Tuesday, November 30, 2010

முற்றாக் காமம் என்னும் என் கவிதையின் விளக்கம்



கடவுளைக் காதலிப்பது ஒரு வகை ஆன்மிகக் காமம், திருமங்கை ஆழ்வார் கண்ணனைக் காதலியாகக் கொண்டு பல பாசுரங்களைப் பாடியுள்ளார். பாரதியார் கண்ணனை கண்ணம்மாவாக பாடியுள்ளார். கண்ணதாசனும் கண்ணனனை காதலியாக படியுள்ளார். நான் கண்ணனனை காதலனாக, ஒரு குண்டலினி யோக சாதகனின் நிலையில் எழுதியுள்ளேன். முதலில் தலைப்பு முற்றாக் காமம் பற்றிப் பார்ப்போம்.

மானிடக் கலவியில் எல்லாமும் முற்றும் பெறும் காமம் தான். ஒரு முறை கிளர்ச்சி அடைந்தவுடன் அவன் காமம் முற்றும் பெறுகின்றது. பின்னர் மீண்டும் கிளர்ந்து விடும். இதுக்கு குறிப்பிட்ட கால வரையறை இருக்கும். ஆனால் பேரின்பம் என்னும் யோக சமாதி நிலை ஒரு முற்றாத தெவிட்டாத நிலை. இதுதான் முற்றாத அல்லது முடிவுறா காமம் ஆகும். ஆக இதுதான் தலைப்பு.

முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக

வண்ணம் ஆடையது குழயக்

இது நித்திய யோகத்தில் அமர்ந்து இருக்கும் சாதகனின் நிலை ஆகும். தஞ்சை மன்னர் அபிராமியின் கோவிலுக்கு வரும் போது சுப்பிரமனியன் என்னும் அபிராம பட்டர் அமர்ந்து இருந்த நிலை. வாயில் சலம் ஒழுக, வேட்டி கலைந்தது கூடத் தெரியாமல் பித்தன் போல, பிரம்மம் என்னும் பிரகாச ஒளியை, அவர் தசிக்கும் போது, மன்ன்ர் திதி கேட்டதால் அந்த ஒளியை நிலவு என்று கொண்டு பொளர்னமி என்று கூறினார், ஆனால் அன்று அம்மாவாசை.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

தொடந்து சாதகம் செய்யும் யோகனின் உடல் நெருப்பு போல உஷ்ணம் கொதிக்கும், ஆதலால் மார்கழி குளிரும் தெரியா வண்ணம் ஆடையற்றுக் கிடப்பான், நடு இரவில் குடம் குடமாய் தண்ணி கொட்டுவான். தன் சூட்டை அடக்க முடியாமல் தவிக்கும் சாதகனின் நிலை இதுதான். தக்க குருவின் வழிகாட்டுதல் இருந்தால் தான், சாதகன் தன் நிலையில் இருந்து வெளி வர முடியும். இல்லை என்றால் சாதகன் பைத்தியம் ஆகிவிடுவான். உடல் உஷ்ணம் பொறுக்க முடியாமல் பலமுறை அபிராம பட்டர் இரவுகளில் பலமுறை காவிரியில் குளித்து உள்ளார். எனது இந்த நிலையில் இருந்து வெளிவர நீ வேண்டும் என்று முழு இரவும் காத்துக் கிடந்தேன்.
கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

சித்தம் குளிர -- சித் தம் அதாவது எண்ணம், மனம், உடல் இச்சைகள், சுருக்கமாக சொன்னால் எண்ண அலைகள். சத்தத்தில் கலவி புரிந்து என்பது -- சத் ஆன்மா, ஆன்மாவில் கலவி புரிந்து, அதாவது சத்- சித் கலவி என்பது ஆனந்தம், சத் சித் ஆனந்தம். சத்சித்தானந்தம் என்னும் பரவச நிலையைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஆர்கஸம் என்னும் உச்சம் மட்டும் தான் கிட்டும், அதுவும் எல்லாக் கலவியிலும் கிட்டாது. ஆக உச்சத்தில் மோன நிலை என்பது உச்சத்தைக் காட்டிலும் மேன்மையான சாந்த நிலை, அல்லது பரிபூர்ண இறை நிலையைக் குறிப்பது, இந்த நிலை தொடர்ந்து இருக்க கடவுளை வேண்டுவது.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.


எந்த நிலையில் சாதகன் இருந்தாலும், அந்த நிலையில் அப்படியே சாதகன் பிரமத்தில் நிலைத்து இருப்பது. சுவாமி விவேகானந்தர், இரமணர் போன்றேர் பல நாட்கள் குகைகளில் இப்படி இருந்துள்ளனர். தன் மீது கொசுக்கள் ஒரு போர்வை போல கடிக்கும் நிலையில் கூட விவேகானந்தர் பல நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். எறும்புகள் கடிப்பது கூட தெரியாமல் இரமணர் இருந்துள்ளார். இவர்களின் உச்ச நிலை யோகத்தில் பினைந்து இருக்கும் நிலையை விளக்கியுள்ளேன்.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,


குதம்பை சித்தரின் பாடலில் ஞானப்பால் எனக்கிருக்க மாங்காய் பாலும் தேங்காய்ப் பாலும் எனக்கு எதுக்கடி என்னும் பாடலைத்தான் நான் தெவிட்டாத ஞானப்பால் வேண்டும் என்றும் மாங்காயும் , தேங்காயும் புளித்து(சலித்து) விட்டது என்று குறிப்பிட்டேன். பரமாத்மாவின் லீலைகளில் இருக்கும் ஜீவாத்மாக்களான கோபியர்களின் நிலையில் இருந்து, கண்ணனின் வாயமுதம் என்னும் கீதையை பருகியதால் மற்ற விஷயங்கள் புளித்து விட்டது என்னும் பொருள்.
கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

கண்ணா என்னை ஆள்பவனே என்னை கைவிடாது நித்திய சுகமான உன் அனுக்கிரகத்தில் என்னை ஆழ்த்தி என் பிரம்மம் என்னும் யோகத்தை முடித்தி என்னை இறை நிலை கொண்டு செல்ல வரமாட்டாயா.
இதுதாங்க நான் எழுதிய கவிதையின் பொருள். பக்தி யோகமும், சாங்கிய யோகமான குண்டலினியும் ஒரு மிக்ஸிங் போட்டுள்ளேன்.இப்ப மறுபடியும் கவிதையைப் படித்தால் புரியும்.

இந்த பாடலை சரியாக இறைப் பிரேமம் என்று கணித்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

நன்றி.

8 comments:

  1. இந்த பாடலை சரியாக இறைப் பிரேமம் என்று கணித்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

    .... Super!

    ReplyDelete
  2. கடந்த பதிவை படிக்கும்போது எதுவுமே எனது புத்திக்கு எட்டவில்லை... இப்போது அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மிக அருமை பித்தன்.. பித்தா பிறை சூடி பெருமானே என்ற பாடல் ஞாபகம் வருகிறது..

    ReplyDelete
  4. ஆறுதலாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது.
    எத்தனை அருமையான விளக்கம்.நன்றி சுதானந்தருக்கு !

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்... பகிர்வுக்கு நன்றி :-))

    ReplyDelete
  6. வணக்கம்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.