். அரசாங்க குவாட்டர்ஸ் ஆதலால் பால்கனியில் இடம் கொஞ்சம் சின்னதாக இருக்கும்.விளக்குகளை வைத்த பின்னர் தீபாவளியின் போது கார்த்திகைக்கு என்று எடுத்து வைத்த பட்டாசுகள் மற்றும் புஸ்வாணங்களை விடுவேம். பின்னர் செய்த நொறுக்கு தீனிகளை பக்கத்து வீடுகளில் உள்ள அனைவருக்கும் கொடுத்து, நாங்களும் உண்போம்.

நன்றி.

Friday, November 19, 2010

குழாயடிச்சண்டை















எனக்கு திடிர்ன்னு பல வருடங்களுக்கு முன்னர் பழைய வண்ணாரப் பேட்டையில் கார்ப்பேரசன் குழாயடிச்சண்டை பார்த்தது ஞாபகம் வந்தது. அதை பதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்காலம் என்ற எண்ணம். டீசண்டான பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம். தெருவில் குழாயடியில் நிகழம் இரு பெண்களின் சண்டைக் காட்சிகளை மனதில் கொள்ளவும்.

அடியே, நாங்க நிக்கறது தெரியலை, குடத்தை தூக்கிட்டு முன்னால போற பெரிய துரைசானி இவ.

ஆமா இவ பெரிய மயிறு, இவ நிக்கறான்னு நாங்க ஒதுங்கனுமாக்கும்,

அடியே யாரைப் பார்த்து மயிறுன்ற உன் லட்சணம் தெர்யாதாக்கும், ஊரே நாறுது,

ஆமாண்டி நாதாரி, என் கதை ஊரு நாறுது, நீ மட்டும் என்ன உசத்தியாக்கும், ஒன்னும் தெரியாத என் புருசனை மயக்கி முந்தானையில முடிஞ்சு வைச்சுக் கிட்டியே.

அடியே பல்லை பேத்துப் புடுவேன். அவனை அடக்கத் தெரியல்லை, என் கிட்ட வந்து ரவுசு உடாதே.நீ என்ன யோக்கியமாடி நீயுதான் என் புருசன் கிட்ட பல்லை இளிக்கிற.

ஆமாண்டி நான் இளிச்சா அவனுக்கு புத்தி எங்க போச்சு, ஊராறிஞ்ச நாதாரி என்னைப் பத்திப் பேசாதடி

அடியே நான் ஊராறிஞ்சா? நீ என்ன உலகம் அறிஞ்சவளா.....

பொறம் போக்குக் கழுதை வாயாப் பார்த்தியா என்ன பேச்சுப் பேசறா, அவுசானிக் கழுதை.

ஏய் மரியாதையாப் பேசு, என்ன வுட்டா வாய் நீளுது, அறுத்துப் போடுவேன் அறுத்து நாதாரி நாயே.........

அடியே யாரைப் பார்த்து மரியாதை தெரியாதுன்னு சொல்ற. மரியாதை கொடுப்பதில் நாந்தான் நம்பர் ஒன்னு, நீ மூடிக்கிட்டுப் போடி.......

இப்படியா இந்த் சண்டை பலரின் அந்தரங்கத்தை தெருவில் வைத்து விமர்சனம் செய்யப் பட்டது.இருவரின் கணவன்மாரும் தங்களின் மனைவியரின் சண்டை சாமார்த்தியத்தை மாற்றி மாற்றி புகழந்து கொண்டார்கள். தெரு சணம் பூராவும் வேடிக்கை பார்த்தது இவ சரியா அவ சரியா என விவாதம் பண்ணிக் கொண்டது,
நடுனிலையான என்னை மாதிரி சிலர் கருமமடா சாமின்னு தலையில் அடித்துக் கொண்டது.

ரொம்ப முக்கியமான டிஸ்கியோ டிஸ்கி:---

இது நான் பார்த்த தெரு சண்டைதாங்க, நீங்க பாட்டுக்கு இங்கன ஒருத்தர் அய்யோ ஸ்பெக்ட்ரீம் ஸ்பெக்ட்ரிம்னு அறிக்கை விட, அதுக்கு பதிலுக்கு உன்னைப் பத்தி தெரியாதான்னு, டீன்ஸி,டீன்ஸி கேஸுல மாட்டுன ஆசாமிதான நீ என்று கேக்கறதும், பத்திரிக்கைகள் அதை பெரிதாக, பெருமையாக விளம்பரம் செய்ய, மக்கள் பொழுது போவதற்க்காக பேப்பரை படித்து விவாதம் செய்வதையும்.

பாராளுமண்ற குழுவுக்கு எதிர்க்கட்சிகள் இரகளை பண்ணும் காட்சிகளையும், அதுக்கு எதியுரப்பாவை இராஜினமா பண்ணச்சொல்லி ஆளுங்கட்சி கத்துவதையும் நினைத்துக் கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

மூணவது தெரு முச்சந்தியமன் மேல சத்தியமா. மங்குனி சாட்சியா நான் தெரு சண்டையத்தான் எழுதினேன். நீங்களாக எதாவது கற்பனை பண்ணிக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.

என்னங்க பதிவு கொஞ்சம் கேவலமா இருக்கா, மன்னிச்சுகுங்க, இதுக்கு மேல அழகா விமர்சனம் பண்ண எனக்கு தெரியல்லை.

டிஸ்கி: எனது முந்தைய பதிவுக்கு பலரும் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. நேரம் கிடைக்காததால் பதில் அளிக்க முடியவில்லை. அனைவருக்கும் எனது நன்றிகள்.

Wednesday, November 3, 2010

ஹார்டுவேர் ஆறுமுகம்












ஓல்டு மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு கால் செண்டரில் ஹார்டுவேர் எஞ்சினியருக்கான ஒரு இண்டர்வியு நடக்குது அதுல்ல நம்ம ஆளு பூவை ஆறுமுகத்திடம் கேட்ட கேள்விகளும் பதிலும்தான் இந்த பதிவு. இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.

பாஸ்: வெல்கம், பிளிஸ் பி சீட்டட்.

ஆறுமுகம்: இல்லிங்க சார், பரவாயில்லை, என்று தயங்கி நிற்க.

பாஸ்: நோ பிராபளம்,சிட் டவுன்,

ஆறுமுகம் தயங்கிய படி சீட்டின் நுனியில் அமர்கின்றார்.

பாஸ்: உங்களுக்கு கம்புயுட்டர் பத்தி தெரியுமா?

ஆறுமுகம்: ஒரளவுக்கு தெரியும் சார்,

பாஸ்: ஓகே, நோ பிராபளம், இந்த வார்ம் 32 வைரஸ் பத்தி சொல்லுங்க, எனி சொலுன்சன்ஸ் பார் இட்?

ஆறுமுகம்: அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க, நம்ம மாட்டாஸ்ப்பத்திரி டாக்டர் கிட்ட போனா பெரிய ஊசிய்யா போடுவாரு,

பாஸ்: வாட்? வாட் டு உ மீன்?

ஆறுமுகம்(பயந்து போய்): சார், இஞ்சக்ஸ்சன், பிக் அண்ட் குட் பார் இட்

பாஸ்: அப்படி ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர், ஜ நாட் ஹியர்டு, ஓகே. டு யு நோ அபௌட் புராசஸ் அண்ட் சிப்ஸ்.

ஆறுமுகம்: எனக்கு சிப்ஸ் திங்க தெரியும் ஆனா புராசஸ் எல்லாம் தெரியாது.

பாஸ்: யூ சில்லி, ஓகே, பண்டமெண்டல் நாலேஜ் இருக்கான்னு பார்க்கலாம். வாட் டு யூ டு ஃபார் பிரேக் தி பயர் வால்?

ஆறுமுகம்: பூ இது என்ன பிரமாதம், ஒரு பக்கெட் தண்ணிய ஊத்தினா சுளுவா பிரேக் பண்ணீரலாம்.

பாஸ்: (அதிர்ச்சியாய்) வாட்ட்ட்?

ஆறுமுகம்: கொஞ்சம் பயந்து, அவருக்கு புரியவில்லை என்று நினைத்து, சார் இட் மீன் வாட்டர் புல்லிங்க் ஆன் ப்யர்.
ஆறுமுகம் பயத்துடன் சொன்னது அவருக்கு வார்த்தர் புல்லிங்க என்று கேட்க.

பாஸ்: வார்த்தர் புல்லிங், இட்ஸ் நியூ கான்செப்ட், பட் ஜ யாம் நாட் ஹீயர்டு.ஓகே டு யு நோ அபௌட் ராம், ஹை மெமரிக்கு ஹௌ மெனி சிலாட்ஸ் யூ நீட்? இரண்டா இல்லை மூணா?

ஆறுமுகம்: இந்த இராம் சொன்னாலே, பிரச்சனைதான் சார், ரெண்டா போடு, மூணா போடுன்னு கலாட்டா பண்ணுவாங்க, பேசாம லஷ்மண்னு எதுன்னா புதுசா போடலாம், அதுல்லாதான் பிரச்சனை வராது.

பாஸ்: வாட்? லஷ்மண் சிலாட்டா? ஒகே யு லுக்கிங் இன்னவேட்டிவ், பட் யுவர் நொலொட்ஜ் இஸ் வெரி புவர்.வாட் அபௌட் டிரபுள் சூட்டிங்க.

(கொஞ்சம் பயத்துத்துடன் இருக்கும் ஆறுமுகத்துக்கு அது டபுள் சூட்டிங்க் என்று கேக்கிறது. உடனே சுறுப்பாய் பதில் சொல்றார்.)

ஆறுமுகம்: டபுள் சூட்டிங்க என்னா சார், நம்ம விஜய்ய விட்டா டிரிபிள் சூட்டிங் ஃபைவ் சூட்டிங்க் எல்லா பண்ணுவார், குருவி படத்துல்ல ஆறு குண்டு இருக்க பிஸ்டலை வைச்சு, பதினைந்து பேரை சுடுவார். அதுலையும் நம்ம சூப்பர் ஸடார் இருக்காரே, அவரு ஆள்காட்டி விரல்லையே நூறு பேரை சுட்டுப் போடுவார்.

பாஸ்: வாட் நான்சென்ஸ், கொஞ்சம் கூட அடிப்படை நாலேஜ் கூட இல்லையே, நான் கம்பூட்டர் பத்திக் கேட்டா நீங்க சினிமா பத்திப் பேசறீங்க, ஹௌ யூ கேம் ஃபார் திஸ் இண்டெர்வியு,

ஆறுமுகம் : (பயந்து போய்) என்னது இண்டெர்வியு வா?

பாஸ்: (கோபாமாய்)வாட் யூ ஆஸ்கிங்க, தென் வை சுட் யூ கம் ஹியர்?.இங்க எதுக்கு வந்தாய்?

ஆறுமுகம்: சார் நான் பூக்கார ஆறுமுகம், அதுன்னாலாதான் என்னை எல்லாரும் பூவை ஆறுமுகம்ன்னு கூப்பிடுவாங்க. இங்க இரண்டு மாசமா பூ கொடுத்த காசு வாங்க வந்தேன், முன்னால இருக்கற செவத்த பொம்பளதான் காரிடாரில் இருக்கும் இந்த ரூமுக்குள்ள போகச் சொன்னாங்க.

பாஸ்: ஓ சிட், சாரி ஜெண்டில்மேன் அது பக்கத்துல்ல இருக்க அக்கவுண்ட்ஸ் ரூம். அங்க போங்க.

ஆறுமுகம்: இதை மொதல்லையே சொல்லியிருந்தா எப்பவே காசு வாங்கிட்டு போயிருப்பேன், பொழப்பு கொட்டுப் போச்சு.
(என்றபடி மனதுக்குள்ள சொன்னான், ஜீன்ஸ் போண்ட்டும், டீசர்ட்டும் போட்டுக்கிட்டு சாப்ட்வேர் கம்பெனிக்குள்ள போனா பிகர் படியும் சொன்னதை கேட்டு இத்த மாட்டிக்கிட்டு வந்தது தப்பாப் போச்சு, ஜடிய்யா கொடுத்த சுதாகரு மட்டும் இப்ப கையில்ல மாட்டுன்னான்னு வையி, மகனே துவைச்சு எடுக்க மாட்டேன் என்று புலம்பியபடி வர்றாறு.)

ஆறுமுகம் வெளியில் போனதும், பாஸ் மனதுக்குள் சொல்லிக் கொண்டார், இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல்லை, காலங்கார்த்தால இப்படியா என்று தலையில் அடித்துக் கொண்டார். ( இந்த பதிவை படித்து விட்டு நீங்கள் அடித்துக் கொள்வதைப் போல)

டிஸ்கி:அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள், எல்லாரும் நல்லா கொண்டாடி மகிழ வாழ்த்துகின்றேன். அடுத்த தடவை பதிவு படிக்க வரும் போது கண்டிப்பா ஸ்வீட் கொண்டு வரவேண்டும், இல்லைன்னா இது மாதிரி இன்னேரு பதிவு போட்டுருவேன். ஞாபகம் வைச்சுக்கேங்க.
அனைவருக்கும் எனது உள்ளங் கனிந்த தீபத் திருனாள் வாழ்த்துக்கள்.

முஸ்கி : அல்லாருக்கும் ஒரு முக்கிய ஆறிவிப்பு: தீபாவளித் திருனாள் ஸ்பெசல்லா நம்ம பதிவர்கள் எல்லாரும் அவங்க வூட்டுக்கு கூப்பிட்டு உள்ளார்கள், அட பண்டிக்கைக்கு இல்லிங்க, அவங்க வீட்டில் பலகாரம் பண்ண உதவ சொல்லி இருக்காங்க, நம்ம பதிவர்கள் வீட்டு சமையல் அறை போல ஒரு பதிவர்கள் வீட்டு பலகாரப் பதிவு அடுத்த வாரத்தில் வரும் என்று, தீவாளி போனாஸா சொல்லிக்கிறேன்.